Wednesday, March 31, 2010

ஜி-மெயில் : எக்ஸ்ட்ரா டிரைவ்.

நம் கம்ப்யூட்டரில் மட்டுமின்றி வேறு ஒரு இடத்தில் நம் பைல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவே நாம் விரும்புவோம். சிடிக்களிலும், மேக்னடிக் டேப்களிலும் பைல்களைப் பதிந்து பாதுகாக்கலாம்.

ஆனால் இவற்றை நாம் செல்லும் இடத்திற்கு எடுத்துச் செல்வது கடினம். மேலும் இவையும் நிலையாகப் பல ஆண்டுகளுக்கு இவற்றைக் கொண்டிருக்குமா என்பதுவும் ஐயமே.

ஆன்லைனில் பல தளங்கள், மாதக்கட்டணம் பெற்றுக் கொண்டு நம் பைல்களை ஸ்டோர் செய்து வைக்கின்றன. இதற்கென பல நிலைகளில் கட்டணங்கள் அடங்கிய திட்டங்களை வழங்குகின்றன. ஆனால் இவற்றின் நம்பகத்தன்மையும் முழுமையானதாக இல்லை.

இந்த வகையில் இலவசமாக சேவை செய்திடும் சிலதளங்கள், பாதுகாப்பிற்கு அனுப்பப்படும் பைல்களின் அளவு, தன்மை, தளங்களுக்கான இணைப்பு ஆகியவை குறித்து பல வரையறைகளைக் கொண்டுள்ளன. எனவே இவற்றை எந்த அளவிற்கு நம்பிக்கையுடன் நம் பைல்களை அப்லோட் செய்து வைக்க முடியும் என்பது கேள்விக் குறியே. ஆனால் நம் அருகிலேயே ஓர் அருமையான ஆன்லைன் சேவிங் தளம் உள்ளது என்பதனை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. அதுதான் ஜிமெயில். உலகில் இயங்கும் இமெயில் சேவைகளில் தலையானதும் மிகச் சிறந்ததுவும் ஜிமெயில் என அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஜிமெயில் ஸ்பாம் மெயில்களைத் தடுப்பதில் சிறப்பாகச் செயல்படுகிறது. நம் செயல்பாடுகளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. 7 ஜிபிக்கும் மேலாக நம் மெயில்கள் மற்றும் இணைப்புகளுக்கு இடம் தருகிறது. இந்த அளவும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுள்ளது. நமக்கு ஜிமெயில் தரும் இட வசதியில், மிகக் குறைந்த அளவே நாம் பயன்படுத்துகிறோம். ஜிமெயில் தளம் சென்றவுடன் இந்த செய்தி நமக்குக் காட்டப்படும். எனவே இந்த பயன்படுத்தாத ஜிமெயில் டிரைவ் இடத்தை ஏன் நாம் நம் பைல்களைப் பாதுகாத்து வைக்கும் இடமாகப் பயன்படுத்தக் கூடாது.

இந்த வகையில் ஜிமெயில் டிரைவ் என்ற ஒரு வசதியை கூகுள் தருகிறது. ஜிமெயில் டிரைவ் நம் கம்ப்யூட்டரில் உள்ள மை கம்ப்யூட்டரில் ஒரு சிஸ்டம் பார்ட்டிஷனை ஏற்படுத்துகிறது. இதனை நம் விண்டோஸ் எக்ஸ்புளோரருடன் இணைக்கிறது. ஆன்லைனில் கூகுள் தரும் டிரைவ் இடத்தை, நம் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ் போலப் பயன்படுத்தும் வசதியினைத் தருகிறது. நம் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்ட ஒரு டிரைவ் போல இந்த ஆன்லைன் ஜிமெயில் டிரைவ் இயங்குகிறது. எனவே பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவிலிருந்து ட்ராக் அண்ட் ட்ராப் வசதி மூலம் இந்த ஆன்லைன் டிரைவில் இழுத்துவிட்டு காப்பி செய்திடலாம். இதிலும் சில வரையறைகள் உள்ளன. பைல் ஒன்று 25 எம்பி என்ற அளவிலே தான் இருக்க வேண்டும். இந்த வரையறையைச் சமாளிக்க ஜிமெயில் டிரைவ், பைலைப் பிரித்து அடுக்கி வைத்துக் கொள்கிறது.

புதிய போல்டர்களை உருவாக்குவது, பைல்களை காப்பி, பேஸ்ட் மற்றும் டெலீட் செயல்பாடுகளுக்கு உள்ளாக்குவது போன்றவற்றை ஜிமெயில் டிரைவில் மேற்கொண்டாலும், இதற்கென தனியாக ஒரு டிரைவ் எழுத்து தரப்படுவதில்லை.

மேலும் பைல்களின் பெயர்கள் 40 கேரக்டர்களுக்கு மேல் இருக்கக் கூடாது. உங்களிடம் ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தால், இந்த ஜிமெயில் டிரைவினை எப்படிப் பெறுவது என்று பார்ப்போம்.

முதலில் உள்ள முகவரிக்கு செல்லவும். இந்த இணையப் பக்கத்தில் கீழாக ஸ்குரோல் செய்து செல்லவும். இதில் இரண்டு டவுண்லோட் லிங்க் தரப்பட்டுள்ளது. இதில் ஏதாவது ஒன்றில் கிளிக் செய்து அதனை எளிதாக இயக்கும் வகையில் டெஸ்க் டாப்பில் வைத்துக் கொள்ளவும். அடுத்து gmailfs115.zip இந்த பைலை அன்ஸிப் செய்திடவும். அனைத்து பைல்களையும் எக்ஸ்ட்ராக்ட் செய்து பெற்ற பின்னர் gmailfs115 என்ற போல்டருக்குச் செலல்வும். பின் இதில் உள்ள செட் அப் பைல் மீது டபுள் கிளிக் செய்திடவும். இப்போது பைல் திறக்கும் செயலுக்கான எச்சரிகை வந்தால், அதனைக் கண்டு கொள்ளாமல் கீதண கட்டளை கொடுக்கவும்.

இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் முழுமையாக இன்ஸ்டால் ஆகும். உங்கள் கம்ப்யூட்டரில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். பின் உங்கள் கம்ப்யூட்டரில் மை கம்ப்யூட்டரைத் திறந்து பார்த்தால், அங்கே Other என்ற வகையில் புதியதாக டிரைவ் ஒன்று இருப்பதனைப் பார்க்கலாம். பின் GMail Drive என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். இங்கே லாக் இன் விண்டோ திறக்கப்படும். இங்கு கிடைக்கும் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களுக்கான பீல்டுகளில் உங்கள் ஜிமெயில் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினைத் தரவும்.இதில் உள்ள ஆட்டோ லாக் இன் டிக் செய்து வைத்தால், அடுத்த முறை இன்டர்நெட் இணைப்பு கிடைத்தவுடன், நீங்கள் தானாகவே லாக் இன் செய்துவிடுவீர்கள்.

லாக் இன் தகவல்களைத் தந்த பின் ஓகே கிளிக் செய்திடும் முன் சில ஆப்ஷன்களை நீங்கள் படித்தறியலாம். More பட்டனை அழுத்தினால் இவை கிடைக்கும். இதில் 'Preserve Filenames' என்ற ஆப்ஷனைக் கட்டாயம் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து மிக முக்கியமானதான Use Secure HTTP என்ற ஆப்ஷனைக் கட்டாயம் தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் கம்ப்யூட்டருக்கும் ஜிமெயிலுக்கும் உள்ள இணைப்பிற்குப் பாதுகாப்பளிக்கும்.

இறுதியாக Use Draft Folder என்ற ஆப்ஷனையும் தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் பைல்களை ட்ராப்ட் போல்டருக்கு அனுப்பும். உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸுக்குத் தொல்லை கொடுக்காது.

முக்கியமான அனைத்து செட்டிங்ஸ் மேற்கொண்ட பின், ஜிமெயிலுக்கு இணைப்பை ஏற்படுத்த ஓகே கிளிக் செய்திடவும். அடுத்து ஜிமெயில் டிரைவ் காட்டப்படும். இதில் பைல்களை இழுத்துச் சென்று விடலாம். பைல்கள் அனைத்தும் ஜிமெயில் ட்ராப்ட் போல்டரில் விழும். பைல் மாற்ற வேகம் உங்கள் இன்டர்நெட் இணைப்பைப் பொறுத்து இருக்கும்.

தரவிறக்கச் சுட்டிக்கு கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்.
http://www.viksoe.dk/code/gmail.htm

மிகச்சிறந்த இலவச ஆன்டி-வைரஸ்.

பணம் கொடுத்து 'ஆன்டி- வைரஸ்' வாங்க முடியாத வாடிக்கையாளர்கள் தங்களுடைய மென்பொருட்களை பயன்படுத்தியாவது பார்க்கட்டுமே என்ற எண்ணத்தில் வழங்கப்படும் 'ஆன்டி-வைரஸ்' தான் "இலவச ஆன்டி-வைரஸ்".

இந்தவகை மென்பொருட்களில் பணம் கொடுத்து வாங்கும் ஆன்டி-வைரஸில் இருப்பதை விட கொஞ்சம் குறைவான பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்,சில வாடிக்கையாளர்கள் தங்கள் கணினுக்கு முழுமையான பாதுகாப்பு வேண்டும் என்ற எண்ணத்தில் பணம் கொடுத்தே ஆன்டி-வைரஸை வாங்கிக்கொள்வார்கள்.

ஆனால் என்னதான் பணம் கொடுத்து நாம் கணினியில் ஆன்டி-வைரஸ் போட்டுக் கொண்டாலும் புதுபுது வைரஸ்களின் அட்டகாசம் இன்றைக்கும் தாங்க முடியாததாகத்தான் உள்ளது.

குறிப்பாக நாம் இணையதளங்களில் உலவும்போது கண்டிப்பாக வைரைஸ்களின் தொல்லைகள் அதிகமாக இருக்கும்.அவை நாம் இணையதளங்களிருந்து ஏதாவது தரவிறக்கம் செய்யும்போது வைரஸும் அதன் கூடவே சேர்ந்து வந்து நம் கணினியில் உட்கார்ந்து கொள்ளும்.

இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் (வந்து கொஞ்ச நாள் ஆன) இலவச Microsoft Security Essentials என்ற மென்பொருள்.

பல கணினி உபயோகிப்பாளர்கள் பயன்படுத்தி பார்த்த வரையில் மிக அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் ஆன்டிவைரசாக Microsoft Security Essentials மென்பொருள் செயல்படுகிறது.குறிப்பாக இணையதளங்களில் நாம் உலவும்போது இந்த ஆண்டிவைரஸ் அதிகபட்ச இணைய பாதுகாப்பை நமக்கு தருகிறது.இந்த இலவச ஆன்டிவைரஸ்' நாம் பணம் கொடுத்து வாங்கும் ஆன்டிவைரஸ் தரும் அதிகபட்ச பாதுகாப்பை ஒத்த பாதுகாப்பை நமது கணினுக்கும் வழங்குகிறது.

அது மட்டுமல்லாமல் அதுவே தானாக அடிக்கடி தன்னை புதுப்பித்துக் கொள்வதால் நமது கணினிக்கு நல்ல பாதுகாப்பும் கிடைக்கிறது,இந்த ஆன்டிவைரஸை பயன்படுத்திப் பார்த்த பலபேர் இதன் செயல்திறனை வெகுவாக பாராட்டுகிறார்கள்.

தரவிறக்கச் சுட்டிக்கு  கீழே உள்ள லின்க்கை சொடுக்கவும்.
http://www.microsoft.com/Security_Essentials/default.aspx?mkt=en-us#dlbutton

Sunday, March 21, 2010

கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - பகுதி - 12

சரி நீங்கள் விண்டோஸ் reinstall செய்கிறீர்கள் எனில் அப்போது மீண்டும் OS activate செய்ய வேண்டுமா எனில் தேவை இல்லை . உங்கள் கணிணியில் உள்ள குறிப்பிட்ட file மட்டும் போதும் அதில் ஏற்கனவே உங்கள் கணிணியை பற்றி குறிக்க பட்டு இருக்கும்.


மேற்கண்ட file ஐ கோப்பி செய்து விட்டு reinstallation முடித்த உடன் மீண்டும் அதே இடத்தில் பேஸ்ட் செய்யும் போது நமது கணிணி activate செய்ய பட்டு விடும்.

கணினியை நீங்கள் விண்டோஸ் bootable cd மூலம் பூட் செய்து ரிப்பேர் option தேர்ந்தெடுத்து செய்யும் போது இதை செய்ய தேவை இல்லை . அதே போல் நீங்கள் ரிப்பேர் செய்யும் போது கணிணியில் உங்கள் C டிரைவ் இல் உள்ள file கள் எந்த பாதிப்பும் அடையாது.


விண்டோஸ் OS இன்ஸ்டால் முடிந்த உடன் ஆட்டோமாடிக் அப்டேட்ஸ் enable செய்து கொள்ள வேண்டும் . இதன் மூலம் நம் இனத்தில் இருக்கும் நேரத்தில் கணினியானது அதுவே அப்டேட்ஸ் டவுன்லோட் செய்து கொள்ளும். பின்னர் நமக்கு தேவையான இப்போது மொதேர்போர்ட் சத் இல் . உள்ள இப்போது இல்லாதவர்கள் அப்டேட் செய்வதற்கு விண்டோஸ் XP SP3 அப்டேட்ஸ் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

SERVICES.MSC மூலம் இதை நாம் enable செய்யவோ disable செய்யவோ முடியும்.

அப்டேட்ஸ் என்பது விண்டோஸ் இல் ஏற்படும் பிழைகளை நீக்குவதற்கும், upgrade செய்வதற்கும், புதிய மாற்றங்களை உட்புகவும் பயன்படுதபடுவதாகும்.
இவை patches ஆகவோ சர்வீஸ் package ஆகவோ வெளிவரும் .

இப்போது மதர்போர்ட் cd இல் இருந்து டிரைவர் களை இன்ஸ்டால் செய்ய வேண்டும். முதலாவதாக சிப்செட் இன்ஸ்டால் செய்யவும். பின் வரிசையாக VGA, ஆடியோ, நெட்வொர்க் டிரைவர்களை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

இதை தவிர ஏதேனும் ஹாட்பிக்ஸ் கள் கொடுக்கப் பட்டிருந்தால் அதனையும் இன்ஸ்டால் செய்ய வேண்டும் . முடிந்தால் டிரைவர்களை இன்னொரு cd இல் backup எடுத்து கொள்ள வேண்டும் . அல்லது நமது கணிணியின் மற்றொரு partition இல் காப்பி செய்து கொள்ள வேண்டும் . டிரைவர் கள் அனைத்தும் இன்ஸ்டால் செய்து முடித்த வுடன் கணிணியை restart செய்வது அவசியம்.

device மேனேஜர் க்கு சென்று கணிணியில் இன்ஸ்டால் செய்துள்ள டிரைவர்கள் பற்றியும் அதன் பதிப்பு குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட படத்தில் device மேனேஜர் அக்செஸ் செய்வது கன்ட்ரோல் பனேல் வழியாக செல்லுமாறு உள்ளது. இது தவிர மை கம்ப்யூட்டர் ஐ ரைட் கிளிக் செய்து ப்ரோபெர்தீஸ் டேப் செலக்ட் செய்தால் அது சிஸ்டம் ப்ரோபெர்தீஸ் மெனு வை ஓபன் செய்யும்.

இதன் மூலமாகவும் device மேனேஜர் ஐ ஓபன் செய்யலாம்.

இதுவரை கணிணி அசெம்பிள் செய்வதை தெரிந்து கொண்டிர்கள்.
                                          நன்றி - மகா. 

கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - பகுதி - 11

கணிணியில் OS இன்ஸ்டால் செய்ய தேவையானவை விண்டோஸ் XP cd, மதர்போர்ட் டிரைவர் cd மற்றும் தேவையான மென்பொருள் தொகுப்புகள்.



முதலில் விண்டோஸ் XP bootable cd மூலம் கணிணியை பூட் செய்ய வேண்டும் . பின்னர் setup files load ஆகும்.


F8 பட்டன் அழுத்துவதன் மூலம் நாம் மைக்ரோசாப்ட் விதிகளுக்கு கட்டுப்பட்டு OS இன்ஸ்டால் செய்ய உள்ளோம் என்பதை குறிக்கும்.

முதல் option விண்டோஸ் இன்ஸ்டால் செய்வதற்கும் இரண்டாவது option விண்டோஸ் file பழுது பட்டு இருந்தால் பயன் படும்.

மேற்கண்ட படத்தில் ஒரு partition மட்டும் உள்ள ஹார்ட் டிஸ்க் பயன் படுத்தப்பட்டு உள்ளது. தற்போது அதிக அளவுள்ள ஹார்ட் டிஸ்க் கிடைப்பதால் நாம் தேவையான அளவு பிரித்து பார்மட் செய்த பின் OS இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

இன்ஸ்டால் முடிந்து restart ஆகும் போது பூட் வித் cd option ஐ பயன் படுத்த கூடாது.


இப்பொழுது நிறுவியுள்ள OS க்கு அண்டி வைரஸ் மென்பொருள் ஒன்றை நம் இன்ஸ்டால் செய்ய வேண்டும் . இல்லையெனில் கீழே  உள்ள படத்தில் உள்ளதை போல் வந்து நமக்கு நினைவூட்டும்.


அண்டி வைரஸ் தொகுப்பு இன்ஸ்டால் செய்வது பற்றி பின் வரும் வகுப்புகளில் பார்க்கலாம். இப்போது நாம் OS இன்ஸ்டால் செய்தவுடன் அதை எவ்வாறு activation செய்வது என்று பார்க்கலாம்.




பெரும்பாலும் முதல் option மூலம் தான் activation கள் அதிகமாக செய்யபடுகிறது. இதற்கு கணிணி இணைப்பு அவசியம் வேண்டும். அத்துடன் OS சீரியல் கீ தேவைப்படும். இந்த கீ ஆனது நாம் வாங்கிய விண்டோஸ் XP cd உடன் வரும்.

பரவலாக நாம் ஒர்ஜினல் OS வாங்குவது இல்லை அதற்கு காரணம் விலை ஒன்றுதான். சரி நீங்கள் நண்பர்கள் யாரிடம் இருந்தாவது வாங்கி இன்ஸ்டால் செய்து விடுகிறீர்கள். உங்களிடம் இணைய இணைப்பும் இல்லை எவ்வாறு அதை activate செய்வது, எப்படி OS ஐ முழுமை படுத்துவது.

அதற்காக தான் activator கள் பயன்படுகின்றன . இந்த முறை பயன் பாட்டில் வைரஸ் பரவுவது அதிகமாகும் . ஏனனில் இவை யாவும் ஸ்கிரிப்ட் மூலம் இயக்கப் படுகிறது. அதிக பயன் பாட்டில் இவை இருந்தாலும் இவற்றை பயன் படுத்துவது குற்றமே. ஆகவே இதனை பற்றி அதிகம் சொல்ல போவதில்லை.

அடுத்த வகுப்பில் reinstall செய்வது பற்றி....

கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - பகுதி - 10


கணிணியை பார்மட் அடிப்பது என்பது மிக எளிதான வேலை தான் . ஆனால் கணிணியை தேவையான அளவு partition பிரித்து நமது தேவைகேற்ப பிரித்து பின்னர் அதை FAT32 ஆகவோ NTFS ஆகவோ மாற்றுவது தான் வேலையே .

முதலில் partition பிரிப்பது எதற்கென்றால் ஒரே ஹார்ட்டிஸ்கில் நம் டேட்டா வை வைத்தால் பராமரிப்பது எளிதாக இருக்காது . மேலும் ஹார்ட்டிஸ்கின் செயல்பாடும் குறைந்து விடும்.

ஹர்ட் டிஸ்க் பார்மட் செய்ய பல வழிகள் இருந்தாலும் கிழ்கண்ட சிலவை அதிகம் பயன்படுகின்றன.

விண்டோஸ் bootable cd (FDISK)
தேர்ட் பார்ட்டி சாப்ட்வேர் (partition magic )
விண்டோஸ் OS இன்ஸ்டால் செய்யும் போதே பிரிப்பது.



primary partion OS இன்ஸ்டால் செய்வதற்கு பயன்படும். Extended மற்றும் logical partition கள் டேட்டா கையாள்வதற்கு பயன்படும். ஆக OS இன்ஸ்டால் செய்வதற்கு எவ்வளவு ஒதுக்க வேண்டும் என்பது நமக்கு தெரியும் . இல்லைஎனில் ஒவ்வொரு விண்டோஸ் OS வேர்சின் னுக்கு எவ்வளவு ஒதுக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் சைட் இல் குறிபிட்டு உள்ளனர் . எடுத்துகாட்டாக விண்டோஸ் xp SP2 க்கு எவ்வளவு தேவை என பார்க்க,

பொதுவாக பார்மட் செய்யும் போது quick பார்மட் option ஐ தவிர்ப்பது நல்லது. புல் பார்மட் option எனில் ஹார்டிஸ்க் bad clusterkal குறைவதற்கான வைப்பு உள்ளது.
விண்டோஸ் இல் டிஸ்க் managament option மூலம் நாம் ஹர்ட் டிஸ்க் partition ஐ மாற்றி அமைக்கலாம். ஆனால் primary partition ஐ மாற்றவோ பிரிக்கவோ இயலாது. மிக தேவையான தரணங்களில் மட்டுமே ஹார்ட் டிஸ்க் பார்மட் அடிக்கப்பட வேண்டும். அடிக்கடி பார்மட் செய்தால் கண்டிப்பாக தன் செயல் திறனை ஹார்ட் டிஸ்க் இழந்து விடும்.
ஹார்ட் டிஸ்க் ஐ maintenance செய்வதற்கு விண்டோஸ் இல் option உள்ளது . தேப்ரக்மேண்டதியன் மற்றும் Error செக்கிங் மூலமாக நாம் சரி செய்து கொள்ளலாம். அல்லது தேர்ட் பார்ட்டி சாப்ட்வேர் கள் முலமும் சரி செய்து கொள்ளலாம்.
 
அடுத்த வகுப்பில் நாம் விண்டோஸ் xp OS இன்ஸ்டால் செய்வது மற்றும் விண்டோஸ் OS மூலம் பார்மட் செய்வது என இரண்டையும் காணலாம்.

Wednesday, March 17, 2010

மனதை வருடும் இதமான பாடல்...

மனதை வருடும் இதமான பாடல்...

Friday, March 12, 2010

உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி.

நியூயார்க் : இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானி, உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளதாக, அமெரிக்காவின், "போர்ப்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இவரின் சொத்து மதிப்பு, 1.39 லட்சம் கோடி ரூபாய். அமெரிக்க பத்திரிகையான, "போர்ப்ஸ்' உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

"போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளவர், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் ஸ்லிம். இவரின் சொத்து மதிப்பு, 2.56 லட்சம் கோடி ரூபாய். அமெரிக்காவைச் சேர்ந்த பில்கேட்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு, 2.54 லட்சம் கோடி ரூபாய். அமெரிக்காவைச் சேர்ந்த வாரன் பபெ என்பவர், 2.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துடன் மூன்றாவது இடத்திலும், இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி, 1.39 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துடன் நான்காவது இடத்திலும் உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த லட்சுமி மிட்டல், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், ஐந்தாவது இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு, 1.37 லட்சம் கோடி ரூபாய்.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த எய்க் பட்டிஸ்டன் எட்டாவது இடத்திலும், அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் ப்ளூம்பெர்க் 23வது இடத்திலும் உள்ளனர். முகேஷ் அம்பானியின் சகோதரரான, அனில் அம்பானி, 65 ஆயிரத்து 760 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், இப்பட்டியலில் 36வது இடத்தில் உள்ளார். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்துள்ளவர்களில் இரண்டு பேர் மட்டுமே இந்தியர்கள். கடந்த 2008ம் ஆண்டு, உலகில், 1,125 கோடீஸ்வரர்கள் இருந்தனர். கடந்தாண்டு உலகளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக, கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 793 ஆக குறைந்தது. தற்போது உலகில் 1,011 கோடீஸ்வரர்கள் உள்ளனர். "போர்ப்ஸ்' பத்திரிகையின் தலைமை நிர்வாகி ஸ்டீவ் போர்ப்ஸ் கூறுகையில், " உலகப் பொருளாதார மந்த நிலை சீரடைந்து வருவது, இந்த பட்டியலில் எதிரொலித்துள்ளது' என்றார்.

இந்திய பெண்கள் இருவர்: உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த பெண்கள் இரண்டு பேர் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த "போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த சாவித்ரி ஜிண்டால் மற்றும் இந்து ஜெயின் ஆகிய இரண்டு பெண்கள் இடம் பெறுள்ளனர். இவர்களில், சாவித்ரி ஜிண்டால், 58 ஆயிரத்து 560 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துடன், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 44வது இடத்தில் உள்ளார். "பென்னட் கோல்மன் அண்ட் கோ' நிறுவனத்தின் தலைவர் இந்து ஜெயின் 13 ஆயிரத்து 440 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துடன் இப்பட்டியலில் 354வது இடத்தில் உள்ளார்.

Thursday, March 11, 2010

கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - பகுதி - 9

முதலில் காபினெட் உடன் SMPS யை அசெம்பிள் செய்ய வேண்டும். பின்னர் மதர் போர்டு ஐ காபினெட் உடன் இன்னைக்க வேண்டும். மதர் போர்டு காபினெட்டில் அசெம்பிள் செய்த வுடன் அதன் circuit எதுவும் காபினெட்டில் படாதவாறு சரி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு சரி செய்யா விடில் ஷார்ட் circuit ஏற்பட்டு போர்டனது பழுதாகிவிடும். ஆகவே போர்டு அசெம்பிள் செய்யும் போது மட்டும் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். அடுத்ததாக போர்டில் ப்ரோசெஸரை இணைக்க வேண்டும். பொதுவாக ப்ரோசெச்சொரைன் ஒரு பக்கம் மட்டும் அம்புக்குறியிட்டு கட்டப் பட்டிருக்கும்.
அதை கவனத்தில் கொண்டு போர்டில் ப்ரோசெஸரை இணைக்க வேண்டும் . பின்னர் அதன் மேல் கூலர் ஃபேன் பொறுத்த வேண்டும் . கூலர் ஃபேன் பொருத்தும் போதே அதற்கான பவர் கேபிள் இம் பொருத்தி விட வேண்டும். ப்ரோசெசரின் வெகு அருகிலேயே அதற்கான பவர் source இருக்கும்.

பின்னர் நினைவகத்தை பொறுத்த வேண்டும் . பொருத்தும் போதும் நினைவகத்தின் கடியும் மதர் போர்டில் உள்ள காடியும் பொருந்துமாறு இணைக்க வேண்டும்.

பின்னர் பிரான்ட் பநெல் கோன்னேக்டோர்கள் முழுவதையும் இணைக்க வேண்டும் . மதர் போர்டு உடன் வரும் manual புக்கில் இதை பற்றி விரிவாக இருக்கும்.

இப்போது SMPS இல் உள்ள மதர் போர்டு க்கு பவர் கேபிள் ளை இணைக்க வேண்டும். பின்னர் பவர் ஆன் செய்து ஒரு பீப் ஒலி கேட்டவுடன் பவர் ஆப் செய்யவும். அவ்வாறு ஒலி கேட்டல் நம் இனைத்த அணைத்து இணைப்புகளும் மிக சரியாக இருக்கிறது என்று அர்த்தம். அவ்வாறு இல்லாமல் தொடர் ஒலி எழுபினாலோ அல்லது ஒலி எழுப்ப பட விட்டாலோ நாம் இணைப்பை சரி பார்க்க வேண்டும். ஒரு வேலை உங்கள் மதர் போர்டில் ஆன் போர்டு ஸ்பீக்கர் இல்லையெனில் நீங்கள் சரியாக இணைதிருந்தாலும் ஒலி வராது. உங்களுக்கு, CPU வில் மானிடர் இணைத்த பின் நீங்கள் சரி பார்க்கலாம்.


பின் ஹார்டிஸ்க் இணைக்க வேண்டும் . இதனை இணைக்கும் போது இரண்டு பக்கம் screw செய்வது அவசியம் . பின்னர் டேட்டா கேபிள் மற்றும் பவர் கேபிள் இரண்டையும் இணைக்க வேண்டும் . ஹார்டிஸ்க் இணைக்கும் முன் அதை சீரியல் நம்பர் நோட் செய்து கொண்டால் பின்னர் வாரேன்டி செக் செய்யும் போது ஹார்டிஸ்கை கழட்டி மாட்ட தேவையில்லை.

அதன் பின் DVDடிரைவ் இணைக்க வேண்டும்.


பின்னர் SMPS இல் இருந்து வரும் பவர் source ஐ ஹார்டிஸ்க் மற்றும் dvd டிரைவ் களுக்கு கொடுக்க வேண்டும்.

மதர் போர்டு பற்றிய எளிதான தகவல் கல் கிலே
A-SATA
B-???
C-GPU
D-Heat Sink
E-LED
F-???
G-PCIe Slot
H-Capacitors
I-PCI Exp Slots
J-AGP Port
K-Audio
L-Ethernet/Firewire
M-USB
N-VGA Port
P-PS/2 Ports
R-Jumpers
S-Coil
T-Power
U-CPU Socket
V-RAM
W-Resistors
X-Chip
Y-Floppy Disk Header
Z-Power
2-Jumpers
3-Battery
4-BIOS
5-IDE Port
6-IDE Port
அனைத்தும் அசெம்பிள் செய்தவுடன் VGA போர்டில் மானிடர் ஐ இணைக்க வேண்டும். அதன்பின் USB போர்டில் keyboard மற்றும் மௌஸ் ஐ இணைக்க வேண்டும். இப்பொழுது கணிணி அசெம்ப்ளே செயப் பட்டுவிட்டாலும். நம்மால் கணினியை இயக்க முடியாது. ஏனனில் ஆபெரடிங் சிஸ்டம் ஏதேனும் ஒன்றை இன்ஸ்டால் செய்தால் மட்டுமே நம்மால் இயக்க முடியும்.

ஆபெரடிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்வது எப்படி ?

அதற்கு முன் ஹார்ட்டிஸ்கை பார்மட் செய்ய வேண்டும். அடுத்த வகுப்பில் நாம் பார்க்க போவது அதை பற்றி தான்.

கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - பகுதி - 8.

ஒரு கணிணியின் செயல்பாட்டினை உணர்த்துவதும் நாம் கொடுக்கும் இன்புட்களை அவுட்புட் களாக பார்க்க உதவுவது மானிடர் ஆகும் . பொதுவாக மானிடர் தான் கணிணியின் முதல் ஈர்ப்பாக அமைகிறது.

மானிடர்களை CRT LCD என இரு வகையாக பிரிக்கலாம். இதில் CRT வகை மானிடர்கள் அனலாக் தொழி நுட்பத்தில் தயாரானவை. இவை எளிதாக கையாள முடியாத, கனமான, அதிக மின்சாரத்தை எடுத்து கொள்பவை. தொடர்ந்து பார்க்கும் போது அதில் இருந்து வெளிப்படும் அதிக வெளிச்சம் கண்ணுக்கு கெடுதலை தரும். விலை அளவில் பார்க்கும் போது இது மிகவும் சிக்கனமானது. பழுதாகும் பட்சத்தில் எளிதாக சரி செய்யலாம். உதிரி பாகங்களும் எளிதாக கிடைக்கும். தற்போது இதே CRT வகை மானிடர் இல் டிஜிட்டல் தொழில் நுட்பமும்  சேர்ந்து வருகிறது. அதனால் காட்சிகள்  முன்னை விட சிறப்பானதாக தெரியும்.

இருந்தாலும் இடத்தினை அதிக அளவு ஆகிரமித்து கொள்வதாலும் LCD மானிடர் களின் விலை குறைய துவங்கி உள்ளதாலும் சந்தைகளில் விற்பனை குறைய துவங்கி உள்ளது.

LCD மானிடர் கள் குறுகிய காலத்தில் அதிக வளர்ச்சியை கண்டுள்ளன. இதற்கு பெரும் காரணமாய் இருப்பது இது கையாளவதற்கு மிகவும் எளிதானது. அத்துடன் மிக குறைந்த அளவே மின்சாரத்தை எடுத்து கொள்கிறது. இதில் காணும் காட்சிகள்   நல்ல துல்லியத்துடன் கிடைகின்றன அதிக நேரம் கணிணியில் வேலை செய்வோர் பெரும்பாலும் விரும்புவது இவ்வகை மானிடர்களே. தற்போது சந்தைகளில் அதிகம் விற்கப்படுவது 20" ,22" வகை மானிடர்கள் தான். ஏனனில் படங்கள் பார்பதற்கும் வேலை செய்வதற்கும் இத்தகைய மாடல்கள் பெரும்பான்மையாக விரும்பப்படுகின்றன.

நாம் LCD வகை கணிணியில் இருந்தாலும் தொழில் நுட்பம் எங்கோ சென்று கொண்டிருகிறது. LCD அடுத்து பிளாஸ்மா வகை மானிடர்கள் வர துவங்கி விட்டன. இவை LCD யை விட எடை குறைவானது அத்துடன் அதனை விட காட்சிகள் சிறப்பாக கட்ட கூடியாது . அனால் மின்சாரத்தை LCD யை விட அதிகமா எடுத்து கொள்ளும். இதில் இருந்து வெளிப்படும் வெப்பத்தின் அளவும்  LCD யை விட அதிகமா இருக்கும். மிகவும் அருகில் சென்று பார்த்தல் காட்சிகளில் சிறிது தெளிவில்லாமல் தெரியும். இதன் விலை LCD வகையை விட சிறிது அதிகமே.


பாதி வீடுகளில் பிளாஸ்கே இல்லாத போது எங்கே பிளாஸ்மா பற்றி எண்ணுவது.
நாம் வங்கப் போகும் மானிடர் 20" சாம்சுங் - 7,400 RS
அடுத்த வகுப்பில் இருந்து ஒவ்வன்றாக சேர்த்து அசெம்பிள் செய்ய போகிறோம்.

கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - பகுதி - 7

பொதுவா கணிணி வாங்கிய உடனே நாம் பார்ப்பது படமாக தான் இருக்கும் . அப்படி படங்களை பார்பதற்கும் நமது டேட்டா பேக்கப் எடுபதற்கும் ,கணிணியில் மென்பொருள் இன்ஸ்டால் செய்ய, பாடல்களை கேட்க என எல்லாவற்றுக்கும் DVD டிரைவ் தேவையானது.

பொதுவாக இது மூன்று வகைகளில் வருகிறது.
1. ரீடர் ஒன்லி
2.கம்போ டிரைவ் (DVD read cd write )
3.ரைட்டர்
விலையில் அவ்வளவு வித்தியாசம் இல்லை என்றாலும் ரீடர் ஒன்லி அலுவலகங்களுக்கு (பாதுகாப்பு காரணங்களுக்காக ) அதிகம் பயன்படுகிறது . மற்றபடி எல்லோரும் வாங்குவது ரைட்டரைதான் . ரைட்டரில் அதிகம் விரும்பி வங்கப் படுவது சோனி, சாம்சுங் மற்றும் ஹட்ச்பி.

பொதுவான ரைட்டரில் ஏற்படும் பிரச்சினை என்று பார்த்தால் இரண்டு மட்டுமே . ஒன்று DVD read ஆகாது . இதற்கு உங்கள் DVD ரைட்டரின் லென்ஸ் சுத்தமாக துடைத்து வந்தால் பிரச்சினை வராது . இதற்காக தனியே கிளீனிங் DVD உள்ளது .

இரண்டு , DVD டிரைவில் ஏற்படும் ஓபன் மற்றும் க்ளோஸ் பிரச்சினை . இதை நாமே எளிதாக சரி செய்து விடலாம் .இதற்கு காரணமான ரப்பரை மாற்றினாலே போதும் , இதன் விலையும் 10 ரூபாக்குள் முடிந்து விடும் .

தற்போது ஒரு DVD யில் 4.5 GB ரைட் செய்ய முடியும் ,அதுவே டுயல் லேயர் DVD எனில் 8.5 GB ரைட் செய்ய முடியும் .தற்போது இவ்வகை DVD களை நாம் சினிமா படங்கள் வாங்கும் போது பார்க்கலாம் .

இனி வரும் காலங்களில் ப்ளூ ரே டிஸ்க் களும் எளிதாக புழக்கத்தில் வர ஆரம்பிக்கும் . ஒரு பளு ரே டிஸ்க் கில் ஒரு லேயர் எனில் 25 GB ம் இரண்டு லேயர் எனில் 50 GB ம் ரைட் செய்து கொள்ளலாம்.


இன்னும் நாம் 8.5 GB டிஸ்க் கில் நின்று கொண்டிருக்க , அடுத்த கட்ட டெக்னாலஜி ஆக Holographic Versatile டிஸ்க் கள் வர துவங்கி விட்டன . சுமாராக இதில் 1 TB(1024 GB) அளவு டேட்டா ஸ்டோர் செய்து கொள்ளலாம் . நாமல்லாம் எப்ப ப்ளூ ரே டிஸ்க் வந்து அப்புறம் HV டிஸ்க் வரத்துக்குள்ள அடுத்த பத்து டெக்னாலஜி வந்து போயிருக்கும் .

நாம் வாங்கி அஸம்பிள் செய்ய போகும் DVD ரிட்டர் சோனி - 1100 ரஸ்.

கீபோர்ட் இல் PS/2 மற்றும் USB என இரு வகைகள் வந்தாலும் .அதிகம் உபயோகப்படுவது USB வகை கீ போர்ட்களே . wireless வகை கீபோர்ட் களை தவிர்ப்பது நலம் ஒரு சில பிளஸ் பாயிண்ட் கள் இருந்தாலும் அதற்கு பாட்டரி சார்ஜ் விரைவில் இறங்கி விடுவதால் பாட்டரி அடிகடி மாற்றி கொண்டே இருக்க வேண்டும் . அதே போல் மௌஸ் வாங்கும் போது ஒப்டிகால் USB வகை மௌஸ் களே மிகவும் சிறந்தது . பல் மௌஸ் வகைகளில் எளிதில் பால்களின் அடியிலும் மௌஸ் இன் உள்ளேயும் அழுக்கு படிந்து பழுதடைந்து விடும் .

கீபோர்ட் மற்றும் மௌஸ் இல் மைக்ரோசாப்ட் மற்றும் logitech இரண்டும் சிறந்து விளங்குகின்றன . இரண்டின் விலைக்கும் அதிக வித்தியாசம் இல்லை . எனவே நமக்கு பிடித்த மாடல்களுள் ஒன்றை தேர்வு செய்யலாம் . கீபோர்ட் வாங்கும் போதே மல்டிமீடியா கீபோர்ட் வாங்கி கொண்டால் படங்கள் பார்க்கும் போது மிகவும் உபயோகமாக இருக்கும். வாரம் ஒருமுறை மெலிதான துணி முலம் இவற்றை துடைப்பதன் முலம் தூசி படியாமல் பாதுகாக்க வேண்டும் .

நாம் வாங்க போகும் கீபோர்ட் மற்றும் மௌஸ் இன் விலை - 700 RS .

அடுத்த வகுப்பில் நாம் பார்க்க போவது மானிடர்.

Monday, March 8, 2010

பெண்கள் தினம் எப்போது வந்தது?

ஆண்டுதோறும், மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொருளாதாரத்தில், உரிமையில், சமூக அமைப்பு என்று பல வகைகளில் ஆண்களுக்கு அடிமைப்பட்டு, அடைந்து கிடக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டவும், அவர்கள், ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்ற நிலையை உருவாக்குவதற்காகவுமே சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

* முதன் முதலில் 1909ல் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுக்கப்பட்டது. அமெரிக்காவில் சோஷலிச கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை பார்லிமென்ட் ஏற்று, தேசிய பெண்கள் தினம் கடைபிடிக்க முடிவு செய்யப் பட்டது. அதன்படி, பிப்.,28ம் தேதி பெண்கள் தினமாக கொண்டாட தீர்மானிக்கப்பட் டது.

* பிறகு, கோபன்ஹேகனில் 1910ல் நடந்த சர்வதேச மாநாட்டில், பெண்கள் தினம் கொண்டாடுவது பற்றி விரிவாக பேசப் பட்டது. அப்போது, சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடும் பல நாடுகளுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.

* இந்த வேண்டுகோளின்படி, பல நாடுகள் 1911ல் மீண்டும் விவாதித்தன. முதன் முறையாக, சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 19ம் தேதி கொண்டாட முடிவு செய்யப் பட்டது. இதை ஏற்றுக் கொண்ட பல நாடுகளில் அன்றைய தினம், பிரம்மாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பல லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர்.

* அதன்பின், மேற்கத்திய, ஐரோப்பிய நாடுகள் 1913ல் ஒன்று கூடி, மார்ச் 8ம் தேதியை பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்தன. இது பற்றி ஐ.நா., சபையில் விவாதிக்கப்பட்டு, சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8ம் தேதி என இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

* அதன் பின்னரும் பெரும்பாலான நாடுகளில் பெண்களுக்கு உரிய உரிமை, சலுகை எதுவும் கிடைக்கவில்லை. 1946ல் தான் பெண்கள் ஓரளவு உரிமை பெற துவங்கியுள்ளனர் என்று அங்கீகரித்து, அது முதல் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி, சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடும் இச்சமயத்தில், பெண்களின் நிலை எப்படி இருக்கிறது?

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் பெண்கள் சொந்த காலில் நிற்கும் அளவுக்கு வளர்ந்து உள்ளனர் என்று தான் கூற வேண்டும்.பெண் அடிமைத்தனம் அதிகமாக இருந்த நாடுகளில் கூட, இப்போது போர் முனைக்கு போகும் அளவுக்கு பெண்கள் உயர்ந்து வருகின்றனர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது தானே!கரண்டி பிடித்த கைகள் இன்று கம்ப்யூட்டரில் விளையாடுகிறது. நவீன உலகில் எந்த துறையானாலும், ஆண்களுக்கு சமமாக அதில் புகுந்து சாதிக்க ஆரம்பித்து விட்டனர். இனி, அவர்களது வளர்ச்சியை எந்த முட்டுக் கடைப் போட்டும் தடுக்க முடியாது. ஆண்களால் மட்டுமே செய்ய முடியும் என்று நினைத்து வந்த பல துறைகளில் முதன் முதலாய் தங்கள் காலடி வைத்து ஆண்கள் உலகை ஆட்டம் காண வைத்து வருகின்றனர்.

சர்வதேச பெண்கள் தினம் : இன்று சர்வதேச பெண்கள் தினம். பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பொருளா தாரம், அரசியல் மற்றும் சமூகத்தில் பெண்கள் நிகழ்த்திய சாதனைகளை பாராட்டும் வகையிலும் இன்றைய தினத்தை கொண்டாட வேண்டும். சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் மற்றும் சில நாடுகளில் இந்நாள் அதிகாரப்பூர்வ விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இது போன்று அறிவிக்கப்பட வேண்டும். இன்றைய தினத்தில் தாயார், மனைவி, சகோதரி மற்றும் சக பெண் பணியாளர்களுக்கு ஆண்கள் பரிசுகள் வழங்கி வருகின்றனர். சில நாடுகளில் அன்னையர் தினத் திற்கு சமமாக இத்தினத்தை கடைபிடிக்கின்றனர். உலகில் இன்று பெண்கள் பிரதமராகவும், விண்வெளி வீராங்கனையாகவும், டாக்டர்களாகவும், இன்ஜினியர்களாகவும், பைலட்களாகவும், ராணுவ வீரர்களா கவும், விளையாட்டு வீராங்கனைகளாகவும், விளம்பர மாடலிங்காகவும் , தொழிலதிபர்களாகவும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களாகவும் மேலும் பல துறைகளில் மேம்பட்டவர்களாகவும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பெண்களின் சாதனைகள் : இந்திய வரலாற்றில் பெண்கள் பிரதம ராகவும், ஆட்சியாளர்களாகவும், கல்வியில் சிறந்தவர்களாகவும் இடம் பெற்றுள்ளனர். இன்று ஜனாதிபதியாகவும், முதல்வராகவும், சபாநாயகராகவும், எதிர்கட்சி தலை வராகவும் பெண்கள் இருக்கின்றனர். பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்திருப்பதில் உலகின் முதன்மையான நாடாக இந்தியா திகழ்கிறது. பெண்கள் ஆண்களுக்கு சமமாக சட்டரீதியான உரிமைகளை பெற்றுள்ளனர். இந்தியாவில் உள்ள நகர்ப்புற பெண்கள் சம அந்தஸ்து பெற்றவர்களாகவும், கல்வி யறிவு உடையவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் கிராமப்புற பெண்களின் வாழ்க்கை தரம் சற்று பின்தங்கியே உள்ளது. பெண் களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளான பெண் சிசுக்கொலை, குழந்தை திருமணம், பெண் அடிமைத்தனம் போன்றவை தடுக்கப் பட்டுள்ளது. இருப்பினும் பாலியல் கொடுமை, வரதட்சணை, பேறுகால மரணம், தீ விபத்துகளுக்கு ஆளாவது என பெண் கொடுமைகள் இன்றும் தொடர்கின்றன. அரசியல், தொழில், கல்வி, போன்றவற்றில் ஆண்களுக்கு நிகரான எண்ணிக்கையில் பெண்கள் இன்னும் உயரவில்லை. பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் சம உரிமை, சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர இன்றைய தினத்தை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

சாதனை படைக்க பெண்கள் : ஆண்களை விட பெண்களே அதிக சக்தி வாய்ந்தவர்கள் என்கின்றனர் விஞ்ஞானிகள். பெண்களை குளிரும், உஷ்ணமும் அதிகமாகப் பாதிப்பதில்லை.இயற்கையிலேயே பெண்களுக்கு மனோ பலமும், உடல்பலமும் இருக்கிறது. பெண் குழந்தைகளே ஆண் குழந்தைகளை விட, இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே நடக்கப் பழகி விடுகின்றன; விரைவில் பல் முளைப்பதும் பெண் குழந்தைகளுக்குத் தான்.வார்த்தைகளை சுத்தமாக உச்சரிப்பதும் பெண் குழந்தைகள் தான். பெண்களுக்குத் தான் புத்திக்கூர்மை அதிகம் என்கிறது விஞ்ஞான ஆய்வு முடிவு.

"எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி!'

                                                                          - பாரதியார்

Sunday, March 7, 2010

நித்தியானந்தாவின் சிறப்பு பேட்டி... (ஆங்கிலம் மற்றும் தமிழில்).



தமிழுக்கு கீழ் உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்...

Saturday, March 6, 2010

கர்ணா படப்பாடல் - ரஞ்ஜிதா-அர்ஜுன்.

நித்யானந்தாவின் நிஜ முகம்...