Wednesday, September 15, 2010

மிகவும் காஸ்ட்லியான கிரகம் !!!!

நியூயார்க் : பூமியில் வைரக் கற்கள் பெரும் விலைக்கு விற்க்கப்படும் ஒரு பொருள். சிறிய குண்டூசியளவு வைரக் கல் கூட பல லட்சம் விலை பெறுமதியானது. அத்தோடு இதுவரை காலமும் உலகில் தோண்டி எடுக்கப்பட்ட வைரக் கற்களில் மிகப்பெரியது என்று கருதப்படுவது கோகினூர் வைரம் என்றழைக்கப்படும். அதன் அளவு ஒரு தேசிக்காயின் அளவை ஒத்தது. அது பல மில்லியன் டாலர் பெறுமதி, ஆனால் அண்டவெளியில் உள்ள ஒரு கிரகம் வைரத்தால் ஆனது என தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 4,000 கிலோ மீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட இக் கிரகம் முழுக்க முழுக்க வைரக் கல் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாதாரணமாக காபன் என்னும் மூலப்பொருள் இறுக்கமடைந்து பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் வைரக் கல்லாக மாறுகிறது. தங்கத்தை காரட் கொண்டு, 24 காரட் அல்லது 18 அல்லது 9 காரட் என்பது போல வைரத்தை அதன் அடர்த்தியை வைத்தே மதிப்பிடுவார்கள். சுமாரான வைரக் கற்கள், 0.05 காரட் ஆக இருக்கும். 1 காரட் வைரக் கற்கள் மிகுந்த விலையானவை. அதிலும் 2 காரட் என்றால் அதி உச்ச விலை மதிப்பானவை. ஆனால் அண்ட வெளியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வைர கிரகத்தில் உள்ள வைரத்தின் அடர்த்தி என்ன என்றுகேட்டால் பூமியில் உள்ளவர்கள் தலைசுற்றி விழுவது நிச்சயம். அந்த வைரத்தின் அடர்த்தி சுமார் 1 மில்லியன் காரட் ஆகும். அக் கிரகத்தில் இருந்து எடுக்கப்படும் ஒரு சிறு அணுத்துகள் கூட பூமியில் பல மில்லியன் பெறுமதியாக இருக்கும். ஒரு காலத்தில் நமது சூரியக் குடும்பத்தில் உள்ள சூரியனைப்போல ஒளிர்விட்டு எரிந்த இச் சிறுகிரகம், தற்போது அணைந்து, மிகவும் குளிர்ந்து இறுகி வைரக் கட்டியாக மாறியுள்ளதாம். அது பூமியில் இருந்து 50 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கிறது. அக்கிரகத்திற்கு எந்த நாடு முதலில் தனது ராக்கெட்டை அனுப்பப்போகிறதோ தெரியவில்லை. அப்படி ஒரு நாடு அனுப்பினால் அந்நாடே உலகில் செல்வம் மிக்க நாடாகத் திகழும்.

Thursday, September 9, 2010

Maanada Mayilada - Season 5

சைக்கிள் ஓட்டி பால் சப்ளை செய்கிறது நாய்!!!

தர்மபுரி: குட்டி சைக்கிளில் பால் கேனை ஏற்றி, ஓட்டிச் செல்லும் சிறுவர்களைப் பார்த்திருக்கிறோம். நம்ப மாட்டீர்கள்! சும்மா இல்லை... ஒரு கி.மீ., தூரம் சைக்கிளை ஓட்டி, பால் சப்ளை செய்கிறது ஒரு நாய்!

தர்மபுரியை அடுத்த பெரியாம்பட்டி கீழ் தும்பலஅள்ளியைச் சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (42). தெருவில் சுற்றிக் கொண்டிருந்த நாயை, பத்து மாதத்துக்கு முன் எடுத்து, வளர்க்கத் துவங்கினார். அதற்கு மணி என்றும் பெயர் வைத்தார். தங்கவேல் கால்நடைகள் வளர்த்து வருகிறார். தினம் காலை மற்றும் மாலையில் பாலை கறந்து, தும்பலஅள்ளியில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கு எடுத்து சென்று கொடுத்து வருவார். இவர் காலையும், மாலையும் பால் சொசைட்டிக்கு கிளம்பும் போது, மணியும் தொடர்ந்து கூடவே சென்று வரும். ஒரு நாள், மணி மூலம் பால் கொடுக்க முடிவு செய்தார். ஒரு தூக்கில் பால் ஊற்றி, நாயிடம் கொடுத்தார். அதுவும், வாயில் கவ்வியபடி பாலை எடுத்துச் சென்று, சரியான நபரிடம் கொடுத்துத் திரும்பியது.

இதையடுத்து, 1,500 ரூபாய் செலவில், பால் கேன்களை ஏற்றிச் செல்லும் வகையில் சிறிய சைக்கிளை உருவாக்கிய தங்கவேல், மாடுகளை பூட்டுவது போல் நாயைப் பூட்டி, அதில் 35 லிட்டர் பால் கேனையும், கூட்டுறவு சங்க பதிவேடு புத்தகத்தையும் அனுப்பி வைத்தார். தனியாக ரோட்டில் செல்லும் நாய், பால் சொசைட்டியில் நின்று பால் கேனை ஊழியர்கள் பெற்று பதிவேட்டில் பதிவு செய்த பின், மீண்டும் காலி கேனுடன் வீட்டுக்குத் திரும்பி வருகிறது. சில நேரங்களில் தங்கவேலின் மகன் மற்றும் மகளையும் சைக்கிளில் சுமந்தபடி பயணம் செய்யும் மணியை, அந்த பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். ஒரு மாதமாக பால் கேனுடன் பயணம் செய்யும் நாய்க்கு, வீட்டுக்கு திரும்பியதும், வீட்டில் உள்ளவர்கள் ஆரத்தி எடுத்து, திருஷ்டி கழிப்பதையும் வாடிக்கையாக செய்து வருகின்றனர்.

இது குறித்து தங்கவேல் கூறியதாவது: தினம் நான் செல்லும் இடங்களுக்கு வந்த நாயை இப்படி பழக்கி விட்டேன். எனக்கு பெரும் உதவியாக மாறி விட்டது. வீட்டில் நாங்கள் சாப்பிடும் சாப்பாட்டை மட்டும் சாப்பிடும் மணி, நன்றிக்கு உதாரணம் என்பதை செயலில் செய்து காட்டுவது, எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது. இவ்வாறு தங்கவேல் கூறினார்.

மனதோடு மனோ - சின்மயி (Part-2)

Saturday, September 4, 2010

Kalaba Kadhalan Vedio Song....

kaala video Song....