Sunday, February 28, 2010

இலவசம் எனும் மாய நிழல் : உரத்த சிந்தனை.

எதிர்க்கட்சித் தலைவர், ஜெயலலிதா போனால் போகிறது பிழைத்துப் போங்கள் என்று, ஆறு மாதத்திற்குப் பின் சட்டசபைக் கூட்டத்துக்கு வந்து, தி.மு.க., அரசு மீது அடுக்கடுக்காக குற்றசாட்டுகளை அள்ளி வீசிவிட்டு, சென்றிருக்கிறார். அதில் முக்கியமானது, தமிழக அரசுக்கு உள்ள மொத்த கடன் சுமை 90 ஆயிரம் கோடி ரூபாய் என்பதும், பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் 15 ஆயிரம் ரூபாய் கடனுடன் பிறக்கிறது என்பதாகும்.

இவற்றுக்கு முதல்வர் கருணாநிதி, சில நாட்கள் முன், மறுப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், மொத்த கடன் 76 ஆயிரம் கோடி ரூபாய் தான் என்றும், பிறக்கும் குழந்தைக்கு 13 ஆயிரம் ரூபாய் தான் கடன் என்றும், கடன் வாங்காமல் எந்த அரசும் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார். அருமையான, மிக நல்ல விளக்கம் இது! "வரவு எட்டணா, செலவு பத்தணா, அதிகம் இரண்டணா, கடைசியில் துந்தனா' என்று தான் இது முடியும். தமிழக அரசுக்கு, 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன்; மத்திய அரசுக்கு, பல லட்சம் கோடி கடன். இவை அனைத்தையும், வெளிநாடுகளில் குறிப்பாக, சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள இந்திய அரசியல்வாதிகளின், ஊழல் மூலம் சம்பாதித்த பணம் 93 லட்சம் கோடி ரூபாயை மீட்டுக் கொண்டு வந்தாலே, நிமிடங்களில் அடைத்து விடலாம். இதைச் செய்ய, மத்திய அரசை வற்புறுத்தி இதுவரை தி.மு.க., எம்.பி.,க்களோ அல்லது அ.தி.மு.க., எம்.பி.,க்களோ பார்லிமென்டில் பேசி இருக்கின்றனரா என்றால், இல்லை என்பது தான் பதில். யாராவது தன் தலையில், தானே மண் அள்ளி போட்டுக் கொள்வரா?

"கடன் வாங்காமல் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாது' என்று, முதல்வர் சொல்வதற்கு காரணம், திருமணமாகாத பெண்களுக்கு திருமணச் செலவுக்கு அரசு மானிய உதவி, கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு மானியம், குழந்தைகளுக்கு இலவச சத்துணவு, இலவச பள்ளிப் படிப்பு, இலவச கல்லூரி படிப்பு, பெரியவர்கள் ஆனவுடன் இலவச வேட்டி, சேலை, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச காஸ் இணைப்பு, இலவச காஸ் அடுப்பு, குடிசைகளுக்கு இலவச மின்சாரம், இலவச நில பட்டா, இலவச வீட்டு மனைப்பட்டா, 40 வயது கூட நிரம்பாதவர்களுக்குகெல்லாம் முதியோர் பென்ஷன், செத்த பின் சுடுகாட்டு செலவுக்கு அரசு மானியம், இலவச "டிவி' இன்னும் பலப்பல.

இப்படிப்பட்ட இலவசங்களால், வெகு சீக்கிரமே தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படப் போகிறது; விவசாயம் பாதிக்கப்படப் போகிறது. இப்போதே தொழிற்சாலைகளில் வேலை செய்ய ஆள் கிடைப்பதில்லை. எல்லாம் இலவசமாக கிடைக்கும் போது, யாரும் வேலை பார்க்க தயார் இல்லை. அப்படியே ஆள் கிடைத்தாலும், அவர்கள் வழக்கத்தை காட்டிலும் அதிகமான சம்பளம் எதிர்பார்க்கின்றனர். அதிக சம்பளம் கொடுத்தால், உற்பத்திப் பொருட்களின் விலைவாசி தானாகவே உயரத்தான் செய்யும். இது தவிர, சமையல் காஸ் இணைப்பு போன்றவற்றை இலவசமாக கொடுத்து விட்டு, அதே நேரம், காசு கொடுத்து ரீபில் சிலிண்டர் வாங்க வருபவர்களுக்கு இல்லை என்று சொல்கின்றனர் அல்லது 25 நாட்கள் கழித்து தான் பதிவோம் என்கின்றனர். பதிந்த பின் 15 நாட்கள் கழித்து சிலிண்டர் கொடுக்கின்றனர். இலவசமாக கிடைக்கும், காசு கொடுத்தால் கிடைக்காது என்ற நிலைமை, உலகில் வேறு எங்காவது பார்க்க முடியுமா?

பொதுமக்களில் அனைத்து தரப்பினரையும் சாராயம் குடிக்க வைத்து, குடிகாரர்களாக்கி இதில் ஆண்டுக்கு கிடைக்கும் 10 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை, இலவச திட்டங்களுக்கு அரசு செலவிடுகிறது. மின்சார வாரியத்தில், நஷ்டத்தை மக்கள் செலுத்தும் வரிப்பணத்திலிருந்து, ஆண்டுக்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் மானியமாக வழங்குகிறது. இது தவிர, மத்திய அரசின், ஐந்தாண்டு திட்டப் பணிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்துக்கு கொடுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாயை, இலவச சத்துணவுத் திட்டத்திற்கும், இதர பிற இலவச திட்டங்களுக்கும் செலவழிக்கிறது. ஆக, ஐந்தாண்டுத் திட்டத்திற்கு திட்டமிடப்பட்ட பணிகள் எதுவும் செய்யப் படுவதில்லை. அப்படியே ஒருவேளை செய்தால், இருக்கவே இருக்கிறது, உலக வங்கியிடம் கடன் அல்லது வெளிநாடுகளில் கடன் அல்லது வேறு எங்கெல்லாம் கடன் வாங்க முடியுமோ அங்கெல்லாம் கடன். பின் ஏன், தமிழக அரசின் கடன் சுமை 76 ஆயிரம் கோடியைத் தொடாது? இப்படி, மேன்மேலும் கடன் வாங்கிக் கொண்டே சென்றால், எப்போது, எப்படி இந்த கடனையெல்லாம் அடைப்பது? அதுவரையில் இதற்கு செலுத்தும் வட்டித் தொகை எவ்வளவு ஆகும்?

இலவசங்களையும், மானியங்களையும் ரத்துச் செய்தால் தான், நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்று, முன்பு பேசிய பொருளாதார நிபுணரும், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரும், இந்நாள் இந்திய பிரதமருமான மன்மோகன் சிங், இங்கு நடக்கும் அத்தனை கூத்துக்களையும் வாய் திறவாமல், மவுனமாக பார்த்துக் கொண்டிருக்கிறாரே... ஏன்? ஓட்டு வங்கி அரசியல் தான் காரணம். ஆக்ஸ்போர்ட்டில் பயின்ற, ஆசியாவில் பொருளாதாரப் புலி என்று பெயர் பெற்ற, ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த போதும் சரி, இப்போதும் சரி, தமிழக அரசின் இலவசங்களைப் பற்றியும், மானியங்களைப் பற்றியும், வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. "மாறாக, இலவச "டிவி' திட்டமும், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டமும் சாத்தியமானது தான்' என்று புகழ்ந்துரைத்தார். காரணம், தானும், தன் வழித் தோன்றல்களும், தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும் என்ற ஆசையால் தான்.

ஆக, இப்போது எல்லா இலவச திட்டங்களுக்கும் சிகரமாக, பனிரெண்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் செலவில் 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் இலவசமாக கட்டித் தரப் போகின்றனராம். 1970ம் ஆண்டுகளில் கட்டிய குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி கட்டடங்கள் பல இடிந்து விழுந்து விட்டன. மீதமுள்ளவை, மிகுந்த சேதமடைந்து, எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், வெறும் களிமண்ணாலும், சுண்ணாம்பாலும், கற்களாலும், கரிகால் சோழ மன்னனால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கல்லணை இன்றளவும், காலத்தை வென்று நிற்கிறது. நெல்லை மாவட்டத்தில், அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சிக்கு இடையே தாமிரபரணி ஆற்றின் மேல் 1870ல் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் வெறும் செங்கல்லாலும், சுண்ணாம்பாலும் கட்டப்பட்டிருக்கும் ஒரு பழைய பாலத்தை பொதுப் பணித் துறையினர் இடிக்க முயற்சி செய்து, இடிக்க முடியவில்லை. பாலம், மிகவும் வலுவாக உள்ளது என்று, விட்டு விட்டுச் சென்றனர். அந்த பழைய பாலம் இன்றளவும், காட்சிப் பொருளாக உள்ளது.

அதே சமயம், கட்டி முடித்து 15 ஆண்டுகள் கூட நிறைவடையாத சமத்துவபுர வீடுகள் பல, பொல, பொலவென்று உதிர்ந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளன. இந்த நிலைமையில், மக்கள் பணம் பனிரெண்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாயை செலவு செய்து, 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டினால் அவை எப்படி இருக்கும். இப்படி அரசுப் பணம், அதாவது, மக்களின் வரிப்பணம், விழலுக்கு இறைத்த நீர் போல வீணாக போனால், அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள், சாலை வசதிகள், புதிய ரயில் பாதைகள் போட பணம் எங்கிருந்து ஒதுக்க முடியும்? சரி, ரயில்பாதை திட்டம் தான் இல்லை... நான்கு வழிச்சாலை திட்டமாவது தமிழகம் முழுவதும் நிறைவேறுமா? இவற்றை எல்லாம் எதிர்த்துப் போராட, இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கோ, வர்த்தக சங்கங்களுக்கோ, பிற பொது நல அமைப்புகளுக்கோ, எண்ணமோ, துணிவோ, திராணியோ இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.

மொத்தத்தில், இலவசங்கள், இன்று வேண்டுமானால் இனிக்கலாம்; பின்னாளில், இதன் விளைவுகளாக, வேலைக்கு ஆள் பற்றாக்குறை, தொழில்கள், விவசாயம் நசிந்து போதல், உணவு உற்பத்தி குறைவு, விலைவாசி உயர்வு, இன்னும் பல எதிர்பாராத பிரச்னைகளை தமிழகம் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது உறுதி. அதற்குள் தமிழர்கள் விழித்துக் கொண்டால் நல்லது.

                                              - டாக்டர்.வி.ராதாகிருஷ்ணன்

Saturday, February 27, 2010

China mobile வாங்க போறிங்களா???

உலகில் எந்த புதிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டாலும், சீனாவில் அதே மாதிரி குறைந்த விலையில் china product செய்து விற்க ஆரம்பித்து விடுவார்கள். mobile phone களும் அதற்கு விதி விலக்கல்ல. Apple Iphone கூட china phone versionல் கிடைக்கிறது. அதுவும் மிக மிக குறைந்த விலைகளில்.

இதுபோன்ற mobileகள் வாங்கும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக இந்தியாவில். ஏனென்றால்  December/2009 முதல் முறையான IMEI இல்லாத mobile phoneகளை தடை செய்யப்பட்டுள்ளது.  ( இந்த தடை தற்போது ஏற்கனவே UKவில் இருக்கிறது) . சரியான IMEI இல்லாத mobile phone களை உபயோகிக்க முடியாது.

IMEI என்றால் என்ன? International Mobile Equipment Identity என்பதன் சுருக்கமே IMEI. இது ஒவ்வொரு mobile phone க்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் தனி எண் ஆகும். ஒரு மொபைல் போனில் இருக்கும் IMEI வேறு மொபைல் போனில் இருக்காது. இருக்கவும் கூடாது. அப்படி இருந்தால் அது duplicated போன் ஆகும். சட்டப்படி தவறு. பொதுவாக china mobile களில் சரியான IMEI இருக்காது.

MEI எப்படி கண்டு பிடிப்பது?

இது ரொம்ப easy. உங்க போனில் battery யை கழற்றி விட்டு பார்த்தால், மொபைல் போனில் பிரிண்ட் செய்ய பட்டிருக்கும். அல்லது உங்கள் மொபைல் போனில் *#06# என்று டைப் செய்தால் உங்கள் போனின் IMEI தெரியவரும்.

என் IMEI சரியானதா என்று எப்படி கண்டு பிடிப்பது?

ரொம்ப simple. www.numberingplans.com என்ற web site க்கு போகவும். அங்கே உங்கள் IMEI கொடுத்து check பண்ணினால் உங்கள் IMEI நம்பர் valid ஆனதா என்று தெரிந்து விடும்.

மொபைல் போன் வாங்கும் போது கவனமாக இருங்கள்.

கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - பகுதி - 6.

ஹார்டிஸ்க் டேட்டாவை சேர்த்து வைக்கும் இடமாகவும் ஆபெரடிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்யவும் தேவைப் படுகிறது . ஹார்டிஸ்கில் உள்ள ப்லோட்டர்கள் 5400 rpm வேகக்தில்(தற்போது 7200 rpm வேகத்தில் சுற்றும் ஹார்டிஸ்குகள் கிடைகின்றன) சுற்றும் போது டேட்டா(பழைய கிராம போன் முறைதான் ) பதியப் படுகிறது. டேட்டாவானது ஃபில்லிங் முறையில் நிரப்பப் படுகிறது .

அதி வேகத்தில் ஹார்டிஸ்க் சுற்றுவதால் ஒரு file ஒரே இடத்தில் பதிந்து வைக்க வாய்ப்பில்லை , அது சிறு பாக்கெட் களாக மாற்றப்பட்டு பல இடங்களிலில் ஃபில்லிங் இன்ஸ்டால் செயப் படுகிறது . நாம் file திறக்கும் போது பல இடங்களில் உள்ள அதன் பாக்கெட்கள் ஒன்று சேர்க்கப்பட்டு பின் முழு வடிவம் பெற்று திரையில் file ஆக தோன்றுகிறது . கணிணியில் file ஓபன் செய்ய அதிக நேரம் எடுக்கும் போது டிஸ்க் defragmentation மூலம் பல இடங்களில் சிறு சிறு பாக்கேட்களாக உள்ள file ஆனது சுருக்கப்பட்டு மாற்றப்படுகிறது .
மேலே உள்ள ஹார்டிஸ்க் செர்வரில் பயன் படகூடிய scsi வகையானதாகும். இதற்கென்று தனியாக scsi கார்டு மதர் போர்டில் இணைக்கப்பட்டு பயன் படும் .

விலை சற்று கூடுதலானதால் அலுவலகங்களில் மட்டுமே பயன் பாட்டில் உள்ளது.

மேலே உள்ள ஹார்டிஸ்க் IDE வகையானதாகும் . பொதுவாக உபயோகத்தில் இருந்தாலும் தற்போது இதன் பயன் படு குறைந்து பொய் உள்ளது. டெஸ்க்டாப் கணிணியில் அதிகம் பயன் படுத்தப் படுகிறது.


பொதுவான பயன் பாட்டில் உள்ளது IDE ஹார்டிஸ்களை விட sata ஹார்டிஸ்கள் வேகமானவை . டெஸ்க்டாப் கணிணியில் பயன்படுத்தப்படுபவை . sata முன்னமே வந்து விட்டாலும் அது வேகம் குறைவானதாக கருதப்பட்டு IDE வகை பயன் படுத்தப்பட்டன. பின்னர் சிறிது மாறுதலுக்கு பிறகு sata வகை சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது. sata 1.5Gbits வரை டேட்டா transfer செய்ய கூடியவை .

அடுத்த கட்ட தொழில்நுட்ப முன்னேற்றமாக esata வகை ஹார்டிஸ்க்கள் வந்துள்ளன . இவை sata வகையை விட இருமடங்கு வேகமாக டேட்டா transfer செய்ய வசதியானவை .

ஹார்டிஸ்க் வாங்கும் போது வாரண்டி சரி பார்த்து வாங்க வேண்டும் . பொதுவாக ஹார்டிஸ்க் 3 வருட வாரேன்டி சில வகை 5 வருட வாரேன்டிஉடனும் வருகின்றன . சீகேட் மற்றும் வெஸ்டேர்ன் டிஜிட்டல் இரண்டும் அதிக பயன் பாட்டில் உள்ளவை .

DVD, ப்லோப்பி மற்றும் pen டிரைவ் களை விட ஹார்டிஸ்க் டேட்டாவை அதிக காலம் வைத்திருக்க உதவுகிறது .ஹர்டிச்க்களை கையாளும் போது மிகவும் கவன்முடன் கையாள வேண்டும். அதில் உள்ள ப்லோடேர்கள் சிறிது இடம் மாறினாலும் முழுவதும் வீணாகி விடும் . அதேபோல் அதிக சத்தம் ஹார்டிஸ்குகள் இருந்து வர ஆரம்பித்து விட்டால் உடன் உங்களது பேக்கப்களை எடுத்து கொள்ள வேண்டும். ஏனனில் எப்போது வேண்டுமானாலும் அந்த ஹார்டிஸ்க் தன்னுடைய இயக்கத்தை நிறுத்தி கொள்ளலாம் . அதே போல் பவர் fluctuation இருந்தாலும் , அதிக பார்மட் செய்தாலும் ஹார்டிஸ்க் தன் மூச்சினை நிறுத்திவிடும் .

NTFS (நியூ டெக்னாலஜி file சிஸ்டம் ), FAT32 என இரு வகைகளில் பார்மட் செயப்பட்டு இருந்தாலும் தற்போது NTFS அதிகம் உபயோகப் படுத்தபடுகிறது.

பார்மட் அடிப்பதை பற்றி ஆபெரடிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்யும் வகுப்பின் போது விரிவாக பார்க்கலாம்.

நாம் வாங்க போகும் ஹார்டிஸ்க் சீகேட் 500 gb - R.s 2700.

அடுத்த வகுப்பில் நாம் பார்க்கப் போவது DVD டிரைவ், keyboard மற்றும் மௌஸ் ....

கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - பகுதி - 5.

 நினைவு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் பரீட்சை எழுதும் போதோ , interview நேரத்திலோ அல்லது எதையாவது தேடும் போதோ உணர்ந்திடுவோம் .

நமக்கே நினைவு முக்கியமென்றால் நம் நினைவுகளை சேர்த்து வைக்கும் கணிணியின் நினைவு எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

நினைவுகளின் வகைகளை தற்போது மூன்றாக பிரிக்கலாம் . ஆனால் இவற்றில் அதிகம் பயன்படுத்தபடுவது ddr வகை ராம் களே.
அதிலும் இந்த ddr வகை ராமில் ddr 2 மற்றும் ddr 3 என இரு வகை பயன் படு உள்ளது. தற்போது அதிகம் வாங்கப் படுவது ddr 2 வகை ராமக இருந்தாலும் நமது மதர் போர்டு ddr 3 சப்போர்ட் உள்ளதாக பார்த்து வாங்க வேண்டும்.


நமது கணிணி அடிகடி restart ஆனாலோ அல்லது ஸ்டார்ட் ஆனவுடன் தொடர்ந்தோ அல்லது இருமுறை பீப் சவுண்ட் கேட்டால் இந்த ராமை நன்கு சுத்தம் செய்து ஸ்லோடில் போட வேண்டும் . அதே போல் கணிணி நினைவை அப்கிரேட் செய்யும் போது அது எத்தனை பஸ் ஸ்பீடோ அதற்கு ஏற்ற பஸ் ஸ்பீட் ராம் பார்த்து போட வேண்டும் . உதாரணமாக ddr 2 என்பது 667 mhz , 800 mhz அளவில் கிடைக்கிறது, அதே போல் ddr 3 1333 mhz அளவில் வருகிறது.

ஆபெரடிங் சிஸ்டத்தை பொருத்து முன்கூட்டியே மெமெரியை தேர்வு செய்து கொள்ள வேண்டும் .

நாம் வாங்கி அசெம்பிள் செய்யப் போகும் நினைவு Transcend ddr 2 2 GB(800 mhz) - 2100 rs.

அடுத்த வகுப்பில் நாம் பார்க்கப் போவது டேட்டாவை சேமித்து வைக்கும் இடமான ஹார்டிஸ்க்..

கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - பகுதி-4

மதர் போர்டு வாங்கும் போதே அதற்கு ஏற்ற ப்ரோசெசரை நாம் தேர்ந்தெடுத்து விட வேண்டும் . ப்ரோசெசர்கள் படி படியாக முன்னேற்றம் அடைந்து தற்போது core 2 quad என்ற அளவில் புழக்கத்தில் உள்ளன . ப்ரோசெசர்களில் ஒரு சிலவற்றை மட்டும் தற்போது தெரிந்து கொண்டால் போதும்.
பெண்டியம் 4 - வழக்கத்தில் இல்லை (வேண்டுமானால் விண்டோஸ் 98,2000 இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் )

dual core - ஒரு சில இடங்களில் மட்டும் (விலை குறைவாக செல்பவர்களுக்கு ) ஒபெரடிங் சிஸ்டம் xp க்கு போதுமானது

core 2 duo - பொதுவாக வாங்கப்படுவது (காமன் மேன்கள் வாங்குவது ஹிஹிஹி ) ஒபெரடிங் சிஸ்டம் விண்டோஸ் 7 க்கு தேவை

core 2 quad - சற்றே விலை கூடுதலானது .. high end என சொல்லலாம் விண்டோஸ் 7 மற்றும் சர்வர் களில் பயன்படும் .

Xeon - ப்ரோசெசர் கள் சர்வர் களில் பயன்படும்

mobile - ப்ரோசெசர் கள் லேப்டாப் களில் காணப்படும் ..

இதை தவிர AMD ப்ரோசெசர் களும் உபயோகப் படுத்தப் படுகின்றன .

கணிணி பாகத்தில் வெகு எளிதாக வெப்பமடையக் கூடிய பொருளாகும் . ஆகவே தான் இதன் மேலே heat sink and cooler fan பொருத்துகிறோம்.

2MB, 3MB cache எது வேணும் உங்களுக்கு கேட்டா குழம்பாதீங்க ... அது ப்ரோசெசர் மெமரி தான் . மெயின் மெமரி (ராம்) அதிகமாக பயன் படுத்தும் டேட்டா வை ஸ்டோர் செய்து வைத்து கொள்ளும் திறன் தான் L1 மெமரி எனப் படுகிறது.

L2 மெமரி என்பது மதர் போர்டு இல் சால்டர் செய்யப்பட்டு , அல்லது ஸ்லாட் -இல் வரக் கூடியாது .

நாம் வாங்கி அசெம்பிள் செய்யப் போகும் ப்ரோசெசர் இன்டெல் core 2 duo E7500 / 2.93 GHz இதன் விலை - 5,650 rs

அடுத்த வகுப்பில் நாம் பார்க்கப் போவது மெமரி (ராம்)...

Wednesday, February 24, 2010

சாதனை நாயகன் சச்சின் : ஒருநாள் போட்டியில் உலக சாதனையான இரட்டை சதம்.


சாதனை மன்னன் சச்சின்...

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக, குவாலியரில் நேற்று (24-02-2010) நடந்த, இரண்டாவது ஒருநாள் போட்டியில், 147 பந்தில் 3 சிக்சர், 25 பவுண்டரி உட்பட 200 ரன்கள் எடுத்து, புதிய உலக சாதனை படைத்தார், இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். இதன்மூலம் இவரது சாதனை பட்டியலில், மேலும் ஒரு புதிய மைல்கல் சேர்ந்தது.

ஒருநாள் அரங்கில் அதிக ரன் மற்றும் அதிக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் சச்சின், முன்னிலை வகிக்கிறார்.

சச்சின் (இந்தியா) : 442போட்டி  17598ரன்  46சதம்  93அரைசதம் எடுத்துள்ளார்.

இது குறித்து தெண்டுல்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

இரட்டை சதம் அடிப்பேன் என்று நான் நினைத்தது இல்லை. 175 ரன்னை தொட்ட போது தான் எனக்கு அந்த ஆர்வம் ஏற்பட்டது. அப்போது 42 ஓவர் தான் முடிந்து இருந்தது. இந்த வாய்ப்பு கிடைத்ததும் ஒவ்வொரு ரன்னாக எடுக்க முடிவு செய்தேன். ஏனென்றால் மறுமுனையில் டோனியின் அதிரடி ஆட்டத்தை வெகுவாக ரசித்தேன்.

200 ரன்னை அடித்ததை எப்படி உணர்வது என்றே எனக்கு தெரியவில்லை. 20 ஆண்டு காலமாக எனக்கு ஆதரவு தந்த இந்திய மக்களுக்கு இந்த இரட்டை சதத்தை அர்ப்பணிக்கிறேன்.

எனது ஆட்டம் மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. பந்து சரியான முறையில் மட்டையில் பட்டது. சாதனைக்காக நான் ஆடவில்லை. அது தானாக நடக்கிறது. நான் எப்போதுமே சாதனைக்காக ஆடியது கிடையாது. 200 ரன் எடுத்தது மிகவும் சிறப்பானது.

எனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள் அனைவரையும் மதிக்கிறேன். அவர்களது வாழ்த்து எனக்கு மிகவும் முக்கியம். 199 ரன்னில் இருந்த போது நெருக்கடி எதுவும் இல்லை.

நான் 50 ஓவர்கள் வரை நின்றது மகிழ்ச்சியை தருகிறது. எனது உடல் தகுதிக்கு கிடைத்த நல்ல சோதனையாகும்.

நான் 150 ரன்னில் இருந்த போது 350 முதல் 360 ரன் வரை எடுக்க முடியும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் யூசுப்பதானும், டோனியும் அதிரடியாக ஆடி 400 ரன்னை குவிக்க காரணமாக இருந்தார்கள். யூசுப்பதான் ஆட்டத்தை மாற்றினார். டோனி அருமையாக நிறைவு செய்தார். தினேஷ் கார்த்திக் பேட்டிங்கும் சிறப்பாக இருந்தது.

இவ்வாறு டெண்டுல்கர் கூறினார்.

Sunday, February 21, 2010

கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - 3

கேபினெட் SMPS அடுத்து நாம் பார்க்க போகும் முக்கியமான கணிணி பாகம் மதர்போர்டு . அப்படி என்ன இந்த மதர் போர்டில் இருக்கிறது என்று பார்த்தால் ஒட்டு மொத்த கணினியின் அணைத்து வேலைகளுமே இங்கிருந்து தான் தொடங்கி முடிகின்றன .


மதர் போர்டில் பல வகைகள் இருந்தாலும் அதிகமாக புழக்கத்தில் உள்ளது இன்டெல் வகை போர்ட்களே . விளையாட்டு பிரியராக இருந்தால் AGP ஸ்லாட் உள்ளதாக வாங்க வேண்டும் . படங்கள் அதிகமாக பார்பவராக இருந்தால் HDMI (High-Definition Multimedia Interface) சப்போர்ட் உள்ளதாகவும் , இசை பிரியர்களுக்கு சவுண்ட் கார்டு சப்போர்ட் உள்ளதாகவும் 5:1 அல்லது 7:1 ஸ்பீக்கர் சப்போர்ட் உள்ளதாகவும் வாங்கலாம் .

ராம் சப்போர்ட் ddr3 இருகிறதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். மதர் போர்டு வாங்கும் போது ப்ராஸ்ஸசர்(பொதுவாக LGA775) சப்போர்ட் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் . usb சப்போர்ட் 2 இருகிறதா மற்றும் sata ஹர்டிச்க் சப்போர்ட் செய்யுமா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதில் பல பெயர்கள் சிலருக்கு புதியவையாக இருக்கும் அடுத்தடுத்து வரும் வகுப்புகளில் அவற்றை பற்றி விளக்கமாக பார்கலாம் .

மதர் போர்டு failure ஆனால் உடனே காட்டி கொடுப்பது கண்டன்சர்களே . செயல் இழந்த கண்டன்செர்கள் சற்று உப்பி அல்லது வெடித்து காணப் படும் . மதர் போர்டு உடன் வரும் மதர்போர்டு cd யை எப்போதும் இன்னொரு காப்பி எடுத்து கொள்ளவும் .

அலுவலகத்திற்கு கணிணி வாங்குவோர் லேன் போர்ட் உள்ள போர்டு தேர்ந்தெடுக்கவும் .தற்போது வரும் எல்லா போர்ட்களிலும் லேன் போர்ட் வருகிறது. parallel போர்ட் சப்போர்ட் செய்வதாகவும் இருக்க வேண்டும் ஏனனில் மென்பொருளுக்கு வரும் லைசென்ஸ் key சிலவை parallel port சர்ந்தவையே .

விளையாட்டு பிரியர்கள் அதிகமா வாங்குவது Nvidea கிராபிக்ஸ் கார்ட்களே . இவை தவிர ATI, ASUS உள்ளன . அதேபோல் இசை பிரியர்கள் நாடுவது creative அல்லது யமஹா சவுண்ட் கார்ட்களே .

எப்பெல்லாம் உங்க கணிணி தப்பா நேரத்த காட்டுதோ அப்ப உடனே உங்க மதர் போர்ட்ல இருக்கிற cmos battery ய மாத்திருங்க . இந்த cmos (complementary metal oxide semiconductor) வேலை என்னன்னா உங்க கணிணியின் போர்டு,ராம் ஹார்டிஸ்க் ஆகியவற்றின் வகைகளையும், நேரம் மற்றும் நாளையும் சேமித்து வைத்து கொள்ளும்.

நாம அசெம்பிள் செய்ய வாங்க போகும் மதர் போர்டு இன்டெல் G41 DG41KR, Rs - 4500.

அடுத்த வகுப்பில் நாம் பார்க்க போவது கணிணியின் இதயமான ப்ராஸ்ஸசரை பற்றி.

                                                     நன்றி - மகா.

கணிணி- நாமே அசெம்பிள் செய்வது எப்படி - 2

SMPS : SWITCH MODE POWER சுப்ப்லி
காபினெட் உடன் இணைக்கப் பட்டருக்கும் இதன் வேலை நம் அன்றாடம் உபயோகப் படுத்தும் மின் அளவான 240 வோல்ட் மின்சாரத்தை 12 வோல்ட் DC ஆக மாற்றி மதர் போர்டு க்கு அனுப்பும் வேலையை செய்கிறது . சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு கன்வெர்ட்டர் . இதை AT மற்றும் ATX என இரு வகை யாக பிரிக்கலாம் . தற்போது ATX வகை கேபினட்களே பயன் படுத்தப்பட்டு வருகிறது. SMPS வேலை செய்யும் விதம் படமாக கிழே



SMPS விலை Rs - 450 - 5100
நாம் அசெம்பிள் செய்ய வாங்க போகும் SMPS Zebronics 400 வாட்ஸ்  Rs - 500.

                                                       நன்றி - மகா. 

Friday, February 19, 2010

திருப்பதி ஏழுமலையான் ஆலய வியப்பூட்டும் விஷயங்கள் மற்றும் ரகசியங்கள்.

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன..அவைகளில் சில...

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்பு ஏற்படுவதில்லை.

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் ..ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்

23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்

25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.

              -நன்றி: ஸ்ரீ ஆஞ்சநேயர் விஜயம் (செப்டம்பர் 2009)

கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - 1

அட எவ்வளவு நாளைக்கு தான் நாம் மற்றவர் கையை எதிபார்ப்பது. மகாத்மா சொன்னது போல முடிந்த அளவு நாமே நாம் வேலைகளை தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா.

இது கலி யுகம் மட்டும் அல்ல கணிணி யுகம் கூட தான் . முன்பு தொலை காட்சி இல்லாத வீடு வீடு இல்லை தற்போது கணிணி இல்லாத வீடு வீடு இல்லை என்றாகி விட்டது . அப்படி இரண்டற கலந்து விட்ட கணினியை கடை தெருவில் விற்கும் கத்திரிக்காய் மாதிரி கூவி வித்தவுடன் ஓடி போய் வாங்கி விட கூடாது .

ஒவ்வருவருக்கும் ஒரு தேவை இருக்கும் நாம் செய்ய போகும் வேலைகளுக்கு ஏற்ப உள்ள கணினியை தேர்ந்தெடுக்க வேண்டும் . மாணவர்களுக்கு , அலுவலகத்திற்கு , விளையாட்டு பிரியர்களுக்கு , இணையப் பயன் பாட்டுக்கு , கணிணி வல்லுனர்களுக்கு , இசை பிரியர்களுக்கு , பொது தேவைக்கு என பலவாறாக இருந்தாலும் நாம் அசெம்பிள் செய்ய போவது ஒரு பொது பயன் பாடுள்ள கணிணியை தான் .

முதல் வகுப்பு என்பதால் எளிதாக தொடங்க நினைக்கிறேன் , எனவே நாம் கேபினெட் என்பதில் இருந்து தொடங்குவோம் . இந்த கேபினெட் தான் சென்டரல் ப்ரோசெசசிங் யுனிட் என்பதை தன்னகத்தே கொண்டுள்ளது .



இதில் சென்ட்ரல் ப்ரோசெசசிங் என்பது கேபினெட் ,இன்புட் என்பது கீபோர்ட் ,மௌஸ் , ஔட்புட் என்பது மானிடர் ஆகியவற்றை குறிக்கும் . மெமரி என்பது கணினியின் நினைவகத் திறன் . இந்த கேபினெட் உள்ளே தான் SMPS, மதர் போர்டு , ஹார்டிஸ்க் , மெமரி , ரைட்டர் , ப்லோப்பி டிரைவ்,cooler fan என அனைத்தும் இணைக்கப் பட்டு இருக்கும் . சரி கேபினெட் அப்பிடினா என்னானு பார்த்தோம் அது எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க படம் கிழே

கேபினெட் வாங்கும் பொது சைடு பகுதியில் , மற்றும் பின் பகுதியில் பேன் வைக்கும் ஆப்ஸன் உள்ளதாக வாங்க வேண்டும் . ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் இந்த கேபினெட் மட்டும் சரி இல்லை என்றால் பேஸ்மென்ட் சரி இல்லாத வீடு மாதிரி தான் .

கேபினெட் விலை Rs-900  - Rs-2500 (சென்னை விலை)
நாம் அசெம்பிள் செய்ய வாங்க போகும் கேபினெட் zebronics விலை Rs-1000.
அடுத்த வகுப்பில் நாம் பார்க்க போவது கேபினெட் உடன் வரும் SMPS பற்றி.

                                                            நன்றி - மகா.

Wednesday, February 17, 2010

நல்ல கேமரா வாங்க உதவும் பிகாசா தளத்தின் வசதி.

நீங்கள் கேமரா அல்லது கேமரா வசதி உள்ள மொபைல் வாங்கப்போவதாக வைத்துக் கொள்ளுவோம். அந்த கேமராவில் எடுக்கப்படும் புகைப்படங்கள் எப்படி இருக்கும்? என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும்.

உங்கள் நண்பர்கள் அந்த கேமரா வைத்து இருந்தால் நீங்க அவற்றை உபயோகித்து பார்த்து அவற்றின் புகைப்படங்களின் துல்லியத்தை அறிந்து கொள்ளலாம். அல்லது இணையத்தில் பல்வேறு கேமராக்களில் எடுத்த புகைப்படங்களின் மாதிரிகளை சிலர் தரவேற்றி இருப்பர். அவையும் மிகக் குறைவான அளவிலேயே உள்ளன.

அவற்றை கேமரா மாடல் எண்ணை கூகுளில் தேடி கண்டுபிடித்து பல காமெராக்களின் புகைப்படங்களை ஒப்பிட்டு கொள்ளமுடியும். நீங்கள் விரும்பும் கமெராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில நேரம் கிடைக்காமல் போகலாம். ஆனால் தற்போது அதிக புகைப்படங்களுடன் உள்ள ஒரு தளம் புகைப்படங்களை கேமரா மாடல் வாரியாக பிரித்துக் காட்டுகிறது.

கூகிள் பிகாசா இணையதளம். பயனர்கள் புகைப்படங்களை தரவேற்றி கொள்ளும் சேவையையை வழங்குகிறது என்பதனை பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள். அங்கே உள்ள புகைப்படங்களை நீங்கள் பார்த்த்துக் கொள்ள முடியும். இப்போது புது வசதியாக நீங்கள் அங்கே குறிப்பிட கேமரா மாடலில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தேடி பார்த்துக் கொள்ளலாம்.

Picasaweb இணைய தளத்திற்கு சென்று கொள்ளுங்கள். அங்கே நீங்கள் தேட விரும்பும் புகைப்படங்களை தேடுங்கள். உதாரணத்திற்கு நான் 'india' என்று தேடுகிறேன். எல்லா புகைப்படங்களும் தோன்றும். இடது புறத்தில் 'Show Options' கிளிக் செய்து கொண்டு, அங்கே காமெரா மாடலை தேர்வு செய்து கொண்டு எண்டரை தட்டுங்கள். நீங்கள் விரும்பிய கமெராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தோன்றும்.

Sony DSC-W50 இல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கே. Canon EOS 40D -இல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கே. மொபைல் போன் கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மொபைல் மாடல் கொடுத்து தேடுவதன் மூலம் பெறலாம். Sony Ericsson K800i மொபைல் மூலம் எடுக்கபட்ட புகைப்படங்கள் இங்கே.

இவ்வாறு கேமரா மாடல்களை குறிப்பிட்டு அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒப்பிட்டு உங்களுக்குத் தேவையான மிகச்சரியான காமெராவை தேர்ந்தெடுத்துக் கொள்ள பிகாசாவின் இந்த வசதி உதவுகிறது.

Saturday, February 13, 2010

ஏன் வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது...

நம் நாட்டில் வடக்கில் தலை வைத்து படுத்தால் ஆகாது என்பார்கள். இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியா பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடாகும். இந்த அமைப்பில் உள்ள நாடுகளில் வடதிசையில் காந்த ஈர்ப்பு அதிக மிருக்கும். இதனால், இத்திசையில் தலை வைத்துப் படுக்கும் போது, தேவைக்கு அதிகமாக மூளைக்கு ரத்தம் பாயும். இதனால் மனப் போராட்டம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக அதிகப்படியான வேலை அல்லது கடுமையான உடற் பயிற்சி செய்து விட்டு, ஓய்வெடுக்கும் போது வடக்கில் தலை வைக்கவே கூடாது. இதனால் மனதில் பதட்டம் அதிகரிக்கும்.

அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நிலாவின் ஈர்ப்பு அதிகமாக இருக்கும். அப்போது பூமியில் உள்ள கடல் போன்ற பெரிய சக்திகள் கூட, மேல் நோக்கி இழுக்கப்படும். எனவேதான், இந்நாட்களில் கடல் அலைகள் வழக்கத்தைவிட அதிகமாக மேலே எழும்பும். இதைப்போலவே, வடக்கில் தலை வைத்துப் படுக்கும்போது, ரத்த ஓட்டமும் மூளைக்கு அதிகமாக இழுக்கப்படும். இதனால் மூளை பாதிப்பு ஏற்படும். எனவே, வடக்கில் தலை வைத்து படுக்கக்கூடாது.

பூமத்திய ரேகைக்கு கீழுள்ள தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் காந்த ஈர்ப்பு தென்திசையில் இருக்கிறது. எனவே, இந்நாடுகளில் தெற்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது

சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்...

* உங்களின் வாழ்வின் அனுபவமே, நீங்கள் வாழ்க்கையில் ஆழமாக ஈடுபடுவதில் தான் இருக்கிறது. ஈடுபாட்டுடன் நீங்கள் செய்பவை எல்லாம் எப்போதும் ஆனந்தமாக உள்ளதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? ஆழமான ஈடுபாடு இருந்தாலொழிய வாழ்க்கையின் அழகை உங்களால் அறிந்து கொள்ள முடியாது.

* யார் வேண்டுமானாலும் கடவுளை நேசிக்கலாம். ஏனெனில் கடவுள் யாரிடமும் எதுவும் கேட்பதில்லை. ஆனால், இந்தக்கணம் உங்கள் அருகில் இருப்பவரை நீங்கள் நேசிப்பதற்கு நீங்கள் உங்கள் வாழ்க்கையையே விலையாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதுதான் சவால். இதைச் செய்வதற்கு மிகவும் தைரியம் தேவைப்படுகிறது.

* மனிதராகப் பிறந்துவிட்டால் நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் வாழ்கிறீர்களோ, அதிலேயே சிக்கிவிடக்கூடாது. உங்களுக்கான சூழ்நிலைகளை நீங்கள் தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சூழ்நிலைகளின் தாக்கத்தில் வாழ்வது விலங்கின் தன்மை, மனிதரின் தன்மை, சூழ்நிலைகளை உருவாக்குவது!

* உங்கள் வாழ்க்கையில் அழகான சூழ்நிலைகள் வருகின்றன. கொடுமையான சூழ்நிலைகள் வருகின்றன. உங்களுக்கு ஒரே வாய்ப்பு தான். அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி நீங்கள் மேலும் சிறந்தவராக, வலிமையானவராக மாறலாம் அல்லது உடைந்து நொறுங்கிப் போகலாம்!

                                    -   சத்குரு ஜக்கிவாசுதேவ்

பணத்தை தலையில் சுமக்காதீர்!

* உங்களைச் சுற்றியுள்ள உன்னதத்தை உணர நீங்கள் தவறி விட்டால், உங்கள் மூளை ஒரு நரகத்தை உருவாக்கக் கூடும். ஒவ்வொரு நாளும் அது புதிது புதிதாய் நரகங்களை உருவாக்கும்.

* சுவாசம் என்பது வெறும் காற்றை உள்வாங்கி வெளிவிடும் அர்த்தமற்ற செயல் அல்ல. ஒவ்வொரு சுவாசத்திலும் இருக்கிற படைப்பின் பரிமாணங்களையும் படைத்தவனையும் புரிந்து கொள்ளத் தவறி விட்டு, மனதில் தேவையற்ற விஷயங்களுக்கு முக்கியமான இடம் கொடுத்து நேரத்தை வீணடிக்கிறீர்கள்.

* உங்களால் முடியாத ஒன்றைச் செய்யவில்லை என்றால் ஒரு பிரச்னையும் இல்லை. உங்களால் முடியக்கூடிய ஒன்றைச் செய்யாமல் விடுவதுதான் துயரமான ஒன்று.

* அதிக செல்வம் துன்பத்தை தராது. சட்டைப்பையில் நிறைய பணம் இருப்பது ஒரு விதத்தில் நல்லது. ஆனால், அந்தப்பணம் உங்களுடைய சட்டைப்பையில் தங்காமல் தலைக்கு மேல் ஏறும் போதுதான் துன்பம் வரும். பணம் அப்படி தலைக்கு மேல் ஏறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அதனுடைய இடம் அது அல்ல.

-சத்குரு ஜக்கிவாசுதேவ்

திருநீறு அணிவது ஏன்!

நாம் வெளியில் செல்லும் போது, அங்கு இருக்கும் அதிர்வுகளை பலவழிகளில் நம் உடல் ஏற்றுக் கொள்கிறது. இது நம் உடலின் ஏழு சக்கரங்கள் வழியாக நிகழ்கிறது. அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில் இருந்து வருகிறது. பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்த கலவையின் சாம்பல் தான் விபூதி அல்லது திருநீறு. இதற்கு அதிர்வுகளை உள்வாங்கும் திறன் உண்டு. விபூதி இட்டுக் கொள்ளும் போது, வாழ்வின் உயர்ந்த அம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் தெய்வீகத் தன்மை உண்டாகும். இதனால், தீயவற்றைத் தவிர்க்க முடியும்.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்

1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம்.

மேலும், விபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

சத்குரு ஜக்கிவாசுதேவ்.

Friday, February 12, 2010

அம்மாவுக்கு வைரமுத்து கவிதை... (காதலர் தின ஸ்பெஷல்).

வைரமுத்துவின் "காதலித்து பார்"...

இருவர் பட கவிதை,,,

உண்னோடு நானிருந்த‌ ஒவ்வொரு ம‌ணித்துளியும்
ம‌ர‌ண‌ப்ப‌டுக்கையிலும் ம‌ற‌க்காது க‌ண்ம‌னியே...
தொன்ணுறு நிமிட‌ங்க‌ள் தொட்ட‌னைத்த‌ கால‌த்தால்
என்ணூறு ஆண்டுக‌ளாய் இத‌ய‌த்தில் க‌ண‌க்குத‌டி...
பார்வையிலெ சில‌ நிமிட‌ம்...
ப‌ய‌த்தொடு சில‌ நிமிட‌ம்...
க‌ட்டி அனைத்த‌ப‌டி க‌ண்ணீரில் சில‌ நிமிட‌ம்...
இல‌க்க‌ண‌‌மே பாராம‌ல் எல்லா இடங்க‌ளிலும்
முத்தங்க‌ள் விதைத்த‌ முக‌த்தில் சில‌ நிமிட‌ம்...

உண்னோடு நானிருந்த‌ ஒவ்வொரு ம‌ணித்துளியும்
ம‌ர‌ண‌ப்ப‌டுக்கையிலும் ம‌ற‌க்காது க‌ண்ம‌னியே...
எது நியாய‌ம் எது பாவ‌ம்
இருவ‌ருக்கும் தோன்ற‌வில்லை...
அது இர‌வா? அது ப‌க‌லா?
அதுப‌ற்றி அறிய‌வில்லை...
யார் தொடங்க? யார் முடிக்க‌?
ஒரு வ‌ழியும் தோன்றவில்லை...
இருவ‌ருமே தொடங்கிவிட்டோம்
இதுவ‌ரைக்கும் கேள்வி இல்லை...
அச்ச‌ம் க‌லைந்தேன்
ஆசையினை நீ அனிந்தாய்...
ஆடை க‌லைந்தேன்
வெட்க‌த்தை நீ அனிந்தாய்...
............. ....... .........
க‌ண்ட‌ திருக்கோல‌ம் க‌ண‌வாக‌ ம‌றைந்தாலும்
க‌டைசியிலே அழுத‌ க‌ண்ணீர்
கையில் இன்னும் ஒட்டுத‌டி.

உண்னோடு நானிருந்த‌ ஒவ்வொரு ம‌ணித்துளியும்
ம‌ர‌ண‌ப்ப‌டுக்கையிலும் ம‌ற‌க்காது க‌ண்ம‌னியே...

உண்னோடு நானிருந்த‌ ஒவ்வொரு ம‌ணித்துளியும்
ம‌ர‌ண‌ப்ப‌டுக்கையிலும் ம‌ற‌க்காது க‌ண்ம‌னியே...

                                            ******

Thursday, February 11, 2010

இந்த வலியை உங்களால் உணரமுடிகிறதா.......??????

Tuesday, February 9, 2010

பன்னாட்டு நிறுவன ஆய்வுக் கூடங்களின் எலிகளா இந்தியர்கள்?

சாமானியனின் அறிவுக்கெட்டாத சில விஷயங்கள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அவை தெளிவாக்கப்படாமலேயே அவன் மீது திணிக்கப்படுகின்றன என்பது தான் கசப்பான உண்மை.

தற்போது, விவசாயிகள் மத்தியில் தகித்துக் கொண்டிருக்கும் மரபணு மாற்ற பி.டி., கத்தரிக்காய் விவகாரமும் இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது."மண்ணுக்கடியில் இருக்கும் பாக்டீரியாவிலிருந்து எடுக்கப் படும் மரபணுவைக் கொண்டு தயாரிக்கப்படும் விதையிலிருந்து வரும் கத்தரிச் செடியின் காய், பூ, இலை, தண்டு என எதைக் கடித்தாலும் புழு செத்து விடும் அளவுக்கு செடி முழுவதும் விஷம் நிறைந்திருக்கும். இதுதான் பி.டி., தொழில் நுட்பம்' என, அறிவியலின் அடிப்படையிலிருந்து பேசுகின்றன விவசாய சங்கங்கள்.ஆனால், "இது அறிவியல், தொழில்நுட்பம். இதெல்லாம் விவசாயிகளுக்குப் புரியாது; இதனால் பலன் அதிகம்னு தெரிஞ்சா எந்த சங்கம் சொன்னாலும் விவசாயிகள் கேட்க மாட்டார்கள். இதத்தான் உபயோகப்படுத்துவாங்க... இப்ப போராடறவங்க, விவசாயிகளே கிடையாது...' என, விவசாயப் பல்கலை தலைமை பேசுகிறது.

மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துவது குறித்த விவகாரம், தேசிய அளவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தற்போது விவாதப் பொருளாகியிருக்கும் கத்தரிக்காய் தான், மரபணு மாற்றப்பட்ட முதல் உணவுப் பொருளாகும்.கத்தரியில், "பேசில்லஸ் துரிஞ்சினியஸ்' என்னும் பாக்டீரியாவிலுள்ள விஷத்தை உருவாக்கும் தன்மையுடைய மரபணு, கத்தரி விதையில் செலுத்தப்படுகிறது. கத்தரிச் செடியில் உள்ள இந்த விஷம், அதைச் சாப்பிடும் சிறிய புழு, பூச்சி, பட்டாம்பூச்சி உள்ளிட்டவற்றை அழிக்கும் தன்மை வாய்ந்நது.அதுவும், தாவரம் அல்லாத ஒன்றை (பாக்டீரியாவின் மரபணு) கத்தரிக்காய்க்குள் புகுத்திச் செய்யும் தொழில் நுட்பம் என்பதால், இது விவசாயிகளையும், நுகர்வோரையும் வெகுவாகக் குழப்பியுள்ளது. இந்த உயிரணு மாற்றங்கள் அந்த தாவரத்தில் பல ரசாயன மாற்றங் களை ஏற்படுத்தி, அதனுடைய செயல்பாட்டில் மாறுதலை உருவாக்கும்.

கண்ணையன் (உறுப்பினர், தென்னிந்திய விவசாய இயக்கங்கள் ஒருங்கிணைப்புக் குழு):மக்கள் வரிப்பணத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளாகச் செயல்படுகின்றன. கத்தரிக்காய் நம் நாட்டின் சொத்து என்பதை மறந்து, தொழில்நுட்பம் என்ற பெயரில், நமது விவசாயத்தை படிப்படியாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் முயற்சி நடந்து கொண்டிக்கிறது.அமெரிக்க விதை நிறுவனமான மான்சான்டோவின் கண்டுபிடிப்பு தான் இந்த மரபணு மாற்றத் தொழில்நுட்பம். இதன் உரிமத்தைப் பெற்றுள்ள இந்திய நிறுவனமான மஹிகோ நிறுவனம், இந்த தொழில்நுட்பம் குறித்து பெரிதாக ஆராய்ச்சி எதுவும் செய்யாமலேயே நமது விவசாயிகளிடம் திணிக்கப் பார்க்கிறது.இந்த பி.டி., தொழில்நுட்பத்தில், மருந்து, கத்தரிக்காயின் உள் பகுதிவரை ஊடுருவிச் சென்று தாக்கும் தன்மையுடையது. இதனால், பூச்சி மருந்தின் விஷத்தன்மை காயைப் பாதிப்பதால், அதை உட்கொள்வோருக்கு அலர்ஜி, மலட்டுத்தன்மை, கேன்சர் உள்ளிட்ட நோய்கள் தாக்கும் வாய்ப்புள்ளது.இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், இந்த குறிப்பிட்ட மரபணு இந்த ஒரு வகை புழுவை மட்டுமே அழிக்கும். இது தவிர கத்தரியைத் தாக்கக் கூடிய வேறு 7, 8 வகையான நோய்களுக்கு அதற்குண்டான மருந்தை அடித்தே ஆகவேண்டும். அதிக விளைச்சல் கொடுக்கக் கூடிய தன்மையும் இதற்கில்லை.எனவே, இயற்கையாக விளைவிக்கப்படும் காய் மூலம் விவசாயியே விதை எடுத்து, பாதுகாத்து திரும்ப விதைக்கும் முறை இருக்கையில், செயற்கையாக உண்டாக்கப்படும், பாதுகாப்பற்ற மரபணு மாற்ற விதைகள் எதற்கு?

வி.செல்லமுத்து (தலைவர், உழவர் உழைப்பாளர் கட்சி): பி.டி., கத்தரிக்காய் தொழில்நுட்பத்தால் பூச்சித் தாக்குதல் இருக்காது, விளைச்சலும் அதிகமிருக்கும். இதுதான், மான்சான்டோ நிறுவனமும், மஹிகோ நிறுவனமும் சொல்வது.இதற்கு முன்பும் இப்படிச் சொல்லித்தான், பி.டி., பருத்தியை அறிமுகம் செய்தனர். விவசாயிகளும் இவர்கள் சொன்னதை நம்பி தங்களது சொந்த நிலங்களிலும் பெருமளவு குத்தகைக்குப் பிடித்தும் பி.டி., பருத்தியை பயிரிட்டனர்.ஆனால், ஆந்திராவிலும், விதர்பாவிலும் இந்நிறுவனங்கள் சொன்னது போல் எதுவுமே நடக்கவில்லை. பி.டி., பயிரிடப்பட்ட முதல்முறை மட்டுமே ஓரளவு மகசூல் கிடைத்தது. தொடர்ந்து பயிர் செய்தபோது மகசூலும் குறைந்து, மண்ணும் பாதிக்கப் பட்டதால் விவசாயிகள் கடனில் மூழ்கி, தற்கொலை சம்பவங்கள் நடந்தேறின. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள வீரிய ஒட்டு விதைகளாலும், ரசாயன உரங்களாலும், டாக்டர்களால் கூட கண்டுபிடிக்க முடியாதவாறு மர்மக் காய்ச்சல், ஒவ்வாமை என மனித இனம் பல வித நோய்த் தாக்குதலைச் சந்தித்து வருகிறது.நாளடைவில் பாரம்பரிய விதைகளும் அழிந்து, மான்சான்டோ நிறுவனமும் விதை வினியோகத்தை நிறுத்தும் நிலை வந்தால், அது நமது நாட்டு விவசாயத்துக்கே பெரும் அச்சுறுத்தலாய் அமையும்.

"இந்த மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் முற்றிலும் முரணானது. எந்த மரபணுவும் தனியாக ஒரு செயலைச் செய்வதில்லை, கூட்டாகத்தான் இயங்க முடியும்; வெட்டி ஒட்டி ஒன்றின் பண்பை மற்றொன்றில் புகுத்துவது எதிர்மறையான விளைவுகளைத் தரக்கூடும் இந்த டெக்னாலஜியே தவறு' என, ஆணித்தரமாகக் கூறிய இங்கிலாந்து நாட்டின் உயிரி தொழில்நுட்பம் மற்றும் மரபியல் பேராசிரியர் டாக்டர் மைக்கேல் அண்டோன்யாவின் ஆய்வுக் கட்டுரையுடன் தான் துவங்கியது, டில்லியில் நடந்த மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களால் ஏற்படக் கூடிய நலப் பிரச்னைகள் குறித்த கருத்தரங்கு.

"மொத்தமும் அபத்தம்; அப்படியும் ஏனிந்த அவசரம்' எனக் கேள்வி எழுப்புகிறார், இந்திய மரபணு மாற்று பொறியியல் அங்கீகாரக் குழுவின் அறிக்கையைப் படித்த பிரெஞ்சு விஞ்ஞானி செரலினி."புழு, பூச்சி, ஓட்டை என எதுவுமே இல்லாமல் காட்சியளிக்கும் பி.டி., கத்தரியில் ஆயிரம் மடங்கு பூச்சித் தெளிப்பான்களை விட அதிகமான பி.டி., நஞ்சை இது கொண்டிருக்கக் கூடும்' என, அமெரிக்க சால்க் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானி டேவ் ஷூபெர்ட் கூறியிருக்கிறார்.ஆந்திரா மற்றும் மத்திய பிரதேசத்தில் பி.டி., பருத்தியை உட்கொண்ட ஆடுகள் இறந் துள்ளன. ஆஸ்திரியாவில், மரபணு மாற்றப்பட்ட மக்காச் சோளப் பயிர்களை 10 ஆண்டுகளுக்கு மேல் எலிகளுக்குக் கொடுக்கப்பட்டதில் அவற்றுக்கு இனப்பெருக்கச் சிக்கல், மலட்டுத் தன்மை உண்டானது.

மரபணு மாற்ற சோயாவைச் சாப்பிட்ட தாய் எலிகளுக்குப் பிறந்த குட்டிகளின் இறப்பு விகிதம் 6 மடங்கு அதிகரித்துள்ளதாக ரஷ்ய அறிவியல் கழகம் கூறியுள்ளது. ஆஸ்திரேலியாவில் பி.டி., பட்டாணியை உட்கொண்ட எலிகளுக்கு நுரையீரல் நோய் ஏற்பட்டுள்ளது.பிலிப்பைன்சில் பி.டி., பயிர் வயல்களுக்கு அருகில் வசிப்போருக்கு, பயிர்களில் மகரந்தம் உதிரும் நேரத்தில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக பி.டி., சோளத்தை உட் கொண்ட எலிகளின் சிறுநீரகங்கள் சிறுத்துப் போனதை மான்சான்டோ நிறுவனமே ஒப்புக் கொண்டுள்ளதாக வேளாண் பல்கலை ஆராய்ச்சியாளர் ராஜதுரை தெரிவித் துள்ளார்.இப்படி எவ்வளவோ ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும் ஆதாரப்பூர்வமான வாதங்களை ஆணித்தரமாக எடுத்துவைத்துள்ளனர்.

ஆனால்... மரபணு மாற்றத் தொழில் நுட்பத்தால், சந்ததியற்ற சமுதாயம் சந்தடியில்லாமல் உருவாகும், நோயற்ற வாழ்வுக்கு சாத்தியம் குறைவு, நாளைய உணவுக்கு அன்னியரிடம் கையேந்த வேண்டி வரும் என, "மனசாட்சியுள்ள' விஞ்ஞானிகளும், சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் வேதனையுடன் போராடிக் கொண்டிருக்க...இத்தனை ஆர்ப்பாட்டங்களும் அர்த்தமற்றவை; விவசாயிகளின் நலன்(!) கருதியே பி.டி., அனுமதிக்கப்படுகிறது என்று அரசு இயந்திரங்களைச் சார்ந்த விஞ்ஞானிகள்(?) மட்டும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். கேரளாவிலும் கர்நாடகத்திலும் மக்கள் நலன் கருதி பி.டி.,க்கு தடை விதிக்கப்பட்டிருக்க தமிழக முதல்வர் மட்டும், "உத்தரவு வரும் வரை பி.டி.,யை அனுமதிக்கக் வேண்டாம்' என கேட்டுக் கொண்டிருக்கிறார்.எது எப்படியோ, அன்னிய நாடுகளில் எலிக்கும், ஆட்டுக்கும், முயலுக்கும் கொடுத்துச் சோதித்துப் பார்த்ததை இந்தியாவில் மனிதர்களுக்குக் கொடுத்துச் சோதித்துப் பார்க்க அன்னிய சக்திகள் முயல்கின்றன என்பது மட்டும் இங்கு தெளிவாகிறது.இந்திய மக்களை அன்னிய பன்னாட்டு ஆய்வுக் கூடங்களின் எலிகளாக்க நமது ஆட்சியாளர்களும் முடிவு செய்துவிட்டனர் என்பதுதான் இங்கு துரதிருஷ்டம்.

                                                                 -நன்றி தினமலர்.

Sunday, February 7, 2010

சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை...

"நம் பிள்ளைகளுக்குப்

பல் முளைக்கும் முன்பே இந்த சினிமா

மீசை முளைக்க வைத்து விட்டது.

இந்த அழுக்குத் திரை

சலவை செய்யப்படுமா?

இல்லையெனில்...

மக்களைச் சுருள வைக்கும்

திரைப்பட சுருளையெல்லாம்

ஒரு தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம்'

- வைரமுத்து

கவியரசின் வரிகளுக்கு ஒப்புதல் அளிப்பது போல், "அனைத்து குற்றங்களுக்கும் காரணம் சினிமா' என, மதுரை ஐகோர்ட் நீதிபதி வி. தனபாலன், வழக்கு விசாரணை ஒன்றில், சாட்டையை சுழற்றியுள்ளார். இது, நம்மூர் சினிமாக்காரர்கள் காதில் விழவில்லை போலும்; இல்லையென்றால் கிளம்பியிருப்பர், கண்டனக் கூட்டமொன்று நடத்த. திரைப்படம் என்பது ஒரு உன்னதக்கலை தான்; மறுப்பதற்கில்லை; அது, நல்ல விஷயங்களை தரும் போது. இன்றைய தமிழ் சினிமா, எந்த உணர்வை மக்களிடம் அதிகம் பரப்புகிறது? காதலா, கடமையா, வன்முறையா, ஆபாசத்தையா, மூட நம்பிக்கையா என்று கேள்விகள் பலவற்றை எழுப்பினால், விடையை நான் சொல்லத் தேவையில்லை; உங்களுக்கே புரியும் சற்று சிந்தித்துப் பார்த்தால். "கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா' என்ற காலம் போய், "பிள்ளக் குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா?' என்ற ரீதியில் அல்லவா சென்று கொண்டிருக்கிறது நமது கலாசாரம்.

கலாசார சீரழிவு, வன்முறை, மாணவர்களிடையே ஹீரோயிசம் என, சமூகத்தை சீரழிக்கும் செயல்கள் அனைத்திற்கும் வித்திடுவதில், இன்றைய சினிமா முக்கிய இடத்தைப் பிடிப்தை யாராலும் மறுக்க முடியாது. நாகரிகமற்ற வார்த்தைகள், ஆபாசமான அசைவுகள், அருவறுப்பான காட்சிகள், இரட்டை அர்த்தமுள்ள ஜோக்குகள் ஆகியவற்றையே கதையம்சங்களாக கொண்டு பெரும்பாலான படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்கு அர்த்தம், நல்ல படங்களே வெளிவருவதில்லை என்பதல்ல; அற்புதமான கதை, தொழில்நுட்ப நேர்த்தி, ஒளிப்பதிவு என, அனைத்து நல்ல அம்சங்களுடன் கூடிய படங்களும் வந்து கொண்டு தான் இருக்கின் றன. ஆனால், அப்படிபட்ட படங்கள் எத்தனை வெளி வருகின்றன என்பதே மிகப் பெரிய கேள்வி. ஒரு குடத்துத் தண்ணீரில், ஒரு சொட்டுப் பாலை கலந்தால் அது பாலாகிவிடுமா? முன்பெல்லாம் தியேட்டருக்குச் சென்றால் தான் சினிமா. ஆனால் இன்று? தொலைக்காட்சி மூலம் சினிமா நம் வீட்டுக்குள் நுழைந்து விட்டது. வீட்டுக்குள் வந்த சினிமா, எல்லா வித உறவுகளோடும் அமர்ந்து பார்க்கும் படியாகவா உள்ளது? அதிலும், தனியார் தொலைக்காட்சிகள் பலவும், போட்டி போட்டு சினிமா நிகழ்ச் சிகளை ஒளிபரப்பி, தொலைக் காட்சி யை தொல்லைக்காட்சிகளாக அல்லவா மாற்றிக் கொண்டிருக்கின்றன.

நம் தமிழ் சமூகத்தில், சினிமாவின் தாக்கம் பெருமளவு இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. நடிகைக்கு கோவில், நடிகன், "கட்-அவுட்'டுக்கு பாலாபிஷேகம், குழந்தைக்கு சொட்டு மருந்து கொடுக்க ஒரு நடிகை, வருமான வரியை கட்டச் சொல்லி ஒரு நடிகர், அவ்வளவு ஏன்... புத்தகக் கண்காட்சியிலும் நடிகர்களே! தீபாவளி, பொங்கல், என, அனைத்து விஷேச நாட்களிலும், நம் அனுமதி இருந்தாலும், இல்லாவிட்டாலும், "டிவி' மூலம் வீட்டுக்குள் புகும் சினிமாக்காரர்கள். இதாவது பரவாயில்லை... குடியரசு, சுதந்திர தின நாட்களிலும் நடிகர்களே! அந்தோ பரிதாபம்... இந்த நிலையைப் பார்க்க தேசத் தந்தை காந்தியுமில்லை; பாட்டுக்கொரு புலவன் பாரதியுமில்லை; இருந்திருந்தால், வாங்கிய சுதந்திரத்தை, "வாபஸ்' பெறக் கோரி, தேசத்தந்தை மீண்டும் ஒரு சத்தியாகிரகத்தை செய்தாலும் வியப்பதற்கில்லை. பள்ளி மாணவன் என்றால் அவனுக்கு ஆசிரியரை கலாய்க்கத் தெரிய வேண்டும்; கல்லூரி மாணவன் என்றால், அவனுக்கு கட்டாயமாக, "காதல்' வர வேண்டும். இது, சினிமாவின் எழுதப்படாத இலக்கணம். இந்த இலக்கணத்தை படிப்பதால் தானே, பள்ளி மாணவர்களும், "பன்ச்' டயலாக்குகளை பரவலாய் பேசுகின்றனர்.

"கருத்தம்மா' படமெடுத்தாலும், அதில், "செவத்தம்மாவை' போட்டால் தான் படம் ஓடும்; அதனால், ரசிகர்கள் ரசனை அறிந்து அவர்கள் கேட்பதையே நாங்கள் தருகிறோம் என்பதே இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் பதிலாக இருக்கும். அப்படியானால், இவர்கள் கூறுவது என்ன? தமிழனுக்கு ரசனையே கிடையாதா? ஆபாசத்தையும், அசிங்கத்தையும், பார்ப்பதையும், சிந்திப்பதையும் தவிர அவனுக்கு வேறு சிந்தனையே கிடையாதா? தமிழர்கள் உயர்ந்த விஷயங்கள் பலவற்றையும் ரசிப்பதே இல்லையா? இளைஞர்கள் மனதில் சுய முன்னேற்றம், சமூக பொறுப்புணர்வு பற்றிய சிந்தனையே இல்லையா? இல்லை ரசிப்பதற்கு தகுதியற்றவர்களா?

மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக, சமூக அக்கறையில்லாமல், வெட்டு, குத்து, ஆபாசத்தை அள்ளித் தெளிப்பதா? ஆரம்பத்தில் இது போன்ற படங்களை மக்கள் தாழ் பார்வையுடன் பார்த்தாலும், பின் அவற்றையும் வேறு வழியின்றி ஜீரணிக்கக் கற்றுக் கொண்டு விட்டனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. காவிரி பிரச்னைக்கும், ஈழத்தமிழர் படுகொலைக்கும் உண்ணாவிரதம் இருந்து பேராட்டம் நடத்தி, தமிழன் மீதும், தமிழகத்தின் மீதும் அக்கறை உள்ளவர்களாய் வேஷம் போடும் இவர்களுக்கு, தமிழ் சினிமாவால் இந்த சமூகம் பாழாய் போய்கொண்டிருப்பது தெரியாதா? "அம்மா-அப்பா வாயில சோத்தைப் போடு, அடுத்தவன் வாயில மண்ணைப் போடு' என, இவர்கள் பணம் சம்பாதிக்க, இளைஞர்கள் மட்டுமின்றி, குழந்தைகளையும் கெடுத்து, குடும்பங்களை நாசமாக்கி சமுதாயத்தை சீரழிக்கும், இதுபோன்ற படங்களை சென்சார் என்ன செய்ய போகிறது? கதைக்கு தேவையென்றால், ஆபாசத்தை அனுமதிப்போம் என்று இன்னும் கதை சொல்லிக் கொண்டு தான் இருக்கப் போகிறதா?

அப்படியானால், ஆபாசத்தை அள்ளித் தெளித்துக் கொண்டு இருக்கும் படங்கள் அனைத்துமே, உண்மையில் கதைக்கு தேவையானதாக தான் இருக்கிறதா அல்லது கரன்சிகள் கைமாறியதால் கதையோடு தொடர்புடையதாக்கப்பட்டதா? பாடல்கள், படங்கள் என அனைத்திலும் ஒழுக்க மீறல், ஆபாசம். இந்த ஒழுக்க மீறல்களையும், வக்கிரத்தையும் ஆட்சேபனை தெரிவிக்காமல், இன்னும் நாம் ஆதரித்து வந்தால், அவை போகப் போக மோசமான விளைவை சமுதாயத்தில் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. தமிழ் சினிமா... சில ஆண்டுகளுக்கு முன் அப்படி இருந்தது; தற்போது, இப்படி இருக்கிறது என்று இனியும் கூறிக் கொண்டிருக்காமல், வரும் காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கப் போவது யார்? பூனைக்கு மணிகட்டப் போவது யார்? கேளிக்கை வரியைக் கேலி கூத்தாக்கிய அரசாங்கமா? கறைபடிந்து, கண்களை மூடிக் கொண்டு இருக்கும் சென்சார் போர்டா? இனியும் இந்த நிலை தொடருமானால்... பொறுப்பதற்கில்லை... வாருங்கள் தோழர்களே கைகோர்ப்போம்; வைரமுத்து வரிகளை வாய்மையாக்க. anjalarajam@gmail.com

                   - இரா. ஆஞ்சலா ராஜம், சமூக நல விரும்பி

Thursday, February 4, 2010

சூரிய குளியலும் 'பாலியல்' உணர்வை தூண்டும் : புதிய ஆய்வில் தகவல்...


“வயாகரா” மாத்திரை ஆண்களின் பாலியல் உணர்வை தூண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது. இனி வயாகரா தேவையில்லை. சூரிய குளியலே போதும் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.ஆஸ்திரியாவில் உள்ள கிரேஷ் மருத்துவ பல் கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பொதுவாக ஆண்களின் ரத்தத்தில் உள்ள டெஸ்டோ டெரோன் என்ற ஹார்மோன் “பாலியல்” ஆர்வத்தை தூண்டுகிறது. இதற்கு வைட்டமின் “டி” அதிக அளவில் தேவைப்படுகிறது.

வைட்டமின் டி சூரிய ஒளி மூலமும், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதாலும் உற்பத்தி ஆகிறது. எனவே சூரிய குளியலே போதும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த புதிய ஆய்வின் மூலம் ஒரு மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் படுத்தபடி சூரிய குளியல் செய்தாலே போதும் ரத்தத்தில் பாலியல் உணர்வை தூண்டும் டெஸ்ட் டோடெரோன் அளவு 69 சதவீதம் உயர்கிறது என்று தெரிய வந்துள்ளது.

Wednesday, February 3, 2010

ஐ.பி.எல். போட்டி லைவ்வாக இன்டர்நெட்டில்...

மீண்டும் ஒரு கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 12 முதல் இந்தியாவில் தொடங்க இருக்கிறது. இந்த திருவிழாவினை சோனி மேக்ஸ் டிவி சேனல் இந்தியாவில் ஒளிபரப்ப இருக்கிறது. இந்த சேனல் இல்லாத கேபிள் வைத்திருப்பவர்கள் கிரிக்கெட் போட்டியை இன்டர்நெட்டிலேயே கண்டு மகிழலாம். இதற்கான ஒப்பந்தம் ஒன்றை கூகுள் இந்தியா நிறுவனமும் ஐ.பி.எல். அமைப்பும் அண்மையில் ஏற்படுத்திக் கொண்டுள்ளன. www.youtube.com/ipl என்ற ஒரு தனி இணைய தளம் ஒன்று இதற்கென உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் ஐ.பி.எல். போட்டிகள் குறித்த தகவல்களுக்கான ஆன்லைன் உரிமையை இரண்டு ஆண்டுகளுக்குக் கொண்டிருக்கும். தள ஒளிபரப்பு மூலம் கிடைக்கும் விளம்பரம் மற்றும் ஸ்பான்ஸார்ஷிப் வருமானத்தினை கூகுள் மற்றும் ஐ.பி.எல். பகிர்ந்து கொள்ளும்.


கூகுள் முதல் முறையாக ஒரு பெரிய அளவிலான கிரிக்கெட் போட்டியை லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் தன் தளத்தில் ஒளி பரப்ப இருக்கிறது. 45 நாட்களில் நடைபெறும் 60 போட்டிகள் ஒளி பரப்பப்படும். போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு மட்டுமின்றி, ரசிகர்களுக்கு போட்டிகளின் ஹை லைட்ஸ், விளையாட்டு வீரர்களுடனான பேட்டிகள், விக்கெட் வீழ்ச்சி, டாப் சிக்ஸ், பரிசு வழங்கும்விழா, பிட்ச் குறித்த அறிக்கை என இன்னும் பல சிறப்பு ஒளிபரப்புகளும் இருக்கும். இவற்றை ரசிகர்கள் அந்த நேரத்தில் பார்க்க முடியவில்லை என்றாலும், எப்போது வேண்டு மானாலும் தளத்திலிருந்து பார்க்க முடியும் என்பது இதன் சிறப்பாகும்.

இவற்றுடன் இன்னொரு சிறப்பான ஏற்பாட்டி னையும் கூகுள் மேற்கொள்கிறது. இந்த போட்டிக்கென ஸ்பெஷல் ஆர்குட் தளம் ஒன்றை அமைக்கிறது. இதன் மூலம் ரசிகர்கள், விளையாட்டு வீரர்களுடன், குறிப்பாக மேன் ஆப் த மேட்ச் ஆகத் தேர்ந்தெடுப்பவர்களுடன் சேட்டிங்கில் ஈடுபடலாம். இவர்களுடன் மட்டுமின்றி போட்டிகளுடன் தொடர்பு டைய அனைவருடனும் சேட் செய்து மகிழலாம்.

இப்போதே இவற்றைத் திட்டமிட விரும்புபவர்கள் http://webtrickz.com/ipl3schedule என்ற முகவரியில் உள்ள தளம் சென்று, ஐபிஎல் போட்டி கால அட்டவணையைப் பெற்றுக் கொள்ளலாம். வரும் மாதங்களில் அலுவலகங்களில் கம்ப்யூட்டர் களில் தங்கள் அலுவலக சர்வர்களில் பணிபுரிபவர்கள், கூடுதலாக ஐ.பி.எல். கூகுள் தளங்களையும் திறந்து வைத்துப் பார்த்துக் கொண்டே பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்

யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி

வீடியோ படங்களுக்கு யு–ட்யூப் ஓர் அருமையான தளம். நம் படங்களையும் அங்கு அப் லோட் செய்து உலகிற்குக் காட்டலாம். ஆனால் இவற்றை நாம் டவுண்லோட் செய்ய முடியாதபடி, யு ட்யூபில் இவை இடம் பெறுகின்றன. ஆனாலும் புரோகிராமர்கள், யு-ட்யூப் தளத்தில் உள்ள வீடியோ படங்களை டவுண்லோட் செய்திட பல புரோகிராம்களை இலவசமாகத் தந்து வருகின்றனர். கூகுள் தேடல் தளம் சென்று "youtube video download" என டைப் செய்தால் போதும்; இந்த புரோகிராம்கள் கிடைக்கும் தளங்களின் பட்டியல் கிடைக்கும். இவற்றை இன்ஸ்டால் செய்து, வீடியோ படங்களை நம் கம்ப்யூட்டரில் காப்பி செய்து இயக்கலாம். ஆனால் இவற்றில் பலவற்றில் ஏதேனும் ஒரு சிக்கல் இருக்கும். 60 சதவீதம் படம் மட்டுமே வரும். முழுவதும் வேண்டும் என்றால் பணம் கட்டச் சொல்வார்கள். அல்லது விளம்பரங்கள் படத்தின் குறுக்கே ஓடும்.


இவை எதுவும் இன்றி மிக எளியமுறையில், கட்டுப்பாடு எதுவும் இன்றி, யு ட்யூப் படங்களை டவுண்லோட் செய்வதற்கான குறிப்பு ஒன்றினைக் காண நேர்ந்தது. அது மிக எளிதான தாகவும், சிக்கலற்றதாகவும் உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், எந்த யு–ட்யூப் தளத்திலிருந்து வீடியோ படம் வேண்டுமோ அங்கு செல்லவும். இயக்கிப் பார்த்து அது தான் உங்களுக்குத் தேவையா என உறுதி செய்து கொள்ளவும். இப்போது அதன் இன்டர்நெட் வெப்சைட் முகவரி விண்டோ செல்லவும். எடுத்துக் காட்டாக அந்த முகவரி கீழ்க்கண்ட படி இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

http://www.youtube.com/results?search_query =thillana+remix&search_type=&aq=f இதில் youtube என்ற சொல்லில் ‘y’ என்பதற்குப் பதிலாக 3 என டைப் செய்து என்டர் தட்டவும். முகவரி கீழ்க்கண்டபடி மாறும். http://www.3outube.com/results? search_query=thillana+ remix&search_type=&aq=f அவ்வளவு தான்; நீங்கள் வேறு ஒரு டவுண்லோட் தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு இந்த வீடியோ படத்தை எந்த வகை பைல் வடிவில் வேண்டும் என ஒரு திரை கிடைக்கும். இதில் எம்பி4 அல்லது எப்.எல்.வி. என இரண்டு சாய்ஸ் இருக்கும். எது உங்களுக்குத் தேவையோ, அந்த ஆப்ஷனில் கிளிக் செய்தால் உடனே சில நிமிடத்தில் வீடியோ படம் டவுண்லோட் செய்யப்படும். பின் அந்த வீடியோவினை எப்போது வேண்டுமானாலும் இயக்கிப் பார்க்கலாம். இதில் என்ன வேடிக்கை என்றால், இந்த தள ரசிகர்களுக்கு பேஸ்புக்கில் ஒரு கிளப் உள்ளது. இங்கு நீங்கள் சேர்ந்து தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.

பீமா படப்பாடல்...





அயன் படப்பாடல்...

  

Monday, February 1, 2010

How to prepare 'Herbal Cake'!