Sunday, December 26, 2010

எளிதான தமிழில் J2EE (java)கற்க...

                                           
தொடர்ந்து கற்க வீடியோ கிளிப் முடிந்தவுடன் அடிபகுதில் கிடைக்கும் அடுத்தடுத்து கிளிப்புகளை கிளிக் செய்யவும்.
                                                     நன்றி - விக்னேஷ்.

Sunday, December 12, 2010

யுவன் ஷங்கர் ராஜாவின் - மியூசிக் நிகழ்ச்சி ( துபாய் ). plese off the Radio First.

கன்னத்தில் கன்னம் வைக்க - காதல் பாடல்

Saturday, November 27, 2010

இந்தியனுக்கு போதாத காலம்!!!

அனிதா பிரேம்சாயி, குரோம்பேட்டை, சென்னையிலிருந்து அனுப்பிய, "இ-மெயில்' கடிதம்: பொருளாதார மேதைகளின் பொலிவற்ற அரசியல் உலகத்தின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பார்லிமென்ட், வெற்றிகரமாக முடக்கப்பட்டுள்ளது. "ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு காரணம் உண்டு' என்பது அறிவார்ந்த பழமொழி. அந்த வகையில், இமாலய ஊழலுக்கு தீர்வு காண, பார்லிமென்ட் உறுப்பினர்களின் இச்செயல் நியாயமானதே! விஞ்ஞான பூர்வமாக நடைபெற்ற ஊழலுக்கு தீர்வு காண்பதில், ஆளுங்கட்சி ஏன் தயக்கம் காட்டுகிறது?"பணம் பாதாளம் வரை பாயும்' என்பது அந்தக் காலம். சிகரம் உயரத்திற்கு பாய்ந்து, பின்பு கடலைத் தாண்டியும் பாய்வது இந்த காலம். "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான், அன்றைய நிதியமைச்சர், "விவசாயிகளுக்கான கடன் தொகை 70 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி' என, பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தில் முழங்கினார். ஆனால், அந்த அறிவிப்பு, பெயரேடுகளில் உள்ள கணக்குகளை நேர் செய்வதற்கும், மக்களின் ஓட்டுகளை, "கவர்' செய்வதற்கும் என்று, பாமரனுக்கு தெரிய வாய்ப்பு இல்லையே. தள்ளுபடிக்கு பிறகு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி சதவீதம் பற்றி, குப்பனும், சுப்பனும் அறியவில்லையே. நடுத்தர மக்களும் திண்டாடினரே அன்றி, காரணத்தை அறியவில்லையே. தற்காலிகமாக, 40 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்தில் விடப்பட்டு சமாளிக்கப்பட்டது. இந்த மேஜிக் வேலையெல்லாம், எந்த பாமரனுக்கும் தெரியாது என்ற தைரியம் தான், அரசியல்வாதிகளை மேலும், மேலும் தவறுகளை செய்ய தூண்டுகிறது. நாளையே பார்லிமென்ட் கூட்டுக்குழுவை கூட்ட, ஆளும்கட்சி முற்படுமேயானால், கடந்த சில நாட்களாக, பார்லிமென்ட் நடவடிக்கைகளை ஸ்தம்பிக்க வைத்தமைக்கு முழு பொறுப்பையும் தனதாக ஏற்றுக் கொள்ளுமா அரசு? இந்த நாட்களின் வெட்டிச் செலவுகளையும், ஆளும் கட்சியே ஏற்றுக் கொள்ளுமா? இந்தியனுக்கு போதாத காலம்.

"ஹீரோ' அப்பாவியா? வ.ப.நாராயணன், மடிப்பாக்கம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, ஸ்பெக்ட்ரம் முறைகேடால், தொடர்ந்து சில நாட்களாக பார்லிமென்ட் முடங்கியது, இதுவே முதல்முறை எனலாம். இதுவரை, பங்குச் சந்தை, போபர்ஸ் பீரங்கி ஊழல், ஹவாலா ஊழல் போன்றவைகளைத் தான், பெரிய அளவிலான ஊழல் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். அந்த நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது ஸ்பெக்ட்ரம் ஊழல். ஊழல் வரிசையில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை செய்துவிட்டார் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா. மேலும், ஊழல்வாதிகளான ஹர்ஷத் மேத்தா, சத்யம் ராஜு, அசோக் சவான் ஆகியோரை தூக்கிச் சாப்பிட்டு விட்டார். காரணம், இந்திய அளவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் ஒரே நாளில், தன் புகழைப் பரப்பி, "ஸ்பெக்ட்ரம் ஹீரோ' என்ற பட்டப் பெயரையும் பெற்று விட்டார் ராஜா. இன்று, "டாக் ஆப் தி வேர்ல்ட்' இவர் தான். இந்தியாவின் பெருமையையும், புகழையும், அனைத்து நாடுகளுக்கும் எடுத்துச் சொல்லி, உலக நாடுகளின் நட்பையும், நல்லுறவையும் பெறுவதற்காக, உலகச் சுற்றுப் பயணம் செய்து, பல நாட்டுத் தலைவர்களை சந்தித்து வருகிறார் பிரதமர். அவருக்கே களங்கத்தை ஏற்படுத்தி, ஆடிப் போகச் செய்துவிட்டார் இவர். வரலாறு காணாத எதிர்க்கட்சிகள் அமளியால், திகைத்துப் போயுள்ளார் பிரதமர். மேலும், எந்த பிரதமரும் எதிர்கொள்ளாத சுப்ரீம் கோர்ட்டின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார். ஆனால், ராஜாவோ, தான் ஒரு அப்பாவி என்று சொல்லிக் கொள்கிறார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தன் பதவிக் காலம் முடிந்ததும், ஒரு லாரி நிறைய ஏற்றக்கூடிய பரிசுப் பொருட்களை அப்படியே விட்டு விட்டு, தான் கொண்டு வந்த உடைமைகளோடு மட்டுமே ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறினார். இதுபோன்ற தன்னலமற்ற தியாகச் சீலர்களால், இந்தியாவின் மதிப்பும், கவுரவமும் பன்மடங்கு உயர்ந்தது. இவர்களுக்கு மத்தியில், பதவி சுகம் ஒன்றே பெரிதாக நினைக்கும், காமன்வெல்த், ஆதர்ஷ், ஸ்பெக்ட்ரம் போன்ற ஒன்றையொன்று மிஞ்சக்கூடிய மெகா ஊழல்களைச் செய்து, இந்தியாவுக்கு களங்கம் ஏற்படுத்தும் ஊழல் அரசியல்வாதிகளை பதவி நீக்கம் செய்ததுடன், கடமை முடிந்தது என்று எண்ணாமல், தயவு தாட்சண்யமின்றி, அவர்களுக்கு கடுமையான தண்டனை தருவதற்கு ஏதுவாக, சட்டத்தின் பிடியை இறுக்க வேண்டும். இதுவே மக்களின் எதிர்பார்ப்பு.

காங்கிரசுக்கு கவனம் தேவை! சியாமளா ரங்கநாதன், மதுரவாயில், சென்னையிலிருந்து எழுதுகிறார்: கடந்த சில நாட்களாக, பார்லிமென்ட நடவடிக்கைகளை முடக்கிப் போட்டு, நாட்டையே உலுக்கிக் கொண்டிருந்த ராஜா விவகாரம், ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. தீவிரமாக ராஜாவை ஆதரித்து வந்த தி.மு.க., வேறு வழியின்றி, அவரை ராஜினாமா செய்ய வைத்துள்ளது. இலவசங்களால் தமிழகத்தை இருளில் மூழ்கச் செய்து கொண்டிருக்கும் தி.மு.க.,வின் அரசியல் நிகழ்வுக்கு, இது தலை குனிவுதான். கடந்த 2009ம் ஆண்டிலேயே, எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும், ராஜாவை, அவர் ஊழல் செய்த துறையிலேயே மீண்டும் அமர்த்தியதை எதிர்த்தன. ஆனால், தி.மு.க.,வின் சாணக்கியத்தனமும், சாமர்த்தியமும், வேறு யாராவது அந்த துறைக்கு போடப்பட்டால், செய்த ஊழல் அம்பலமாகிவிடும் என்பதால், கூட்டணி பயத்தை ஏற்படுத்தி, மீண்டும் அதே துறையை வாங்கியது. ஆனால், உண்மை என்றுமே உறங்கிவிடாது. இத்தனை நாளாக மவுனம் காத்த காங்கிரஸ் தலைமை, இப்போது இறங்கி வந்திருப்பது, நாட்டில் உள்ள நடுநிலையாளர்களுக்கு நற்செய்தியாக உள்ளது. இனிமேல் தான், காங்கிரஸ் கவனமாக இருக்க வேண்டும். இது, ராஜா என்ற தனி மனிதன் செய்த தவறல்ல; தி.மு.க., செய்த தவறு. ராஜாவுக்கு பதில், வேறு தி.மு.க., நபரை, மறுபடியும் அந்த அமைச்சர் பதவியில் அமர்த்துவது ஆபத்து. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் துணை போவது, தமிழகத்தை பொறுத்தவரை, அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். காங்கிரஸ் கவனமுடன் செயல்பட வேண்டிய நேரமிது.
                                                                 நன்றி - தினமலர்.

Friday, November 26, 2010

மகாபாரதம் தமிழில் வீடியோ!!!

Wednesday, November 17, 2010

ஜப்பானின் நடிக்கும் ரோபோ ஜெமினொயிட் எப்!!!



உலகில் மிகவேகமாக வளர்ந்துவரும் துறையாக ரோபோடிக்துறை விளங்குகின்றது.


இந்நிலையில் ' ஜெமினொயிட் எப் ' (Geminoid F) என பெயரிடப்பட்டுள்ள நடிக்கும் திறன் கொண்ட ரோபோவினை ஜப்பானியர்கள் உருவாக்கியுள்ளனர்.

இதனை உருவாக்கியவர் 'ஹிரோசி இசிகுரோ' என்ற ஒசாகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரபல ஜப்பானிய ரோபோ வடிவமைப்பாளர் ஆவார்.

பொதுவாக இவரது அண்ரோயிட் ரோபோக்கள் 1.2 மில்லியன் அமெரிக்கடொலர்கள் விலைகொண்டவை.

இந்த ரோபோவானது, அண்மையில் மேடையேற்றப்பட்ட ஒரு நாடகத்தில் பாத்திரமொன்றினை ஏற்று நடித்திருந்தது.

இதன் அசைவுகள் மற்றும் உணர்வுகளை நாடக மேடைக்குப் பின்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அறையில் நடிகை ஒருவர் வெளிப்படுத்தினார்.

இப்பாவனைகள் கெமராவின் உதவியோடு ரோபோவினால் இணங்காணப்பட்டதுடன் ரோபோ அதற்கேற்றவாறு நடித்திருந்தது.

இதன் குரலுக்காக மைக்ரோபோன் உபயோகப்படுத்தப்பட்டிருந்தது.

இதன் நடிப்புத்திறனை நீங்களும் கண்டு களியுங்களேன்.

புகை பிடிக்கும் ஐஸ்வர்யா ராய் !!!



நடிகை ஐஸ்வர்யா ராய் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ள குசாரிஷ் திரைப்படத்திற்கு மகளிர் நல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


குசாரிஷ் படத்தில் மேஜிக் கலைஞரின் வாழ்வு காதல் மற்றும் சோகம் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கிருத்திக் ரோஷன் கதாநாயகனாவும், ஐஸ்வர்யா ராய் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. குசாரிஷ் திரைப்படத்தின் ஒரு காட்சியில் கிருத்திக் உடன் இணைந்து ஐஸ்வர்யாவும் புகைப் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்திய மகளிர் மத்தியில் ஏற்கனவே புகைப் பிடிக்கும் மோகம் அதிகரித்துள்ள நிலையில், குசாரிஷ் படத்தில் வரும் காட்சிகளையடுத்து, புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும் என மகளிர் நல அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

இதுகுறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராய், புகைக்கும் காட்சிகளை படத்தில் இருந்து நீக்குவது எனது கையில் இல்லை. புகை பிடிப்பது போன்ற காட்சி நீக்கப்படுமா என்பது எனக்கு தெரியாது. சித்தார்த் கபூர் ராய் தான் இதற்கு பதில் அளிப்பது பொருத்தமாக இருக்கும்.

எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இல்லை. படப்பிடிப்புக்காக நான் அதுபோன்று செய்ய வேண்டியிருந்தது. அது ஒரு மோசமான தருணம். புகை பிடிக்க தொடங்கியதும் நான் இருமத் தொடங்கி விட்டேன். அதன்பிறகு புகைப் பிடிப்பவர்களிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது என்று கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

Saturday, November 13, 2010

அம்மாவுக்கு சமர்ப்பணம்... ( pls... when you play video, stop the Radio first.)

Monday, November 8, 2010

இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களை வேகமாக தரவிறக்க...

நாம் இணையத்தில் பல எண்ணற்ற வீடியோக்களை காண்கிறோம். நமக்கு பிடித்த பாடல்கள், படங்கள், நகைச்சுவை மற்றும் தொழில்நுட்பம் இப்படி ஏராளமான வீடியோக்களை நாம் இனையத்தில் பார்த்து ரசிக்கிறோம்.

இந்த வீடியோக்களை பார்க்கவே இணையத்தில் பல தளங்கள் இருந்தாலும் Youtube, Daily motion, Meta cafe போன்ற தளங்கள் பிரபலமானவை.

ஒருசில வீடியோக்களை நாம் பார்க்கும் போது நாம் அதை நம் கணினியில் சேமித்து கொள்ளலாம் என்று தோன்றும். ஆனால் இந்த தளங்களில் நாம் வீடியோவை பார்க்க மட்டுமே முடியும் தரவிறக்க முடியாது. இதை போக்கவே ஒரு சூப்பர் மென்பொருள் உள்ளது.

பயன்கள்:

உபயோகிப்பதற்கு மிகவும் சுலபமானது.

இது முழுக்க முழுக்க இலவச மென்பொருள்.

நமக்கு தேவையான வீடியோவின் url கொடுத்து START பட்டனை அழுத்தினால் போதும் அந்த வீடியோ நம் கணினியில் சேமிக்க பட்டு விடும்.

வீடியோ டவுன்லோட் திறன் மிகவும் வேகமாக உள்ளது.

வீடியோவை தரவிறக்கும் போதே நமக்கு தேவையான பார்மட்டில் மாற்றும் வசதி(AVI,MP4,WMV)

வீடியோவில் உள்ள பாடலை மட்டும் தனியே பிரித்தெடுக்கும் வசதி.

இப்படி ஏராளமான வசதிகளை பெற்று உள்ள இந்த மென்பொருளின் அளவு 7.19 MB மட்டும் தான்.

பயன் படுத்தும் முறை:

இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் உங்களுக்கு வரும் EXE பைலை இரண்டு முறை க்ளிக் செய்து உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.

இப்பொழுது டெஸ்க்டாப்பில் உள்ள சார்ட்கட் பைலை ஓபன் செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.


இங்கு நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோவின் URL காப்பி செய்து அங்கு கொடுக்க பட்டிருக்கும் URL என்ற இடத்தில் பேஸ்ட் செய்யவும்.

அடுத்த கட்டத்தில் SAVE TO என்ற இடத்தில் உங்கள் வீடியோ சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்யவும்.

அடுத்து OUTPUT என்ற இடத்தில் நீங்கள் இந்த வீடியோவின் வகையை(FORMAT) தேர்வு செய்து கொள்ளவும். மாற்றவேண்டாம் என்றால் WITH OUT CONVERSION என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.

அடுத்து கீழே உள்ள START என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் உங்கள் வீடியோ நீங்கள் தேர்வு செய்த இடத்தில் வந்திருக்கும். உங்களுக்கு கீழே இருப்பதை போல செய்தி வரும்.

அவ்வளவு தான் இந்த முறையை பயன்படுத்தி இணையத்தில் உள்ள வீடியோக்களை எளிதாக தரவிறக்கி கொண்டு நினைத்த நேரத்தில் பார்த்து ரசித்து கொள்ளலாம்.

தரவிறக்க சுட்டி

Sunday, October 24, 2010

ஞாபகமறதிப் பிரச்சினையா?

படிக்கும் மாணவ, மாணவிகளில் பலரும் ஞாபகமறதிப் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். விழுந்து விழுந்து படித்தும், தேர்வில் எல்லாம் மறந்துபோய்விடுகிறதே என்று வேதனைப்படுகிறார்கள்.

ஞாபகமறதிப் பிரச்சினையிலிருந்து விடுபட, மாணவர்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றிப் பார்க்கலாம்…

* இரவில் பாடம் படித்தபின், வேறு எந்த வேலையையும் செய்யாமல் தூங்கச் சென்றுவிடுங்கள்.

* மறுநாள் காலை எழுந்து, இரவில் படித்தவற்றை ஞாபகப்படுத்திப் பாருங்கள். வேறு எந்த வேலையிலும் உங்களை ஈடுபடுத்திவிடாதீர்கள். காரணம் அந்த வேலை பற்றிய நினைவுகள் ஏற்கனவே நீங்கள் படித்தவற்றை மறக்கடிக்கும் வாய்ப்புள்ளது.

* கணக்குப் பாடங்களைப் பார்க்கப் போகிறீர்களா? அதற்கு முன் மூளைக்கு அதிக வேலை கொடுக்கின்ற செயலில் ஈடுபடாமல் மனதைக் கொஞ்சம் ஓய்வாக வைத்திருந்துவிட்டு பிறகு படிக்கச் செல்லுங்கள்.

* இரவில் நெடுநேரம் கண்விழித்துப் படிப்பது என்று இல்லாமல், போதுமான அளவு உறங்குவது ஞாபகசக்தியைப் பாதிக்காமல் இருக்கும்.

* ஒரு சிக்கலான பாடத்தைப் படிக்கிறீர்கள். அது மூளையில் பதியவில்லை. அதே ஞாபகமாகத் தூங்கச் செல்கிறீர்கள். தூங்கும்முன் அந்தப் பாடத்தை மனத்திரையில் கொஞ்சம் ஓடவிடுங்கள். காலையில் அந்தப் பாடம் மனதில் ஏறக்குறைய முக்கால்வாசி பதிந்திருப்பதை உணர முடியும். மீதி கால் பாகத்தை மீண்டும் ஒருமுறை வாசிப்பதன் மூலம் படித்து முடித்துவிடலாம். இது மனோவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கும் உண்மை.

* பொதுவாக காலையில் மனம் தூய்மை, புத்துணர்வோடு இருக்கும். கடினமான பாடங்களை அந்த வேளையில் படித்தால் எளிதில் மனதில் பதியும்.

* ஒரு கேள்விக்கான பதிலைப் போல மற்றொரு கேள்வியின் பதில் இருந்தால், அதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேபோல அக்கேள்விகளின் விடைகள் நேர் எதிர்மறையாக இருந்தாலும் அந்த இரண்டையும் தொடர்புக்குள்ளாக்கி நம்மால் நினைவுக்குக் கொண்டுவர முடியும். நமக்குப் புரிகிற மாதிரியான தொடர்புமுறையை ஏற்படுத்திக்கொண்டால் போதும்.

* முறையான மறுபார்வை (ரிவிஷன்), நல்ல நினைவாற்றலையும், கற்றலை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரும் ஆற்றலையும் நிச்சயம் தரும்.

* நாம் உண்ணும் உணவுக்கும், ஞாபகசக்திக்கும் தொடர்பு உண்டு. புரதம் அதிகம் கிடைக்கும் கீரை, காய், கிழங்கு போன்றவற்றை அதிகம் உண்டால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். வல்லாரைக் கீரை, நினைவாற்றலைக் கூட்டும்.

* படமாகக் கண்ணால் காண்பதை நாம் அதிகம் மறப்பதில்லை. எனவே பாடம் தொடர்பான படங்களை அடிக்கடி புரட்டிப் பார்க்க வேண்டும். வரைந்து பார்க்க வேண்டும்.

* பெரிய பாடப் பகுதிகளுக்கு, அவை தொடர்பான சிறுசிறு குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்வதும், அவற்றை அவ்வப்போது நினைவுபடுத்திக்கொள்வதும் பலனளிக்கும்.

* எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமான விஷயம், ஈடுபாடு. நாம் என்றோ பார்த்த ஒரு சினிமாவில் காட்சி, வசனத்தை அப்படியே மறக்காமல் கூறுகிறோம். ஆனால் நேற்றுப் படித்த பாடத்தை மறந்துவிடுகிறோம். அதற்குக் காரணம், ஆர்வம், ஈடுபாடுதான். படிப்பதை கடமையாக மேற்கொள்ளாமல், பிடித்தமான விஷயமாக மாற்றிக் கொண்டால் நிச்சயம் மறக்காது.

Wednesday, September 15, 2010

மிகவும் காஸ்ட்லியான கிரகம் !!!!

நியூயார்க் : பூமியில் வைரக் கற்கள் பெரும் விலைக்கு விற்க்கப்படும் ஒரு பொருள். சிறிய குண்டூசியளவு வைரக் கல் கூட பல லட்சம் விலை பெறுமதியானது. அத்தோடு இதுவரை காலமும் உலகில் தோண்டி எடுக்கப்பட்ட வைரக் கற்களில் மிகப்பெரியது என்று கருதப்படுவது கோகினூர் வைரம் என்றழைக்கப்படும். அதன் அளவு ஒரு தேசிக்காயின் அளவை ஒத்தது. அது பல மில்லியன் டாலர் பெறுமதி, ஆனால் அண்டவெளியில் உள்ள ஒரு கிரகம் வைரத்தால் ஆனது என தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 4,000 கிலோ மீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட இக் கிரகம் முழுக்க முழுக்க வைரக் கல் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாதாரணமாக காபன் என்னும் மூலப்பொருள் இறுக்கமடைந்து பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் வைரக் கல்லாக மாறுகிறது. தங்கத்தை காரட் கொண்டு, 24 காரட் அல்லது 18 அல்லது 9 காரட் என்பது போல வைரத்தை அதன் அடர்த்தியை வைத்தே மதிப்பிடுவார்கள். சுமாரான வைரக் கற்கள், 0.05 காரட் ஆக இருக்கும். 1 காரட் வைரக் கற்கள் மிகுந்த விலையானவை. அதிலும் 2 காரட் என்றால் அதி உச்ச விலை மதிப்பானவை. ஆனால் அண்ட வெளியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வைர கிரகத்தில் உள்ள வைரத்தின் அடர்த்தி என்ன என்றுகேட்டால் பூமியில் உள்ளவர்கள் தலைசுற்றி விழுவது நிச்சயம். அந்த வைரத்தின் அடர்த்தி சுமார் 1 மில்லியன் காரட் ஆகும். அக் கிரகத்தில் இருந்து எடுக்கப்படும் ஒரு சிறு அணுத்துகள் கூட பூமியில் பல மில்லியன் பெறுமதியாக இருக்கும். ஒரு காலத்தில் நமது சூரியக் குடும்பத்தில் உள்ள சூரியனைப்போல ஒளிர்விட்டு எரிந்த இச் சிறுகிரகம், தற்போது அணைந்து, மிகவும் குளிர்ந்து இறுகி வைரக் கட்டியாக மாறியுள்ளதாம். அது பூமியில் இருந்து 50 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கிறது. அக்கிரகத்திற்கு எந்த நாடு முதலில் தனது ராக்கெட்டை அனுப்பப்போகிறதோ தெரியவில்லை. அப்படி ஒரு நாடு அனுப்பினால் அந்நாடே உலகில் செல்வம் மிக்க நாடாகத் திகழும்.

Thursday, September 9, 2010

Maanada Mayilada - Season 5

சைக்கிள் ஓட்டி பால் சப்ளை செய்கிறது நாய்!!!

தர்மபுரி: குட்டி சைக்கிளில் பால் கேனை ஏற்றி, ஓட்டிச் செல்லும் சிறுவர்களைப் பார்த்திருக்கிறோம். நம்ப மாட்டீர்கள்! சும்மா இல்லை... ஒரு கி.மீ., தூரம் சைக்கிளை ஓட்டி, பால் சப்ளை செய்கிறது ஒரு நாய்!

தர்மபுரியை அடுத்த பெரியாம்பட்டி கீழ் தும்பலஅள்ளியைச் சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (42). தெருவில் சுற்றிக் கொண்டிருந்த நாயை, பத்து மாதத்துக்கு முன் எடுத்து, வளர்க்கத் துவங்கினார். அதற்கு மணி என்றும் பெயர் வைத்தார். தங்கவேல் கால்நடைகள் வளர்த்து வருகிறார். தினம் காலை மற்றும் மாலையில் பாலை கறந்து, தும்பலஅள்ளியில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கு எடுத்து சென்று கொடுத்து வருவார். இவர் காலையும், மாலையும் பால் சொசைட்டிக்கு கிளம்பும் போது, மணியும் தொடர்ந்து கூடவே சென்று வரும். ஒரு நாள், மணி மூலம் பால் கொடுக்க முடிவு செய்தார். ஒரு தூக்கில் பால் ஊற்றி, நாயிடம் கொடுத்தார். அதுவும், வாயில் கவ்வியபடி பாலை எடுத்துச் சென்று, சரியான நபரிடம் கொடுத்துத் திரும்பியது.

இதையடுத்து, 1,500 ரூபாய் செலவில், பால் கேன்களை ஏற்றிச் செல்லும் வகையில் சிறிய சைக்கிளை உருவாக்கிய தங்கவேல், மாடுகளை பூட்டுவது போல் நாயைப் பூட்டி, அதில் 35 லிட்டர் பால் கேனையும், கூட்டுறவு சங்க பதிவேடு புத்தகத்தையும் அனுப்பி வைத்தார். தனியாக ரோட்டில் செல்லும் நாய், பால் சொசைட்டியில் நின்று பால் கேனை ஊழியர்கள் பெற்று பதிவேட்டில் பதிவு செய்த பின், மீண்டும் காலி கேனுடன் வீட்டுக்குத் திரும்பி வருகிறது. சில நேரங்களில் தங்கவேலின் மகன் மற்றும் மகளையும் சைக்கிளில் சுமந்தபடி பயணம் செய்யும் மணியை, அந்த பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். ஒரு மாதமாக பால் கேனுடன் பயணம் செய்யும் நாய்க்கு, வீட்டுக்கு திரும்பியதும், வீட்டில் உள்ளவர்கள் ஆரத்தி எடுத்து, திருஷ்டி கழிப்பதையும் வாடிக்கையாக செய்து வருகின்றனர்.

இது குறித்து தங்கவேல் கூறியதாவது: தினம் நான் செல்லும் இடங்களுக்கு வந்த நாயை இப்படி பழக்கி விட்டேன். எனக்கு பெரும் உதவியாக மாறி விட்டது. வீட்டில் நாங்கள் சாப்பிடும் சாப்பாட்டை மட்டும் சாப்பிடும் மணி, நன்றிக்கு உதாரணம் என்பதை செயலில் செய்து காட்டுவது, எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது. இவ்வாறு தங்கவேல் கூறினார்.

மனதோடு மனோ - சின்மயி (Part-2)

Saturday, September 4, 2010

Kalaba Kadhalan Vedio Song....

kaala video Song....

Sunday, August 29, 2010

ஜெயா டிவி - மனதோடு மனோ உடன் சின்மயி...

Thursday, August 26, 2010

Tamil movie Song....

Tamil movie Song....

மிக அழகான வரிகளை உடைய இந்த பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது .
 

Sunday, August 22, 2010

கறிவேப்பிலை சட்னி...

தேவையான பொருட்கள்:


கறிவேப்பிலை - 1 கட்டு

சின்ன வெங்காயம் - 1 கோப்பை

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி

உடைத்த உளுந்து - 1/2 தேக்கரண்டி

புளி - 1 கொட்டை அளவு

தேங்காய் துருவல் - 1 மேஜைக்கரண்டி

பூண்டு - 4 பல்லு

இஞ்சி - 1 துண்டு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1/2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 1/4தேக்கரண்டி

உடைத்த உளுந்து - 1/4 தேக்கரண்டி

பெருங்காயம் - சிறிது

எண்ணெய் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து


செய்முறை:

1. சிறிது எண்ணெயை விட்டு கருவேப்பிலையை நன்றாக வறுத்துக்கொள்ளவும்.

2. வாணலியில் சிறிது எண்ணெயைவிட்டு கடலைபருப்பையும் உளுந்தையும் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

3. பிறகு அதில் வெங்காயத்தைக் கொட்டி சிவக்க வதக்கவும்.

4. அதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

5. பிறகு அதில் புளியைச் சேர்க்கவும்.

6. பின்னர் இறக்கிவைத்து தேங்காய் துருவலைச் சேர்த்து ஆறவைக்கவும்.

7. பிறகு அனைத்தையும் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

8. அடுத்து தாளிக்கும் பொருள்களைக் கொண்டு தாளிக்கவும்.

குறிப்பு:

1. இறக்கும் போது ஒரு தேக்கரண்டி நெய்விட்டு இறக்கினால் வாசனையாக இருக்கும்.

ஆக்கம்
ச. சுதாதேவி
சென்னை - 600 050.

ஆண்மைக் குறைபாடு பற்றி ஓர் அலசல்!!

உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.

முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பாம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், போன்றவையாகும்.

ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை ஏனென்றால் ? உடலுறுவு கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரிய தாக இருந்தாலும் அவை பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை அளிக்காது!. பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத்தாகும்.

விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும், விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும்.

துக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. இது ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது.

ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள்

விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது, தொடர்நது கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும் காலை நேர யோகாவும் நல்ல பலனை தரும்.

ஓரிதழ் தாமைரை இலைகளை விடிவாதற்கு முன் தினந்தோறும் மென்று தின்று பால் அருந்திவர, பலவீனங்கள் சரியாகும்.

முருங்கைப் பூவை காய்ச்சி ஒரு அவுன்ஸ் பாலுடன் கலந்து குடிக்கலாம்.

ஆண்மை பெருக அத்திப்பழத்தினை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம், முருங்கை கீரை, தவசி கீரை வாரா வராம் உணவில் சேர்த்துக் கொள்ளலம். மாதுளம் பழத்தினை தினந்தோறும் இரவில் சாப்பிடலாம், நாவல் பழங்களை தினந்தோறும் சாப்பிட்டுவரலாம்.

Monday, August 9, 2010

தனிமனித ஒழுக்கம் அவசியம்...

ஒவ்வொரு மனிதனும் நல்லவனாக வாழ சில விஷயங்களில் அக்கறை கொண்டவனாக இருக்க வேண்டும். நன்மை தரக்கூடிய விஷயங்களில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். பொறாமை, சந்தேகம் போன்றவற்றை முற்றிலும் ஒழிக்க வேண்டும். நல்லவர்களாக இருக்கவும், நன்மையைச் செய்யவும் முயற்சி செய்ய வேண்டும். ஏழைகளுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். இவையெல்லாம் மனிதனை மேம்படுத்தும் விஷயங் களாகும். கற்பு நெறியிலிருந்து ஆண்களும்,பெண்களும் தவறுவது தான் ஒரு நாட்டின் அழிவிற்கு முதல் அறிகுறியாகும். சமுதாயத்தில் கற்பு நெறி தவறுதல் என்னும் கேடு நுழைந்து விட்டால் அச்சமுதாயத்திற்கு முடிவுக்காலம் நெருங்கி விட்டதென்று பொருள். இதை யாராலும் தடுக்க முடியாது. அதனால், தனிமனித ஒழுக்கத்தின் அடிப்படையில் தான் சமுதாயத்தின் எதிர்காலமே அடங்கி இருக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஒரு செயலின் பயனில் கருத்தைச் செலுத்தும் அளவிற்கு, அந்த செயலைச் செய்யும் முறையிலும் கருத்தைச் செலுத்த வேண்டும். செல்ல வேண்டிய பாதையில் கவனம் வைத்தால் அடைய வேண்டிய குறிக்கோளை அடைவதற்கான வெற்றிரகசியங்கள் ஒவ்வொன்றாக திறக்க ஆரம்பிக்கும். என்வாழ்வில் கற்றுக் கொண்ட பாடங்களுள் மிகப்பெரியதாக இதைக் கருதுகிறேன்.

Saturday, August 7, 2010

சாப்பிட்ட உடன் `செக்ஸ்’ வைத்துக் கொள்ளலாமா ?

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று சொல்வார்கள். அதாவது, உணவு உட்கொண்ட உடனேயே சுகமாய் தூக்கம் வரும். அதனால்தான் அப்படிச் சொன்னார்கள்.

மருத்துவ ரீதியாகப் பார்த்தால், சாப்பிட்ட உடனே, அந்த உணவு செரிப்பதற்கு தேவையான சக்தியைக் கொடுக்க வயிற்றுப்பகுதிக்கு அதிக அளவில் ரத்தம் பாயும். இதனால், முளை உள்ளிட்ட மற்ற உடல் பாகங்களுக்கு சென்ற ரத்தத்தின் அளவு குறையும். அதனாலேயே ஒருவித மயக்கம் ஏற்படுகிறது.

இதுதான் உண்மை! சிலர் உணவு உட்கொண்ட உடனேயே குட்டித்தூக்கம் போட சென்று விடுவார்கள். இன்னும் சிலர், தம் அடிக்க ஓதுங்கிவிடுவார்கள். இன்னும் சிலரோ, சாப்பிட்ட உடன் பழங்கள் சாப்பிடுவது நல்லது என்று, அவற்றை சாப்பிடுவார்கள். சாப்பிட்டபின் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்களும், சிறிது தூரம் வாக்கிங் செல்பவர்களும் உண்டு.

சிலர் ` முட்’ வந்து செக்ஸ் வைத்துக்கொள்வதும் உண்டு. இப்படி, சாப்பாட்டுக்குப் பின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதங்களில் நடந்து கொள்கிறார்கள். இப்படியெல்லாம் செய்வது நல்லதுதானா? சாப்பிட்டவுடன் பழங்கள் உண்பது பலருடைய வழக்கம். இது நல்லதல்ல என்கின்றனர் மருத்துவர்கள்.

அதாவது, பழங்களானது உணவைவிட எளிதில் ஜீரணமாகிவிடும். ஆனால், சாப்பிட்ட உணவு ஜீரணமாக அதைவிட நேரம் அதிகமாகும். நீங்கள் உட்கொண்டது அசைவமாகவோ அல்லது எண்ணெய், நெய் கொண்டு செய்த உணவாகவோ இருந்தால், அதைவிட கொஞ்சம் நேரம் கூடுதல் பிடிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சாப்பிட்டவுடன் பழங்களை சாப்பிடுவது, அவை உடலுக்குள் ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது.

உடலுக்குள் போன உணவுக் கலவையில் உள்ள பழங்கள் எளிதில் ஜீரணமாகி, முழுவதுமாக செரிமானம் ஆகாத நிலையில் உள்ள உணவுடன் கலந்து பிரச்சினைக்குரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடுகின்றன. மேலும், இதனால் வயிற்றுப் பகுதியில் காற்று அதிகம் நிறையும் நிலையும் உருவாகி விடுகிறது. அதனால், உணவு உட்கொண்ட உடனேயே பழங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது. சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு எடுத்துக்கொள்வதே நல்லது.

சாப்பிட்டவுடன் நிம்மதியாக சுவரில் சாய்ந்து நின்று கொண்டு ஒன்றோ, இரண்டோ சிகரெட் புகைப்பது புகை பிரியர்களின் மாற்ற முடியாத செயல். இது மிகவும் ஆபத்தானது என்பது ஆய்வு ரீதியாக நிருபிக்கப்பட்டுள்ளது. உணவு உட்கொண்டபின் பிடிக்கும் ஒரு சிகரெட், பத்து சிகரெட் பிடிப்பதன் பாதிப்பை ஏற்படுத்துமாம். இதனால் கேன்சர் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறதாம். நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால் சாப்பிட்ட உடன் புகை பிடிப்பதற்கு இன்றே தடா போட்டுவிடுங்கள்.

சாப்பிட்ட சிறிதுநேரத்தில் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். டீயில் அதிக அமிலச்சத்து காணப்படுகிறது. இந்த அமிலம், உட்கொண்ட உணவின் புரோட்டீன் பொருட்களை இறுகச் செய்து விடுகின்றது. அதனால், சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானம் ஆகாமல் போய்விடுகிறது. எனவே உணவுக்குப் பின் உடனே டீ குடிக்கும் வழக்கம் இருந்தால் அதை நிறுத்திவிடுங்கள். சாப்பிட்ட உடன் தூங்குவது பலரது பெஸ்ட் சாய்ஸ் ஆக உள்ளது.

இப்படி பழக்கப்படுத்திக் கொள்வதால் வாயுத் தொல்லை உள்பட பல உடல் உபாதைகள் வந்து சேர்கின்றன. சிலர் உணவு உண்டபின் உடனே பெல்ட்டை தளர்த்திக் கொள்வார்கள். அதாவது, வயிறு முட்ட சாப்பிடப்போய் முச்சுவிடுவதற்கு வசதியாக இப்படிச் செய்வது வழக்கம். இப்படிச் செய்தால் குடல் சிக்கல் உருவாகும் வாய்ப்பு இருக்கிறதாம். சாப்பிட்ட பின் குளிப்பவர்களும் உண்டு. இப்படிச் செய்தால், உணவை செரிக்க பயன்படும் ரத்த ஓட்டம் உடலின் பல இடங்களுக்கும் வேகமாகப் பாய்கிறது.

அதனால், வயிற்றில் இருக்கும் உணவுப் பொருள் செரிமானம் ஆக தேவையான ரத்த ஓட்டம் கிடைக்காமல், அந்த உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆகவே எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட உடன் குளிப்பதற்கு டவலை தூக்கிவிடாதீர்கள். சாப்பிட்ட உடனே கொஞ்ச தூரம் நடந்தால் உட்கொண்ட உணவு செரிக்கும் என்பது பலரது அசைக்க முடியாத நம்பிக்கை.

சாப்பிட்ட உடன் நடந்தால் நாம் உண்ணும் பொருட்களில் உள்ள சத்துகள் நமது உடலுக்கு முழுமையாகக் கிடைக்காது என்பதே உண்மை.

இன்னொரு முக்கியமான விஷயம்… சாப்பிட்ட உடன் செக்ஸ் வைத்துக்கொள்வதும் தவறு. மீறி வைத்துக்கொண்டால், உணவு செரிமானத்தில் மட்டுமின்றி, செக்ஸ் பற்றிய மனம் சார்ந்த பிரச்சினைகளையும் சந்திக்க நேரலாம். எப்போது என்றாலும், சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பிறகு செக்ஸ் வைத்துக்கொள்வதே நல்லது.

Sunday, August 1, 2010

தியானத்திற்கு தேவை மூன்று...

* வெற்றியை நாடும் மனிதர்கள் தியானம் செய்வது மிக அவசியம். மூன்று விஷயங்
   களில் கவனம் இருந்தால் மட்டுமே ஒருவருக்குத் தியானம் எளிதில் கைகூடும்.

* தியானத்திற்கு அடிப்படை உடலிலும், உள்ளத்திலும் தூய்மையாக இருத்தல்
   வேண்டும். மனத்தூய்மையின் அவசியத்தை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.
  அத்துடன் அதற்கு பொறுமையும் அவசியம்.

* தியானப்பயிற்சியின் தொடக்கத்தில் மனதில் ஆச்சரியமான காட்சிகள் எல்லாம்
  தோன்றும். நாளடைவில் அவை மறைந்துவிடும். மனம் நம்மைச் சோதிக்கும்.
 பொறுமையோடு இருந்தால் வெற்றி நிச்சயம். எனவே, விடாமுயற்சியும் தியானத்திற்கு தேவை.

* தியானத்தின் முடிவில் ""பிரபஞ்சத்தைப் படைத்த பரம்பொருளே! உன் மகிமையைத் தியானிக்கிறேன். என் உள்ளத்தை ஒளிரச் செய்வாயாக!''' என்று பிரார்த்திக்க வேண்டும்.

* உடல் நன்றாக இருந்தாலும், நோயுற்று அவதிப்பட்டாலும் தியானப்பயிற்சியை ஒருநாளும் தவறவிடக்கூடாது. காலை, மாலை நேரங்களில் உடலும், மனமும்

அமைதியாக இருக்கும் என்பதால், இவ்வேளைகளில் தியானப்பயிற்சி எளிதில் கைகூடும்.

-விவேகானந்தர்

Saturday, July 24, 2010

How Is It ?

Man Forced To Marry Girlfriend...

ரஞ்சிதாவை பற்றி நித்தியானந்தா...

Nithyananda Speaks on Ranjita




Tuesday, July 20, 2010

Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள ஒரு மென்பொருள்.

Device Drivers, கணினியில் உள்ள ஹார்டுவேர் பாகங்கள் இயங்குதளத்துடன் (Operating System) ஒத்திசைந்து இயங்க நிறுவப்படும் மென்பொருள்கள் ஆகும். பிரிண்டர், மதர் போர்டு , வெப் கேம் என்று எந்த பொருள் வாங்கினாலும் அதனுடன் Device Drivers CD வடிவில் தருவார்கள். அவற்றை கணினியில் நிறுவி கொள்ளலாம். ஒவ்வொரு ஹார்டுவேருக்கும் இது போன்று தனித்தனி CD என்று பெருகி விடும். அந்த Device Driver CD க்களை பாதுகாத்து வைத்து கொள்ளுதல் அவசியம்.

நமது கணினியில் இயங்குதளத்தை Reinstall செய்யும் போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கும். Device Drivers ஐ எங்காவது தொலைத்து இருப்போம். CD க்கள் பழுதாகி வேலை செய்யாமல் தொந்தரவு கொடுக்கும். இணையத்தில் சரியான Device Drivers க்காக தேடி அலைய வேண்டி இருக்கும். சில சமயங்களில் கிடைக்காமல் போகவும் வாய்ப்புண்டு. நமது ஹார்டுவேர் நிரந்தரமாக வேலை செய்யாமல் போகலாம்.

இந்த தலைவலியில் இருந்து தப்பிக்க ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. அதன் மூலம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து ஹார்டுவேர் பொருட்களின் Device Driver களையும் நீங்கள் Backup எடுத்து வைத்து கொள்ள முடியும். அடுத்த முறை இயங்குதளத்தை Reinstall செய்யும் போது அந்த Backup ல் உள்ள அனைத்து Device Driver களையும் எளிதான முறையில் உபயோகித்து கொள்ள முடியும். Device Driver ருக்காக ஒவ்வொரு CD யாக தேடி அலைய வேண்டியதில்லை.

அந்த மென்பொருளின் பெயர் Double Driver . இந்த லிங்க்கை கிளிக் செய்து அந்த மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளவும்.

அதில் "Scan" பட்டனை அழுத்தினால் உங்கள் கணினியில் உள்ள ஹர்டுவேர்களுக்கான அனைத்து Device Driver களும் தோன்றும்.

Backup கிளிக் செய்து வேண்டிய இடத்தில் சேமித்து கொள்ளலாம்.

Backup எடுத்து வைத்துள்ளவற்றை தேவைப்படும் போது Restore செய்ய விரும்பினால் Backup ல் dd.exe என்ற ஃபைல் இருக்கும்.

அதனை ஓபன் செய்து Restore அழுத்தவும். அதில் தோன்றும் Device Driver களில் தேவையானவற்றை நிறுவி கொள்ளவும்
டவுன்லோட் செய்ய கீழ் உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்...
Download

Monday, July 12, 2010

நீ தான் அனைவருக்கும் தலைவன்...

* பாவங்களிலேயே மிகப்பெரிய பாவம், நீ உன்னைப் பலவீனன் என்று நினைப்பதே. உயர்ந்தவர் என்று யாரும் இல்லை. நீ பிரம்மமே என்பதை உணர். நீ கொடுக்கும் சக்தியைத் தவிர வேறு எங்கும் எந்தச் சக்தியும் இல்லை. சூரியனையும், நட்சத்திரங்களையும், பிரபஞ்சத்தையும் கடந்தவர்கள் நாம். மனிதனின் தெய்வீகத் தன்மையை அவனுக்குச் சொல். தீமையை மறுத்துவிடு, எதையும் உண்டுபண்ணாதே. எழுந்து நின்று, 'நானே தலைவன், அனைத்திற்கும் நானே தலைவன்' என்று கூறு. நாமே தடையை உண்டாக்கிக் கொள்கிறோம். நம்மால்தான் அதனை உடைத்து எறியவும் முடியும்.
* எந்தச் செயலும் உனக்கு முக்தி தர இயலாது. ஞானம் மட்டுமே அதைத் தர முடியும். ஞானத்தைத் தடுக்க முடியாது. அதை ஏற்பதோ தடுப்பதோ மனத்தால் முடியாது. ஞானம் வரும்போது மனம் அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். எனவே, ஞானம் மனத்தின் செயல் அல்ல. மனத்தின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

* உன் சொந்த இயல்பிற்கு உன்னைத் திரும்பக் கொண்டு வரவே, செயலும், வழிபாடும் அமைந்துள்ளன. உடலை ஆன்மா எனக் கருதுவது முழு மனமயக்கம். உடலுடன் இருக்கும்போதே நாம் முக்தர்களாகலாம். உடலுக்கும் ஆன்மாவிற்கும் பொதுவான எதுவும் இல்லை.

* 'சித்', 'அசித்', 'ஈஸ்வரன்' என்பதற்கு, ஆன்மா, இயற்கை, கடவுள் என்றும், உணர்வுள்ளது, உணர்வற்றது, உணர்வைக் கடந்தது என்றும் ராமானுஜர் மூன்றாகப் பிரிக்கிறார். இதற்கு மாறாக சங்கரர், 'சித்' அதாவது ஆன்மாவும், இறைவனும் ஒன்றே என்கிறார். இறைவனே உண்மை, இறைவனே அறிவு, இறைவனே எல்லையற்றவர்.
                                                                 - விவேகானந்தர்.

மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு...

துன்பங்களிலும் போராட்டங்களிலும் உழலும் போது இந்த உலகம் பயங்கரமானதாக நமக்குத் தோன்றுகிறது. இரண்டு நாய்க்குட்டிகள் கடித்து விளையாடிக் களிப்பதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அது ஒரு விளையாட்டு, சற்று காயப்படும்படி அவை கடித்துக் கொண்டாலும் அதனால் தீங்கு எதுவும் விளையாது என்பது நமக்குத் தெரியும். அதுபோலவே நமது போராட்டங்கள் எல்லாம் இறைவனின் கண்களுக்கு விளையாட்டே. இந்த உலகம் விளையாட்டுக்கென்றே அமைந்தது. அது இறைவனைக் களிப்படைய செய்கிறது. எதற்காகவும் அவன் கோபம் கொள்வதில்லை.
அம்மா! வாழ்வெனும் கடலில் என் படகு மூழ்கிக் கொண்டிருக்கிறது. மனமயக்கம் என்னும் சூறைக்காற்றும், பற்று என்னும் புயலும் கணந்தோறும் அதிகரிக்கின்றன. படகோட்டிகள் ஐவரும் (ஐந்து புலன்களும்) வெறும் முட்டாள்கள், சுக்கான் பிடிப்பவனோ (மனம்) மெலிந்தவன். நிலைகுலைத்து என் படகு மூழ்குகிறது. அன்னையே, என்னைக் காப்பாற்று!

அன்னையே! மகான் என்றோ, பாவி என்றோ உன் அருள் பிரித்துப் பார்ப்பதில்லை. பக்தனிலும் அதேபோல் கொலைகாரனிலும் அது பிரகாசிக்கிறது. எல்லாவற்றின் மூலமும் அன்னையே வெளிப்படுகிறாள்.

ஒளிபாயும் பொருட்களில் மாசு இருக்கலாம். அதனால் ஒளி கெடுவதில்லை. பயன் பெறுவதும் இல்லை. மாற்றம் அடையாமல் மாசுபடியாமல் திகழ்கிறது அந்த ஒளி. ஒருபோதும் மாறாத, தூய, அன்புமயமான 'அன்னை' ஒவ்வோர் உயிரின் பின்னாலும் நிற்கிறாள்.

உன்னை எதுவும் துன்புறுத்த முடியாது என்பதை உணர்ந்து கொள். ஏனெனில் நீ சுதந்திரன். நீயே ஆன்மா.
                                                   - விவேகானந்தர்.

அன்பால் உள்ளத்தை நிரப்புங்கள்...

ஒரு கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஒரு கருத்தையே உங்கள் வாழ்க்கை மயமாக்குங்கள். மூளை, தசைகள், நரம்புகள் என்று உடலில் எல்லாப் பாகங்களிலும் அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும்.

* சிந்தனையின் 90 சதவீத ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கப் படுகின்றது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனின் மனமோ ஒரு போதும் தவறு செய்வதில்லை. அவன் தன் லட்சிய வாழ்வில் வழி தவறாமல் வெற்றி நடை போடு கிறான்.

* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்குத் தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது. எனவே, அன்பால் உள்ளத்தை நிரப்புங்கள்.

* எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமையை வளரச் செய்யுமோ அத்தகைய கல்வி தான் நமக்கு இன்றைய தேவையாக இருக்கிறது.

* இளமையும், வலிமையும், வளமையும், அறிவுக் கூர்மையும் உடையவர்களே இறைவனை அடையத் தகுதியானவர்கள்.
                                                          - விவேகானந்தர்.

Wednesday, June 30, 2010

650 அடி உயரத்தில் அமைந்திருக்கும் நீச்சல் குள தடாகம்...





உலகிலேயே மிக அதிக பணச் செலவில் கட்டப்பட்ட ஹோட்டல் வரிசையில் தற்போது இடம்பிடித்திருப்பது சிங்கப்பூரில் அமைந்துள்ள இந்த ஹோட்டல் ஆகும். சில தினங்களுக்கு முன்னர் இந்த ஹோட்டல் திறந்துவைக்கப்பட்டது. சுமார் 650 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த நீச்சல் குள தடாகம், ஒலிம்பிக் நீச்சல் குள தடாகத்தைவிட 3 மடங்கு பெரியது எனவும், சிறு வள்ளங்கள் அங்கு பாவிக்கப்படுவதாகவும் அறியப்படுகிறது. உலகிலேயே கட்டிடத்திற்குமேல், இவ்வாறானதொரு பாரிய நீச்சல் தடாகம் கட்டப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

55 மாடிகள் கொண்ட இந்த ஹோட்டலில் சுமார் 2,500 அறைகளைக் கொண்டதாகவும், சுமார் 350.00 ஸ்டேலிங் பவுண்களை அறை ஒன்றின் கட்டணமாக அறவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 650 அடி உயரத்தில் அமைந்துள்ள நீச்சல் தடாகமே பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாகவும் சுமார் 70,000 பார்வையாளர்கள் இந்த ஹோட்டலை தினமும் பார்வையிட்டுச் செல்வதாகவும் கூறப்படுகிறது. சுமார் 4 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல், ஆண்டுக்கு சுமார் 40 மில்லியன் டாலர்களை இலகுவாகச் சம்பாதிக்கும் என அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறீலங்காவின் போர்குற்ற சாட்சியங்கள்...




http://www.manithan.net/ என்ற இணையத்தளம் வெளிட்டுள்ள சிறீலங்காவின் போர்குற்ற சாட்சியங்கள்.






தமிழர்களே, அவசரம்: விரைவாக செயல்படுவோம்: இலங்கை போர்க்குற்றத்தை
விசாரிக்கும் ஐ.நா.சபையின் நிபுணர் குழு தமிழ் மக்களுக்கும், நாளிதழ்களுக்கும் ஒரு வேண்டுகோள், இலங்கையில் போரின் போது நடைபெற்ற குற்ற செயல்களின் உண்மை நிலையை ஆராயும் குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நிறுவியுள்ளது.

இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் மர்சுகி தருஸ்மன் தலைமையில்
நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ரட்ணர்,
தென்னாபிக்காவின் உண்மை நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவில்
பணியாற்றியவரும் அந்த நாட்டை சேர்ந்தவருமான யஸ்மின் சூகா ஆகியோரும்
இடம்பெற்றுள்ளனர்.

http://www.un.org/news/ossg/hilites.htm
எனவே ஒவ்வொரு தமிழர்களும் அக்குழுவினர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக
போர்க்குற்ற புகைப்படங்களையும், காணொளிகளையும், ஆவணங்களையும் அனுப்பி
வைப்போம்.

ஒவ்வொரு இணையத்திலும் இச்செய்தியினை வெளியிடுமாறு பணிவுடன்
கேட்டுகொள்கிறேன்.

மேலும் நண்பர்களுக்கும், தமிழ் உறவுகளுக்கும் இந்த மின்னஞ்சல்-களை
தெரியபடுத்தவும்.

Marzuki Darusman
Former Indonesian attorney general
Director of Governance and Legal Reform
Association of Southeast Asian Nations (ASEAN)
A long serving veteran in the political arena and former Indonesian
Attorney General, Mr. Darusman has in-depth knowledge and practical
experience in Indonesia’s legal and regulatory sytems. His determined
work to build up the credibility of the National Human Rights
Commission in the early days of its establishment earned him a well-
deserved reputation as a human rights advocate. He is currently one of
the Chairpersons of the GOLKAR Party.

Marzuki Darusman
Strategic Asia Indonesia
Plaza Bumidaya 28th floor,
Jl. Imam Bonjol No. 61, Jakarta 10310
Tel. +62 21 3151797 begin_of_the_skype_highlighting +62 21 3151797 end_of_the_skype_highlighting
Fax. +62 21 3155712

contact.us@strategic-asia.com
info@aseanhrmech.org
http://strategic-asia.com/marzuki-darusman.html
=======
Steven Ratner An international law of war expert, A US international law expert Professor, International Institute, University of Michigan Steven R. Ratner, the Bruno Simma Collegiate Professor of Law, came to the University of Michigan Law School in 2004 from the University of Texas School of Law. His teaching and research focuses on public international law and on a range of challenges facing governments and international institutions since the Cold War, including ethnic conflict, border disputes, counter-terrorism strategies, corporate and state duties regarding foreign investment, and accountability for human rights violations. Professor Ratner has written and lectured extensively on the law of war, and is also interested in the intersection of international law and moral philosophy and other theoretical issues. In 1998-99, he was appointed by the UN Secretary-General to a three-person group of experts to consider options for bringing the Khmer Rouge to justice, and he has since advised
governments, NGOs, and international organizations on a range of international law issues. In 2008-09, he served in the legal division of the International Committee of the Red Cross in Geneva. A member of the board of editors of the American Journal of International Law from 1998-2008, he began his legal career as an attorney-adviser in the Office of the Legal Adviser of the U.S. State Department. Professor Ratner holds a J.D. from Yale, an M.A. (dipl�me) from the Institut Universitaire de Hautes Etudes Internationales (Geneva), and an A.B. from Princeton. He established and directs the Law School’s externship program in Geneva.

Bruno Simma Collegiate Professor of Law
433 Hutchins Hall
Tel :734.647.4985 begin_of_the_skype_highlighting 734.647.4985 end_of_the_skype_highlighting
Fax : 734.763.9375
E-mail: sratner@umich.edu
http://web.law.umich.edu/_FacultyBioPage/facultybiopagenew.asp?ID=300
===================================
Ms. Yasmin Louise Sooka South African Human Rights Lawyer Executive Director - Foundation for Human Rights
Former Deputy Chairman, The Truth and Reconciliation Commission (TRC).

Yasmin Louise Sooka is the executive director of the Foundation for Human Rights. Before joining the foundation, she served as a commissioner on the South African Truth and Reconciliation Commission as the deputy chairperson to the Human Rights Violations Committee. In 2004 she was appointed by the United Nations high commissioner for human rights to serve as international commissioner on the Sierra Leone Truth and Reconciliation Commission. She is considered an expert on both transitional justice and gender.
she regularly consults internationally to governments, international agencies, commissions and civil society organisations on transitional justice and peace building. Sooka also serves as an executive member to the Niwano Peace Foundation and is a trustee of the Centre for Conflict Resolution and the Black Sash Trust. She currently chairs the steering committee for South Africa’s Action Plan to address racism, racial intolerance, xenophobia and other related intolerance.

Ms. Yasmin Louise Sooka
Director, Foundation for Human Rights, Johannesburg
Private Bag X14
Arcadia 0007
South Africa
+27 12 440 1691 begin_of_the_skype_highlighting +27 12 440 1691 end_of_the_skype_highlighting
+27 12 440 1692 begin_of_the_skype_highlighting +27 12 440 1692 end_of_the_skype_highlighting
YSooka@fhr.org.zainfo@fhr.org.za


wmailto:webmaster@justice.gov.za
imailto:info@ijr.org.za
trc.comments@pop.onwe.co.za
julie.arbour50@gmail.com
prodder@sangonet.org.za
http://www.fhr.org.za/page.php?p_id=17
http://www.fhr.org.za/page.php?p_id=16

Monday, June 21, 2010

'சபாஷ்' என்றால் போதாது...

* உன் உடலில் கறை ஏற்படுத்தியுள்ள ஒரு துளி மையைப் பற்றி கவலைப்படாதே. இறைவன் என்னும் கருணைக்கடலில், நீ மூழ்கி எழுந்தால் இது போல் ஆயிரமாயிரம் துளிகள் இருப்பினும் அவை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

* ஒட்டகம் முள்செடியைத் தின்னும் போது, ரத்தம் வாயிலிருந்து வழிந்தாலும் தின்பதை நிறுத்துவதில்லை. அதுபோல, உலக மக்கள் எத்தனை துன்பம் வந்தாலும் தன் ஆசைகளை விடுவதில்லை.

* தனக்குத் தானே நன்மை செய்து கொண்டு மோட்சத்தை அடைவதை விட மற்றவர்களுக்கு நன்மை செய்து ஆயிரம் நரகங்களுக்கு செல்லவும் தயாராக இருங்கள்.

* எல்லாப் பேய்களும் நம் மனத்திலிருந்து தான் நம்மை ஆட்டிவைத்துக் கொண்டிருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கியிருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் அது சொர்க்கமாக விளங்கும்.

* "நான் தவறு செய்து விட்டேன்' என்று அழுது புலம்புவதால் ஒரு பயனும் இல்லை. உயர்ந்த ஒழுக்கத்தை கடைப்பிடித்தால் குற்றவுணர்ச்சி கொள்ளத்தேவையில்லை.

* நல்ல விஷயங்களை "சபாஷ் நன்றாய் இருக்கிறது' என்று பாராட்டினால் மட்டும் எந்த நலனும் உண்டாகாது. துருப்பிடித்த இரும்பை பழுக்கக் காய்ச்சி சம்மட்டியால் அடித்து வளைப்பது போல, நல்ல விஷயங்களை அப்படியே மறந்து விடாமல் மனதை நெறிப்படுத்தினால் தான் நல்லது.

Wednesday, June 16, 2010

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்...

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது : காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2. மிக அதிகமாகச் சாப்பிடுவது : இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல் : மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல் : நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று : மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும்.

6. தூக்கமின்மை : நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது : தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது : உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது : மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது : அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

Thursday, June 3, 2010

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்!!!

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்து விடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

Saturday, May 22, 2010

மன அழுத்தத்தை குறைப்பதற்கான உடற்பயிற்சி...

பரபரப்பான இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எல்லா துறையிலும் எல்லா பணிகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே சுழன்று கொண்டிருக்கிறார்கள்.

மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருவதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதுவே மன அழுத்தத்தை குறைப்பதற்கான தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது.

இந்த மன அழுத்தத்தை குறைக்க சில வகையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.இருக்கையில் அமர்ந்தவாறே இந்த உடற்பயிற்சியை செய்யலாம்.

1..தலையை இடதுபக்கமாக சாய்த்து இடதுபக்க காது தோற்பட்டையில் படும்படி சாய்த்து நன்றாக அழுத்தத்தை கொடுக்கவும்.வலது கையை தலையில் சிறிது அழுத்துவதன் மூலம் அழுத்தத்தைக் கொடுக்கலாம்.

2.இதே போன்று சமநிலையான ,இறுக்கமற்ற நிலையில் தலையை வலது பக்கமாக சாய்த்து வலதுபக்க காது தோற்பட்டையில் படும்படி சாய்த்து நன்றாக அழுத்தத்தை கொடுக்கவும்.

3.ஒரு நிலையில் இருந்து கொண்டு கண்களை இமைக்காது இடமிருந்து வலதுபக்கமாக தலையை சுழற்றவும், இவ்வாறே ஒரு நிலையில் இருது கொண்டு கண்களை இமைக்காது வலதுபக்கமிருந்து இடது பக்கமாக தலையை சுழற்றவும்.

4. இடது கையை மடித்து நெஞ்சுப்பகுதிக்கு மேலாக வலபக்க தோற்பட்டையில் படும்படி செய்து அழுத்தத்தை கொடுக்கவும்.

5. வலது கையை மடித்து நெஞ்சுப்பகுதிக்கு மேலாக இடதுபக்க தோற்பட்டையில் படும்படி செய்து அழுத்தத்தை கொடுக்கவும்.

6.இருக்கையில் அமர்ந்தவாறே குனிந்து உங்களது பாதங்களை தொடவும்.

7.இருக்கையில் அமர்ந்தவாறே கைகளை முன்நோக்கி நீட்டி இருகைகளையும் ஒன்று சேர்த்து பாதங்களைத் தொட முயற்சித்து அழுத்தத்தை கொடுக்கவும்.

8.வலதுகயை நீட்டி தூக்கி பெருவிரல் மற்றும் நடுவிரல்களுக்கு மாறி மாறி அழுத்தத்தை கொடுக்கவும், இதேபோல் இடது கைக்கும் செய்யவும்.

இந்த பயிற்சிகளை நீங்கள் வாரத்தில் 3- 4 தடவைகள் செய்யலாம் மேலும் 15-30 செக்கன்கள் வரை இதை செய்து வந்தால் மன அழுத்தம் குறையும்

Wednesday, May 19, 2010

நம்பிக்கையே நமக்கு ஆதாரம்.

* நாம் எந்த அளவிற்கு இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறோமோ அந்த அளவிற்கு இறைவனது அருள் நமக்காகச் செயல்பட்டு உதவும். நாம் இறைவனை நாடினால் அது இறைவனுக்காகவே இருக்க வேண்டுமே ஒழிய வேறு எதற்காகவும் இருக்கக்கூடாது.

* மனிதனது அனைத்து முயற்சிகளுக்கும் ஆதாரமாக இருப்பது நம்பிக்கை. ஒரு மனிதனுடைய நம்பிக்கை எப்படியோ, அப்படியே அவன் வாழ்க்கைநிலை அமையும் என்று கீதையில் கிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

* குறிக்கோள் இல்லாத வாழ்வு என்பது பரிதாபகரமான வாழ்வாகும். ஒவ்வொருவருக்கும் ஒரு குறிக்கோள் இருக்கவேண்டும். அந்த குறிக்கோள் உயர்ந்ததாகவும், விசாலமானதாகவும், பெருந்தன்மை உடையதாகவும், சுயநலமில்லாததாகவும் இருக்க வேண்டும்.

* தூய ஆன்மிக வாழ்வு வாழ்வதற்கு கடவுளைத் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் ஈடுபாடு அற்றுப் போகத் தேவையில்லை. அறிவியல், கலைகள், விளையாட்டு,வாழ்க்கை என்று ஆன்மிகம் தவிர்த்த மற்றவற்றின் வேர்களை வெட்டிவிடாதீர்கள்.

* இறைவன் ஆனந்தமயமானவன். ஆனால், இறைவனிடம் ஆனந்தம் மட்டுமில்லை. எல்லாமே இறைவன் தான். சாந்தம், வீரம், மேன்மை, மோட்சம், ஞானம், ஆற்றல், வசீகரம் என்று அனைத்தின் வடிவமாகவும் இறைவனே இருக்கின்றான்.

                                                            -அரவிந்தர்

கடவுளுக்கு நெருக்கமாவது எப்படி?

* மனிதர்களை நேசி. அவர்களுக்குத் தொண்டு செய். ஆனால், அவர் களின் பாராட்டுதலுக்கு ஆசைப்படாமல் இருப்பதில் கவனமாக இரு.

* நம்மை நெறிப்படுத்தும் மிகப்பெரிய வழிகாட்டி இறைவன் மட்டுமே. ஏனென்றால் நம்மை எப்போது அடிக்கவேண்டும்; எப்போது அணைக்க வேண்டும் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.

* உலகில் வெறுமனே கடமை ஆற்றாமல் இருப்பதால் ஒரு பயனும் இல்லை. நல்ல லட்சியங்களுக்காக நாம் வாழ வேண்டும். நற்பணிகளைச் செய்ய வேண்டும். அதற் காகத் தான் இறைவன் நம்மை அனுப்பி இருக்கிறான்.

* உன்னைத் தூய்மையாக்கும் பொறுப்பை கடவுளிடம் ஒப்படைத்து விடு. உன்னிடம் இருக்கும் தீயவற்றை அறவே அகற்றும் பொறுப்பு அவருடையது.

* கடவுளின் கண்களுக்கு அற்பமானது என்று எதுவுமில்லை. உன் கண்களுக்கும் அற்பமானது என்று எதுவும் இருக்க வேண்டாம்.

* உத்தமச் செயல்களைச் செய்ய நினைத்தால் உடனடி யாகச் செய்வது சிறந்தது. பிறருக்காக வாழ்பவன் கடவுளுக்கு நெருக்கமானவனாகிறான்.

                                                            - ஸ்ரீ அரவிந்தர்.

இரக்கமின்றி ஆராய்ந்து பார்!

மனிதன் வலிமையை விரும்புகிறான். ஆனால் அவன் பலவீனத்திற்கு ஆட்படுகின்றான். மனிதன் சுகத்தை விரும்புகிறான். ஆனால், துன்பம் துயரங்களில் சிக்கி அல்லல்படுகின்றான். பிறர் நலம் பேணுதல், கடமை, இல்லறம், தேசபக்தி, உயிர்களிடத்தில் அன்பு ஆகிய இக்குணங்கள் நம் உயிரோடு கலக்க வேண்டும். உன்னை நீயே இரக்கமின்றி ஆய்ந்து பார்; அப்போது நீ பிறரிடம் பரிவுடனும், இரக்கத்துடனே நடந்து கொள்வாய். உன் கண்களைத் திறப்பாயாக. உண்மையில் உலகம் எத்தகையது என்பதைக் காண். பயனற்ற இன்பக் கற்பனைகளை விட்டொழி. அருகிலுள்ளது, தொலைவிலுள்ளது என்னும் வேறுபாடு இறைவனின் பார்வையில் இல்லை. தற்காலம், கடந்த காலம், எதிர்காலம் என்பதும் இல்லை. இவையெல்லாம் உலக ஓவியத்தைக் காண்பதற்கு வசதியாக நாம் ஏற்படுத்திக் கொண்டவையே. ஒரு எறும்பின் உயிரைக் காப்பாற்றுவது என்பது, ஒரு பேரரசை நிறுவுவதை விடச் சிறந்த செயல். தெய்வீகத் திருநிலையே மனித இனத்திற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட இலக்காகும். அந்த நல்ல நிலையை வாழ்வில் பெறுவதற்காகவே நமக்கு இந்தப் பிறவியைக் கொடுத்துள்ளார்.
 
                                                        - ஸ்ரீ அரவிந்தர்.

சத்தமாய் பேசுபவருக்குரிய பதில்...

* வலிமை, ஆனந்தம் போன்ற குணங்களின் பிறப்பிடமாக அமைதி உள்ளது. அத்தகைய அமைதி ஒவ்வொருவரின் உள்மனதிலும் உள்ளது. எனவே, அதனை வேறு எங்கேயோ இருப்பதாக எண்ணி வெளியில் தேட வேண்டாம். தெளிவாக ஆராய்ந்து முடிவெடுக்கும் திறனுள்ள மனம், அமைதியின் வடிவமாக இருக்கும். அமைதியாக இருப்பவர்கள் எந்த செயலையும் சிறப்பாகவும், குறையில்லாமலும் செய்பவர்களாகவுமே இருப்பார்கள். எனவே, மனதில் இருக்கும் அமைதியை உணர்ந்து கொண்டு செயலாற்றுங்கள்.

* மனதிற்குள் மறைந்திருக்கும் ஞானத்தை வெளிப்படுத்த அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். உங்களிடம் யாரும் சத்தமிட்டு பேசினால், நீங்களும் பதிலுக்கு அப்படியே பேச வேண்டுமென்பதில்லை. அவரது பேச்சிற்கு அமைதியை பதிலாக கொடுங்கள். அதிலேயே அவர் எதிர்பார்க்கும் பல பதில்கள் புதைந்திருக்கும். அதனை புரிந்து கொள்ளும்வரையில்தான் அவர் சத்தமிட்டுக் கொண்டிருப்பார். எதிர்பார்த்த விடை கிடைத்துவிட்டால் அமைதியாக சென்று விடுவார். ஏனென்றால், அமைதியானது விவரிக்கமுடியாத பல அர்த்தங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

* எந்த செயலையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யுங்கள். நீங்கள் செய்யும் சிறு செயல்கூட இறைவனின் கருணையால்தான் நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தியானம் செய்து இறைவனை வழிபடுவதால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன், அர்ப்பணிப்பிலும் கிடைக்கும். ஏனெனில் அர்ப்பணிப்பும் ஒரு தியானம்தான்.

                                                                - ஸ்ரீ அரவிந்தர்.

ஒரு அடி வைத்தால் போதும்...

மனிதனின் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதாரமாக இருப்பது நம்பிக்கை. ஒரு மனிதனுடைய சிரத்தை, நம்பிக்கை எப்படியோ அதைப் பொறுத்துத் தான் அவனது வாழ்க்கை அமையும் என்று கீதை நமக்கு போதிக்கிறது. நம் வாழ்க்கை குறிக்கோள் இல்லாவிட்டால் பயனற்றதாகிவிடும். ஆனால் குறிக்கோள் என்பது வெறும் பெயரளவில் இருக்கக் கூடாது. மிகவும் உயர்ந்ததாக, சுயநலமற்றதாக இருக்க வேண்டும்.

நாம் இறைவனுடன் தொடர்பு கொண்டு அவனது திருக்கரங்களில் நம்மை ஒப்படைத்து விட்டால் அவன் தன்னுடைய சொந்த சக்தியையே நம்முள் ஊற்றுவான். யாருக்கு எதைக் கொடுத்தாலும் எல்லா உயிர்களிடத்தும் கோவில் கொண்டுள்ள இறைவனுக்கே கொடுக்கிறோம் எனும் உணர்வுடன் கொடுக்க வேண்டும். கடவுளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தாலும் போதும். உடனே அவர் நம்மை நோக்கி நூறு அடிகள் எடுத்து வைப்பார். இடையூறு எப்போதும் நம் உள்ளத்தில் தான் இருக்கிறதே ஒழிய, நம் சுற்றுச்சூழலில் இல்லை. ஆனால், நம்மைத் தொடரும் இடைஞ்சல்கள் யாவும் நமக்கு வெளியில் இருந்து வருவதாகவே தவறாக எண்ணுகிறோம். கருணையும், இனிமையும் தெய்வத்தின் குணங்கள் ஆகும். இந்நல்ல குணங்களை ஏற்றுக் கொள்ளும் மனிதன் தானும் தெய்வநிலைக்கு உயர்வான்.

வீரமும் வேண்டும் அன்பும் வேண்டும்...

* நம்பிக்கையற்ற மனம் எப்போதும் சந்தேகிக் கவே செய்யும். காரணம் அது புரிந்து கொள்ளவில்லை என்பதுதான். நம் மனத்தின் மீது வேண்டுமானால் நமக்குச் சந்தேகம் இருக்கலாம். ஆனால், இறைவனின் வழி நடத்தலில் சந்தேகம் வேண்டாம்.

* நாம் அன்பு செய்யலாம், இரக்கம் கொள்ள லாம், எந்த உணர்வையும் வெளிப்படுத்த லாம். ஆனால், இறைவனை தவிர வேறெந்த சக்திக்கும் அடிமையாகி விடக் கூடாது.

* வீரத்தையும் அன்பையும் விட்டு விடாதீர்கள். உங்கள் ஆன்மாவை அழிவிலிருந்து காக்கக் கூடியது இந்த இரண்டு நற்குணங்களும் தான். இவற்றால் வாழ்வை சந்தோஷமாக மாற்றிக் கொள்ளுங்கள்.

* முதியவர்களிடம் அனுபவம் இருந்தாலும், இளையவர்கள் அவர்களை வென்று விடுகின்றனர். காரணம் இளையவர்களிடம் உள்ள வேகமும், புதிய அறிவும் வெல்லப்பட முடியாதது. அதுவே பழசாகிறபோது தனது சிறப்பை இழந்து விடுகிறது.

* சிலருக்கு அற்பங்கள் அற்புதமாகி விடுகின்றன. சிலருக்கோ அற்புதங்கள் அற்பமாக விடுகின்றன. அதுதான் புனிதர்களுக்கும், தலை சிறந்த புனிதர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

* நாம் மரணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினால் அப்போது வாழ்வும் முற்றுப்பெற்றுவிடும். மரணத்தை வீழ்த்த நம்மால் முடியாது. ஆனால், வாழ்க்கையை உன்னதமாக்க முயன்றால் அது கைகூடுகிற காரியம்

                                                  - ஸ்ரீ அரவிந்தர்.

குறித்த நேரத்தில் வேலையைச் செய்க!

* நாம் இறைவனுடன் தொடர்பு கொண்டு அவனது திருக்கரங்களில் நம்மை ஒப்ப டைத்து விட்டால், அவன் தன்னுடைய சொந்த சக்தியை நம்முள் ஊற்றுவான். இறைவனுடன் ஒன்றாகி விடுவதன் மூலம் எல்லாப் பொருள்களிலுமுள்ள எல்லையற்ற ஆனந்தத்தைச் சுதந்திரமாக அனுபவிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

* இறைவன் ஆனந்தமயமானவன். ஆனால், இறைவனிடம் ஆனந்தம் மட்டும் இல்லை. வேறு எத்தனையோ இன்பங்கள் அவனிடத்தில் உள்ளன. சாந்திக்காக, முக்திக்காக, ஞானத்திற்காக, ஆற்றலுக்காக இறைவனை நாடலாம்.

* எந்த அளவிற்கு இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறோமோ, அந்த அளவுக்கு இறைவனது அருள் நமக்காகச் செயல்பட்டு பக்கபலமாகத் துணை நிற்கும். நம் தன்னம்பிக்கைக் கும், சுயஆற்றலுக்கும் பின்னால் தெய்வ சக்தி இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

* குழந்தைக்கு நாம் கொடுக்கும் பொருளின் மதிப்பு தெரியாததைப் போல இறைவனிடமிருந்து நாம் பெறுவதின் மதிப்பு நமக்குத் தெரிவதில்லை. அதனால் மனிதனால் கடவுளிடம் நன்றியறிதலுடன் இருக்க முடிவதில்லை.

* குறித்த நேரத்தில் குறித்த வேலையைச் செய்வது என்பது பெரிய சக்தியாகும். அதனால் நமது நேரமும், செயல்பாடுகளும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரும்.

                                                         - ஸ்ரீ அரவிந்தர்.

ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அரவிந்தர்.

* உலகில் இருப்பதால் மட்டுமே பயனில்லை. நல்ல லட்சியத்தை உருவாக்கிக் கொண்டு அதற்காக வாழவேண்டும். நம்மால் முடிந்த நற்பணிகளைச் செய்ய வேண்டும். அதற்காகத் தான் நாம் மனிதனாக பிறந்திருக்கிறோம்.

* பிறரை நாம் நேசிக்காமல், நம்மை மட்டும் பிறர் நேசிக்க வேண்டும் என்று கோருவது இயற்கைககு புறம்பானதாகும்.
* நீ எவரையாவது ஏளனம் செய்யும் போது உன் உள்ளத்தை உற்று நோக்கு. உன் மடமையைக் கண்டு சிரிக்கத் தோன்றும்.
* இறைவனின் மாவீரனாக உன்னை எண்ணிக் கொள். அப்போது தான் உன்னால் முழுமுயற்சியோடு உலகில் போராட முடியும்.
* பிறர் தீயதென்று சொல்வதை நீங்களும் தீயதென்று தள்ளாதீர்கள். கடவுள் எதை வேண்டாம் என்று தள்ளியிருக்கிறாரோ அதை நீங்கள் அகற்றுங்கள்.
* உன் ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு செயலும் உனக்குள் இருக்கும் கடவுளுக்கு நீ அளிக்கும் காணிக்கையாகட்டும்.
* சோர்வு உங்களைச் சோர்வடையச் செய்து விடக்கூடாது. அதை விலக்க முற்பட வேண்டும்.
* உத்தமச் செயல்களை செய்ய நினைப்பவர்கள், அதை உடனடியாகச் செய்து விட வேண்டும்.

                                             -அரவிந்தர்

Sunday, May 16, 2010

வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உறுதி: விஞ்ஞானி தகவல்...

லண்டன் : 'ஏலியன்ஸ்' என்றழைக்கப்படும் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உறுதி; ஆனால் அவர் களை, மனிதர்கள் தொடர்பு கொள்ள முயற்சிக்கக் கூடாது' என, பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார். ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதாவது: பிரபஞ்சத்தில், 10 ஆயிரம் கோடி நட்சத்திர மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்திலும் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில், பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன என்று கூறுவது தவறு.

என்னுடைய கணித அறிவின்படி, வேற்று கிரகவாசிகள் உள்ளனர் என்பது தெரிகிறது. அவர்கள் எந்த உருவத்தில் உள்ளனர் என்பதைக் கண்டறிவது தான் சவாலான விஷயம். அவர்கள் நுண்ணுயிரிகளாகவும் இருக்கலாம். புழுவாகவும் இருக்கலாம். அவற்றிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த உருவங்களாகவும் இருக்கலாம். அவர்களுடைய வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதற்கு, நம் உயிரினத்தின் வளர்ச்சியை உதாரணமாகக் கொள்ளலாம்.

தங்கள் கிரகத்திலுள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி விட்டு, தற்போது வேறு இடத் தில் வசிப்பதாக நான் கருதுகிறேன். அது போன்ற வேற்று கிரகவாசிகள், மற்ற கிரகங்களுக்கு நாடோடிகள் போல நுழைந்து, அவ்வுலகத்தைக் கைப்பற்றவும் தயாராக இருக்கலாம். ஆனால், அவர்கள் இவ்வுலகில் நுழைந்தால், அவர்களுக்கு அது வெற்றியாக அமைய வாய்ப் பில்லை. இவ்வாறு ஸ்டீபன் ஹாக்கிங் கூறினார்.

Wednesday, May 5, 2010

இலங்கை பாராளுமன்றை அதிர வைத்த கன்னி உரை...

இலங்கை நாடாளுமன்றத்தில் 2010 தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு சார்பாக வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் அவர்களின் கன்னிப் பேச்சு இன்று பாராளுமன்றத்தை அதிரவைத்தது.

அந்த உரையின் ஒலி வடிவம் மற்றும் எழுத்து வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

கெளரவ சபாநாயகர் அவர்களே! மதிப்பிற்குரிய சக உறுப்பினர்களே! என்னை தங்கள் பிரதிநிதியாக உங்கள் முன் அனுப்பி இருக்கும் எமது மக்களின் சார்பிலும் எனது சார்பிலும் எனது வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் முதலில் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.


இறந்துபோன உறவுகளின் எலும்புத்துண்டங்கள் என் பாதங்களை முத்தமிட அழிந்துபோன எம் தேசத்தின் சாம்பல் மேட்டிலிருந்து எனது மக்களின் நிரந்தர பூர்வீக வாழ்வியல் உரிமைக்கான அங்கீகாரம் மக்களின் அங்கீகாரத்தோடு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தமது கெளரவமிக்க உயிரினும் மேலான உரிமைக்காக காலமெல்லாம் போராடி தவமிருக்கும் தமிழ்பேசும் மக்களிடமிருந்து வருகின்றேன்.

இரண்டாவது உலக யுத்தம் முடிவடையும் தறுவாயில் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டு சரணடையும் நிலையிலிருந்த போதிலும் அணுகுண்டு வீச்சுக்குட்படுத்தப்பட்டு இரு பெரும் நகரங்களையும் இரண்டு லட்சம் மக்களையும் இழந்து இன்றுவரை கதிர்வீச்சு தாக்கத்தில் இருந்து முழுமையாக விடுபடாத போதிலும் மீண்டுமொரு பொருளாதார வல்லரசாக இடிச்சு பெருப்பித்திருக்கும் இரசாயன தேசத்தின் அன்பளிப்பான இக்கட்டிடத்தொகுதியில் இருந்து என் கன்னி உரையை எதிர்காலம் பற்றிய உயர்வான நம்பிக்கையுடன் ஆரம்பிப்பதில் பெருமையடைகின்றேன்.

தோற்கடிக்கப்பட்டவர்கள் எல்லோரும் தோற்றுப்போனவர்கள் அல்லர், அழிக்கப்பட்டவர்கள் எல்லோரும் அழிந்துபோனவர்களும் அல்லர் என்பதற்கு உலக வரலாற்றில் ஏராளமான உதாரணங்கள் உண்டு.

துருக்கிய பேரரசாலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளாலும் காலத்திற்கு காலம் அழிக்கப்பட்டு வெறும் கற்குவியலாக்கப்பட்ட உரோமானிய தேசம். அந்தக் கற்களையே தம் மூலதனமாக்கி சீமெந்து உற்பத்தியில் பெரும் சாதனையீட்டி இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றது. அந்தக் கற்களில் எழுதப்பட்ட சோக காவியங்கள் இன்று வசந்த கீதங்களாக மாற்றப்பட்டுவிட்டன.

ஒரு தேசமோ ஒரு இனமோ இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு பேரழிவுகளுக்கு முகங்கொடுக்கும்போது மீளெழுவதற்கு இன்னுமொரு பாதை உண்டு என்பதை ஜப்பானியர்களும் உரோமானியர்களும் இன்று முழு உலகத்திற்கும் நிரூபித்துவிட்டனர்.

நாம் பயங்கரவாதிகளாக பட்டம் சூட்டப்பட்டோம். உலக வல்லரசுகளும் பிராந்திய வல்லரசும் எமது இராணுவ பலத்தையும் எமது சந்ததியையும் அழிப்பதற்கு உரிய நியாயப்பாட்டை எம்மை பயங்கரவாத பட்டியலில் சேர்த்துக்கொண்டதன் மூலம் ஏற்படுத்திக்கொண்டன. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் தமிழ்மக்களுக்கெதிராக ஒரு பெரும் யுத்தம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

பல்லாயிரம் தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர். இன்னும் பல ஆயிரமவர் ஊனமாக்கப்பட்டனர், காணாமல் போனோரின் தொகை இன்னமும் கணக்கிடப்படவில்லை, பலகோடி பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. சூறையாடப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் இழந்து அகதிகளாக வெறுங்கைகளுடன் முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கப்பட்டோர் தொகை லட்சங்களாக உயர்ந்தது.

இப்பேரழிவின் பின்னால், இலங்கை அரசுக்கு உலக வல்லரசுகளும் பிராந்திய வல்லரசும் மறைமுகமாகவும் நேரடியாகவும் பெரும்பங்களிப்பை வழங்கின. இன்று இப்போரின் எம்மீது போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவும், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும் குற்றம் சுமத்தி சிங்கள தேசத்தின் கழுத்தை நெரிக்க, வல்லரசுகள் தங்கள் கரங்களை நீட்டுகின்றன. அதாவது எங்களை அழிக்க உங்களுக்கு தோள்கொடுத்தவர்கள் இன்று உங்களை அடிமைப்படுத்த எங்களைப் பாவிக்கின்றனர்.

மதிப்பிற்குரிய எங்கள் சகோதர்களே! எங்களுக்கெதிராக உங்களையும் உங்களுக்கெதிராக எங்களையும் பாவித்து எங்கள் எல்லோரையும் அடிமைகொள்ள முயலும் இவர்களின் வழியில் நாம் தொடர்ந்து விழத்தான் வேண்டுமா?

நாம் ஒரு தேசத்தின் இரு தேசிய இனங்களாக அங்கீகரிக்கப்பட்டதுண்டு. நாங்கள் எங்களையும், எங்கள் தேசத்தையும் தற்காத்துக்கொள்ள வேண்டாமா? இரு இனங்களுக்குமிடையேயான புரிந்துணர்வும் நல்லடக்கமும் வேறு இப்போது அவசியம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நமது இராணுவ வலிமை அழிக்கப்பட்ட பின்பு, எமது உரிமைகளுக்கான போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்பு, எங்கள் பலவீனமான நிலைமையை மீறி மேலாதிக்கம் செலுத்துவதன் மூலம் ஒரு ஐக்கியத்தை உருவாக்கிவிட முடியும் என்ற ஒரு தவறான பார்வை உங்கள் மீது திணிக்கப்பட்டிருக்கலாம்.

இத்தகையதோர் பார்வையும் அதன் வேர்களில் இருந்து எழுந்த சிந்தனைப்போக்குமே நமது அறுபது வருட போராட்டத்திற்கும் முப்பது வருட ஆயுதப்போராட்டத்திற்கும் அடிப்படை என்ற உண்மையை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டிய காலமிது. மீண்டும் குருதி சிந்தும் நாட்களை உருவாக்கும் காரணிகளை தயவுசெய்து உங்கள் எண்ணங்களிலிருந்து தூக்கி தூர வீசிவிடுங்கள். அடக்குபவர்களுக்கும் அடக்கப்படுபவர்களுக்கும் இடையே ஐக்கியம் நிலவியதாக வரலாறு இல்லை. நிம்மதி கிடைத்ததாக உதாரணங்கள் இல்லை. நாங்கள் நாங்களாகவும் நீங்கள் நீங்களாகவும் கரங்கோத்து நின்று எங்கள் தேசத்தைக் கட்டியெழுப்புவோம்.

எங்கள் கழுத்தை உங்கள் கரங்கள் நெரிக்கவேண்டாம். உங்கள் கரங்களை எங்கள் பற்கள் காயப்படுத்த வேண்டாம். உங்களுக்கென ஒரு பாரம்பரிய வாழ் நிலம், மொழி, பொருளாதாரம், தனித்துவமான கலாச்சாரம் உண்டு. எமக்கும் இவை அனைத்தும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

அன்புக்குரியவர்களே! இலங்கை மக்களாகிய நாங்களும் நீங்களும் பேரழிவுகளைச் சந்தித்த அதேவேளையில் அந்நிய ஆயுத வியாபாரிகளும் தரகர்களும் கோடிகோடியாக இலாபம் வைத்து எம்மைக் கொள்ளையடித்தார்கள். இதுமட்டுமா போரின்போதும் அதன்பின்பும் எமக்குப் பலவித நெருக்கடிகளைக் கொடுத்து எமது மூலவளங்களையும் மனித உழைப்பையும் கொள்ளையிடுகின்றார்கள்.

புல்மோட்டையில் இல்மனைட் வளமும் கொள்ளையடிக்கப்படுகின்றது. வடக்கின் சுண்ணக்கல் வளமும் எண்ணெய் வளமும் இந்தியாவால் அபகரிக்கப்பட திட்டம் தீட்டப்பட்டுவிட்டன. இன்னொருபுறம் எண்ணெய் வளத்தைக் கொள்ளையிட ரஷ்யா ஒப்பந்தம் எழுதிவிட்டது. சேது சமுத்திர திட்ட மூலம் எமது கடல்வாழ் உயிரினங்களின் வளம் அழிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் கரங்களுக்கு போய்விட்டது. சுதந்திர வர்த்தக வலயம் அந்நிய முதலீடுகளைக் கவர்தல் என்ற பெயரில் எமது மக்களின் மனித உழைப்பு மலிவான விலையில் கொள்ளையிடப்படுகின்றது.

இலங்கை "பெண்களின் சொர்க்கம்" என்ற விளம்பரம் செய்யப்படும் அளவிற்கு உல்லாசப் பயணத்துறை என்ற பெயரில் கலாச்சார பாரம்பரியமூட்டல்களால் பெண்கள் கேவலப்படுத்தப்படுகின்றனர். பதினான்காயிரத்திற்கு மேற்பட்ட சிறுவர் சிறுமியர் வெளிநாட்டவரின் பாலிய வக்கிரத்திற்கு பலியாகி எதிர்காலத்தை இழக்கின்றார்கள்.

ஆம், எங்கள் மூலவளங்களும் மனித உழைப்பும் கொள்ளையிடப்பட்டு எமது தேசம் ஒட்டாண்டி நிலைக்கு தள்ளப்படுகின்றது. இப்பேராபத்தில் இருந்து எம்மை நாம் மீட்க நாம் உரிமை கொண்டு ஐக்கியப்பட்டு எழுச்சிபெற வேண்டும். இந்நாட்டில் பெரும்பான்மை சிறுபான்மை என எதுவுமில்லை என்பது வெறும் வெற்றுக்கோசமாக இருந்துவிடக்கூடாது. இனியும் அடக்குபவர்களோ அடக்கபடுபவர்களோ இல்லை என மிளிரப்படவேண்டும் என்பதே நமது அவாவாகும்.

நிற்க, இப்படியான ஒரு புறச்சூழலில் இப்போரின் கொடுமைகளையும் அதன் பின்னரான காலத்தில் கொடுமைகளையும் அனுபவித்துக்கொண்டிருக்கும் கிளிநொச்சி முல்லத்தீவு மாவட்ட மக்களின் இடர்களை கவனித்து களைவதில் முக்கிய பணி எனக்கு அதிகமாக உள்ளதாகவே நான் உணர்கின்றேன்.

நாம் போருக்கு நேரடியாகவே முகங்கொடுத்தவர்கள். இந்த போர் எங்கள் மீது விமானங்கள் குண்டுகளை வீசியது, எறிகணைகள் எங்கள் உடல்களை துளைத்தன. துப்பாக்கி வேட்டுக்கள் எங்களை துளை போட்டன. மரணம் எங்களை விரட்ட விரட்ட இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து ஓடினோம், போகுமிடம் தெரியாமலேயே வெட்டவெளிகளில் வீதியோரங்களிலும் கூடார வாழ்க்கையை ஏற்றோம். மீண்டும் மீண்டும் போர் எங்களை துரத்திய போதும் ஓடினோம். இருப்பினும் மரணங்களைத் தவிர்க்க முடியவில்லை. உடலுறுப்புக்கள் இழப்பதை தவிர்க்க முடியவில்லை. இறந்த உடல்களை எடுத்து புதைக்கவும் வழியின்றி ஓடினோம். உணவில்லை குடிக்க நீரில்லை இயற்கை கடன்களை கழிக்க இடமில்லை, அடுத்த நிமிட உயிர்வாழ்வு பற்றிய நம்பிக்கைக்கு இடமில்லை, முள்ளிவாய்க்காலுக்குள் மூன்றரை லட்சத்திற்கு மேற்பட்டோர் முடக்கப்பட்டோம்.

உலகின் நற்பண்புகளுக்கும் மனிதாபிமானமாக காட்டப்பட்ட நடவடிக்கைகள் எங்களை மரணக்குழிகளுக்குள் தள்ளின. இறந்தவர் போக எஞ்சியோர் நந்திக்கடல் தாண்டினோம். வவுனியாவில் அகதிமுகாமுக்குள் எங்கள் வாழ்வு முடக்கப்பட்டது. உணவுக்களஞ்சியமான வன்னிமண்ணில் உற்பத்தியைப் பெருக்கி மற்றவருக்கு உண்டி கொடுத்த நாம் ஒருபிடி சோற்றுக்கு கையேந்தி வரிசையில் நின்றோம். இன்று எம்மில் ஒரு பகுதியினர், ஆறு தகரங்களுடனும் ஆறுமாத நிவாரண பொருட்களுடனும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டோம். ஏனையோர் இன்னும் முகாம்களில்.

போர் முடிந்து ஓர் வருடம் ஓடிப்போய்விட்டது. எம் துயரங்கள் முடிய இன்னும் எத்தனை வருடங்கள் போகும் என்பது எமக்குள்ள கேள்வி. போராளிகள் என்ற பெயரில் இன்னமும் பல ஆயிரமவர் தடுப்புமுகாம் அவலங்களுக்குள் தவிக்கின்றனர். பெற்றோர்கள் தம் பிள்ளைகளைப் பார்த்துவிட மணிக்கணக்காக மழையிலும் வெயிலிலும் காத்துநிற்கின்றனர். இன்னும் எத்தனையோ பெண்களும் பிள்ளைகளும் எங்கேயென்று அறியமுடியாது உறவினர் அலைந்து திரிகின்றனர். ஒவ்வொரு நாளும் காயப்பட்டு சிகிச்சைக்காக உலங்குவானூர்தியில் ஏற்றப்பட்ட எத்தனையோ பேரை தேடி விளம்பரங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

இச்சபையில் பெருமைக்குரிய உறுப்பினர்களே! ஒரு ஜனநாயக தேசத்தில் இதுதான் எங்கள் வாழ்வு. இதிலிருந்து நாம் மீளெழ வேண்டும். அந்நிய தேசங்கள் நமது நாட்டின் மூலவளங்களையும் மனித வளங்களையும் கொள்ளையடிப்பதுடன் எமது இறைமையை நிறைவேற்றுவதுடன் பாதுகாக்கவும் நாம் உங்களுடன் ஒன்றிணைய காத்திருக்கின்றோம். ஆனால் நாம் மனிதர்களாக வாழும்போது மட்டும்தான் அது சாத்தியப்படும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாம் எல்லோரும் இந்நாட்டு மக்களென மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் வார்த்தைகளை நேசிக்க முயலுங்கள். உரிமை பறிக்கப்பட்டவர்களும் உரிமை பறிப்பவர்களும் ஒரே சகோதரர்களாக எப்படி வாழமுடியும்? எங்கள் சகோதர்களே! மக்கள் சார்பில் மீண்டும் நான் உங்களைக் கேட்பது, மீண்டும் எங்கள் வாழ்வை ஆரம்பிக்க எமக்கு வழிவிடுங்கள். உருளும் உலகப்பந்தின் இந்த அழகிய மாங்கனித் தீவிலே கிறிஸ்துவுக்கு முற்பட்ட கால வரலாற்று சிந்தனையை கைவிட்டு, இருபத்தோராம் நூற்றாண்டுக்குரிய நவீன சிந்த்னையின்படி இனப்பிரச்சினையை அணுகவேண்டும். சிங்கள மக்களும் தமிழ்பேசும் மக்களும் இலங்கைத் தீவின் இணை உரிமையாளர்களும் இணைப் பங்காளர்களும் என்ற மனப்பாங்குடன் ஒரு புதிய அரசியலை அணுக அரசாங்கம் தயாராக வேண்டும்.

தற்போது சிங்கள மக்களிடம் தமிழரை வெற்றிகொண்ட மனப்பாங்கும், தமிழரிடம் வேதனையும் வெறுப்பும் நிறைந்த நிலையும் காணப்படுகின்றது. ஒரே நாடு ஒரே மக்கள் என்று சொல்லிக்கொண்டே பூநகரி வெற்றி விழாவையும், கிளிநொச்சி வெற்றி விழாவையும், முள்ளிவாய்க்கால் வெற்றி விழாவையும் கொண்டாடிய தினமும், இனிவரும் நாட்களில் மே மாதம் 12ம் திகதி முதல் 18ம் திகதிவரை கொண்டாடப்படவுள்ள இராணுவ வெற்றிவிழாவும், தமிழர்களின் மனங்களை எப்படி உடைத்து சிதறிடிக்கப்போகின்றது என்பதை சிந்தியுங்கள். இராணுவத்தால் தீவு நிரம்பி வழிந்து ஒன்றுபட்டது போல் காணப்பட்டாலும், மனத்தால் தீவு இரண்டுபட்டே இருக்கின்றது. புத்தபகவான் பரிநிர்வாணம் அடைவதற்காக தவமிருந்தார் என்ற மகிமை சிங்கள மக்களுக்கு தெரியும்.

சுதந்திர இலங்கையில் இதுவரை இரண்டரை லட்சத்திற்கும் மேலான உயிர்களை இழந்து தமிழ்மக்கள் தமது உரிமைக்காக தவமிருக்கின்றார்கள் என்ற உண்மையை சிங்கள சகோதரர்களும் இந்த உலகமும் புரியும் நாள் வந்திருக்கின்றது. தன் சொந்த சகோதர இனத்துடன் அதிகாரங்களைப் பங்கிட்டுக் கொள்ள தயாரில்லாமல், அந்நிய நாடுகளிடம் கையேந்தி தனது சொந்த தமிழ் மக்களுக்கெதிரான அரசியலை வலைவீசி வரும் அரசாங்கங்கள் நடத்தியதன் விளைவாய் இலங்கைத் தீவை அந்நிய அரசுகளின் காலடிக்குள் சிக்குண்டிருப்பதையும் ஆட்சியாளர்கள் உணர இன்னும் எவ்வளவு காலம் எடுக்குமோ தெரியாது.

ஒரு இனத்தை எந்த இனம் ஒடுக்குகின்றதோ அந்த இனமும் அமைதியாக இருக்க முடியாது. அந்த நாடும் சுபீட்சம் அடைய முடியாது. அத்துடன் எம் ஓரினத்தை ஒடுக்க எடுத்த நடிவடிக்கைகளின் விளைவால் அந்நிய தேசங்களிடம் அடிமைப்பட்டு போகவும் நேரும். சுதந்திரமும் சுபீட்சமும் நிறைந்த இலங்கையை கட்டியெழுப்ப வேண்டுமென்றால், அது ஏனைய இனங்களின் தனித்துவ உரிமைகளை அங்கீகரிப்பதிலும் அவர்களுடன் அதிகாரங்களை பங்கிட்டுக்கொள்வதிலுமே அதனை ஆரம்பிக்க வேண்டும். அதற்கான துணிச்சலையும், தூரப்பார்வையையும், இன்றைய அரசாங்கம் முன்னெடுக்குமா என்பதே இன்றைய கேள்வியாகும்.

முதிர்ந்த அரசியல் அனுபவமிக்க சம்பந்தர் ஐயா தலைமையில் இதற்கான வாய்ப்பை அளிக்க எமது கட்சி தயாராக உள்ளது. இத்தகைய அரிய வரலாற்று வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நல்ல தீர்வை ஏற்படுத்தி, புதிய இலங்கையை கட்டியெழுப்ப அரசாங்கம் தயாராக வேண்டும். இதனை தவறவிட்டால், வரலாறு தான் விரும்பும் இன்னொரு திசைக்கு தீர்வை இட்டுச் செல்லும் என்பது திண்ணம்.

சுனாமியாலும் யுத்தத்தாலும் அழிந்து சின்னாபின்னப்பட்டிருக்கும் தமிழ்பேசும் மக்களின் மனங்களைப் புரிந்து அவர்களின் துன்பங்களைப் பகிர்ந்து அவர்களின் தனித்துவமான உரிமைகளை புரிந்து அதற்கேற்ப நியாய பூர்வமானதும் நீதியானதுமான தீர்வை காணவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. நாம் இரு சுதந்திரமான தேசிய இனங்களாக ஒரு நாட்டின் மக்களாக ஒன்றிணைந்து நம் தேசத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற பிரகடனத்தை மனமுவந்து நாம் அனைவரும் நினைப்போம் என்று கூறி என் கன்னி உரையை நிறைவு செய்கின்றேன்.

மின்னஞ்சல் - shritharan08@hotmail.com

படிவம்  CLICK HERE...

Thursday, April 29, 2010

இனையத்தில் வேகமாக உலவ டிப்ஸ்...

நம்மிடம் குறைந்த திறன் கொண்ட கணினி இருக்கும் அதனால் நாம் வேகமாக இனையத்தில் உலவ முடியாது கணினியில் மெமரியின் அளவை அதிகரித்தால் கொஞ்சம் மாற்றம் கிடைக்கும் இருப்பினும் பணம் செலவில்லாமல் சில மாற்றங்கள் கணினியில் செய்வதன் மூலம் கொஞ்சம் வேகத்தை அதிகரிக்கலாம் இந்த தகவல் இனையத்தில் உலவும் திறனை மட்டுமே மேம்படுத்தும்.

இங்கு நான் இரண்டு வழிமுறைகள் வழியாக கொஞ்சம் வேகத்தை அதிகரிக்கலாம் டெஸ்க்டாப்பில் இருக்கும் மை கம்ப்யூட்டரின் Properties தேர்ந்தெடுக்கவும் இப்போது புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் Hardware என்பதை கிளிக்கி Device Manager என்பதை திறக்கவும்.

இனி Device Manager என்பதை கிளிக்கிய பிறகு மீண்டும் ஒரு விண்டோ திறக்கும் அதில் Communication Port என்பதை டபுள் கிளிக் செய்தால் இப்போது மீண்டும் ஒரு விண்டோ திறக்கும் அதில் Port Settings என்பதை தேர்ந்தெடுத்து அதில் Bit Per Second என்பதில் 128000 என மாற்றவும் அடுத்து கீழே இருக்கும் Flow Control என்பதில் Hardware என மாற்றவும்.

என்ன அப்படியே செய்து விட்டீர்கள்தானே இனி ஓக்கே கொடுத்து வெளிவரவும் இனி அடுத்து என்ன செய்வது என பார்க்கலாம், இனி Start -> Run -> என்பதில் gpedit.msc என டைப் செய்து ஒக்கே கொடுக்கவும் இப்போது ஒரு விண்டோ திறக்கும் அதில் Local Computer Policy என்பதன் கீழே இருக்கும் Computer Configuration பகுதியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுக்கவும் அதில் Network என்பதை கிளிக்கி அடுத்ததாக QOS Packet Scheduler கிளிக்கவும் இனி வலது பக்கம் பாருங்கள் Limit Reservable Bandwidth என்கிற பெயர் இருக்கிறதா அதை டபுள் கிளிக் செய்யுங்கள் திறக்கும் விண்டோவில் செட்டிங்ஸ் டேப் திறந்து அதில் இருக்கும் Bandwidth Limit என்பதில் 0 என மாற்றிவிடுங்கள் அப்ளை கொடுத்து ஓக்கே கொடுத்து வெளியேறுங்கள் அவ்வளவுதான்.

இனி என்ன முன்பு இருந்த வேகத்திற்கும் இப்போது இருக்கும் வேகத்திற்கும் ஏதாவது மாற்றம் தெரிகிறதா பெரிய அளவில் மாற்றம் இல்லையென்றாலும் நிச்சியம் நீங்கள் அந்த மாற்றத்தை உணர்வீர்கள்.

Tuesday, April 27, 2010

ஸ்லிப்ஸ்ட்ரீமிங் (Slipstreaming) என்றால் என்ன???

சிலர் இப்படி அலுத்துக் கொள்வார்கள் – போன வாரம் இரவில் விண்டோஸ் சிஸ்டத்தை ரீ இன்ஸ்டால் செய்தேன். போதும் போதும் என்றாகிவிட்டது என்று சொல்லிவிட்டு, அவரே ஸ்லிப் ஸ்ட்ரீமிங் இருந்தால் கொஞ்சம் ஈஸியாக இருந்திருக்கும். சீக்கிரம் படுக்கைக்குப் போயிருக்கலாம் என்பார்.

விண்டோஸ் மிக ஈஸியாக இன்ஸ்டால் ஆகிவிடும். ஆனால் அதன் பின்னர், சர்வீஸ் பேக், லேட்டஸ்ட்டாக வந்த ஹாட் பிக்ஸ், அண்மையில் வந்த டிரைவர் தொகுப்புகள். என கணக்கிலடங்காத பின்னூட்டுகளை சிரமப்பட்டுத் தேடி இன்ஸ்டால் செய்திட வேண்டி இருக்கும். இல்லையேல் உங்கள் புரோகிராம்கள் இயங்காது. விண்டோஸ் முன்பு போலக் காட்சி அளிக்காது.

ஸ்லிப் ஸ்ட்ரீமிங் என்பது இந்த அலைச்சலுக்கும் தேடலுக்கும் ஒரு முடிவு கட்டுகிறது. ஸ்லிப் ஸ்ட்ரீமிங் என்பது ஒரு பூட்டபிள் சிடியில், நமக்குத் தேவையான லேட்டஸ்ட் டிரைவர் தொகுப்புகள், முழுமையான ஒரிஜினல் இன்ஸ்டலேஷன் பைல்கள், அப்போதைய சர்வீஸ் பேக் என அனைத்தையும் பதிந்து வைக்கும் செயல்பாடாகும். இந்த சிடியை வைத்துக் கொண்டால், விண்டோஸ் சிஸ்டம் தொகுப்பை ரீ இண்ஸ்டால் செய்வது முதல் அனைத்து வேலைகளையும் தானே மேற்கொண்டு விடும். இதனை எப்படி தயாரிப்பது?

இதற்கு முதலில் நமக்குத் தேவை விண்டோஸ் ஒரிஜினல் சிடி. இதனை முதலில் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் சி (C:/XP) டிரைவில் காப்பி செய்திடவும். உங்களுடைய சிஸ்டம் டிஸ்க்கில் லேட்டஸ்ட் சர்வீஸ் காப்பி இருந்தால் நல்லது. இல்லையேல் மைக்ரோசாப்ட் தளம் சென்று அதனையும் காப்பி செய்து அந்த டிரைவில் தனியான போல்டரில்பேஸ்ட் செய்திடவும். மைக்ரோசாப்ட் தளத்தில் என்ன என்ன ஹாட் பிக்ஸ் பைல்கள் கிடைக்கின்றனவோ, அவை அனைத்தையும் காப்பி செய்து பேஸ்ட் செய்திடவும்.
விண்டோஸ் சிஸ்டம் சிடியில் இல்லாத டிரைவர்கள் ஏதேனும் உங்களுக்குத் தேவை என்றால், அவற்றின் தளங்களுக்குச் சென்று அவற்றையும் இதே போல அந்த இரண்டாவது போல்டரில் காப்பி/பேஸ்ட் செய்திடவும்.

இப்போது ஸ்லிப் ஸ்ட்ரீமிங் செயல்பாடு இந்த இரண்டு போல்டரையும் ஒரு ஐ.எஸ்.ஓ. இமேஜ் மூலம் உருவாக்குவதன் மூலம் இணைக்கும். இதற்கு உதவக் கூடிய புரோகிராம் ஆட்டோ ஸ்ட்ரீமர் (AutoStreamer 1.0.33) என்பதாகும். இதனை கீழே உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.
இதனை டவுண்லோட் செய்து ஸ்லிப் ஸ்ட்ரீமிங் செய்திடப் பயன்படுத்தவும். இந்த வேலைகளை எல்லாம் மேற்கொள்ள சிறிது சிரமம் என்றாலும், விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்திடுகையில் மேற்கொள்ள வேண்டிய வேலைகளை எல்லாம் சுலபமாக மேற்கொள்ளலாமே.