Friday, October 30, 2009

சாகித்ய அகாதமி விருது பெற்ற படைப்புக்கள்


Wednesday, October 14, 2009

குருவுக்கும் நாம் அடிமையல்ல!

யார் மீது ஆன்மிக உணர்வு பெறுகிறோமோ அவரே நமக்கு உண்மையான குரு. ஆன்மிகப் பெருவெள்ளம் நம்மிடம் பாய்வதற்கான கால்வாய் அவர். தனிமனிதரை நம்புவது பலவீனத்திலும் உருவவழிபாட்டிலும் தான் கொண்டுபோய்விடும். ஆனால், ஆழ்ந்த குரு பக்தி நம்மைவிரைவில் முன்னேறச் செய்யும். உண்மையான குரு இருந்தால் அவரை மட்டுமே வணங்கு. அது மட்டுமே நம்மை கரை சேர்க்கும்.பகவான் ராமகிருஷ்ணர் குழந்தையைப் போல தூய்மையானவர்.

அவர் ஒரு போதும் பணத்தை தன் மனதாலும் தொட்டதில்லை. காமசிந்தனை அவரிடத்திலிருந்து முற்றிலும் நீங்கிவிட்டது. பெரிய மகான்கள் தங்கள் சிந்தனையை முழுமையாக ஆன்மிகத்திலே செலுத்தி விடுவர். உண்மையான ஞானியிடத்தில் பாவத்தை பார்க்க இயலாது. ராமகிருஷ்ணரின் கண்கள் தீயவற்றைக் காண இயலாத அளவுக்கு தூய்மை பெற்றிருக்கின்றன.

இத்தகைய பரமஹம்சர்கள் உலகில் இருப்பதால் தான் உலகம் செயல்படுகிறது. அவர்கள் அனைவரும் இறந்து விடுவார்களானால், உலகமே சுக்கல் சுக்கலாக நொறுங்கி மண்ணாகி விடும். குருவிற்கு கடமைப்பட்டிருக்கிறோம் என்பதற்காக அடிமைப்பட வேண்டியதில்லை. குரு நமக்கு உதவுபவர் என்ற கருத்தை மட்டுமே கொண்டிருக்க வேண்டும். உங்களுக்குள் நீங்களே முயன்று உண்மையைத் தேடுங்கள்.-விவேகானந்தர்

இதயம் துடிப்பது எதற்காக?

* தன்னடக்கம் பழகாதவர், துர்நடத் தையுள்ளவர்கள், மனதில் அமைதி இல்லா தவர்கள், தியானம் பழகாதவர்கள் ஆகிய இவர்கள் பெரும் படிப்பாளி களாக இருந்தாலும் கடவுளை அடையத் தகுதி இல்லாதவர்கள் ஆவார்கள்.

* உலகத்தை இருக்கின்றபடி ஏற்றுக் கொள்ளுங்கள். தீமையை எண்ணி வருத்தம் கொள்ளா தீர்கள். திருத்தம் செய்வதாக இருந்தால் முதலில் உங்கள் மனதை சீர்திருத்தம் செய்யுங்கள்.

* எத்துன்பம் வந்தாலும் அமைதியாகப் பொறுத்துக் கொள்ளுங்கள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர் கள் நாம் என்ற எண்ணத்துடன் பெருமிதஉணர்வு கொள்ளுங்கள்.

* இதயம் துடிக்கும் சப்தம் எங்கோ வெளியில் கேட்ப தாக எண்ணாதீர்கள். நம் உள்ளத்தில் இறைச்சக்தி உறைந்திருக்கிறது என்பதற்கு அடையாளமாகத் தான் நம் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது.

* ஆனந்தம் நம் உள்ளத்தில் எந்த அளவுக்கு மறை முகமாக உண்டாகிறதோ, அந்த அளவுக்கு நாம் ஆன்மிக வாழ்வில் முன்னேற்றம் உடையவர்களாக இருக்கிறோம்.

* சுதந்திர உணர்வைத் தன்னிடத்தில் உணர்பவன் நெஞ்சில் அன்பு ஊற்றெடுக்கும். அடிமைப்புத்தி கொண்ட மனிதன் யாரையும் நேசிக்க முடிவ தில்லை.

வாழ்வில் அர்த்தம் வேண்டும்...

* நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று கூறு. நீ உறுதியுடன் இருந்தால் கொடிய விஷம் கூட சக்தியற்றதாகிவிடும்.

* நீ வலிமை உள்ளவனாக இருந்தால் நீ ஒருவனே உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமமானவன் ஆவாய்.

* மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளரவளர அதிக அளவில் அறிவாற்றல் வளரும். சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் நம்மைக் காத்து விடுதலை பெறச் செய்யும்.

* உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே குடி கொண்டிருக்கின்றன. உனது மனம், இதயம், ஆன்மா என்ற மூன்றினையும் அர்ப் பணித்து செய்யும் செயல்கள் நிச்சயம் வெற்றி பெறும்.

* மகத்தான செயல்களைச் செய்வதற்காகவே ஆண் டவன் உன்னைப் படைத்திருக்கிறான். அந்தச் செயல் களைச் செய்து வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கு.

* நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். வலிமை உடையவன் நீ என்று நினைத்தால் வலிமை உடையவனாகி விடுவாய்.

* ஒரு நல்ல லட்சியத்தைத் தேர்ந்தெடுத்து முறையான வழியைக் கைக்கொண்டு வெற்றி வீரனாக விளங்கு. நீ வாழ்ந்து முடிந்த பின் ஓர் அழியாத அறிகுறி எதையாவது விட்டுச் செல்

வெற்றிக்கு சிறந்த வழி...

* எத்தகைய கல்வி நல்லொழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமை வளர்க்கச் செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன்னுடைய சுயவலிமையைக் கொண்டு நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை.

* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றுமே நமக்குத் தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கை ஆகும். நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை பிறருக்கு நன்மை செய்வது மட்டும் தான்.

* சிந்தனையின் தொண்ணூறு சதவீத ஆற்றல் சாதாரண மனிதர்களால் வீணடிக்கப்படுகிறது. எனவே, தொடர்ந்து மனிதன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான்.

* நாம் வாழும் காலமோ குறுகியது. இளமையும், வலிமையும், வளமையும், அறிவுக்கூர்மையும் கொண்ட வர்களே இறைவனை அடையத் தகுதி உடையவர்கள். அதனால், இளமையிலேயே கடவுளை அறிய முற்படுங்கள்.

* ஒரு கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஒரு கருத்தையே உங்கள் வாழ்க்கை மயமாக்குங்கள். அதையே கனவு காணுங்கள். மூளை, தசைகள், நரம்புகள் என்று ஒவ்வொரு அவயங்களிலும் அந்தக் கருத்தே நிறைந்திருக்கட்டும். வெற்றிக்கு இதுதான் சிறந்த வழி.

முழு பொறுப்பையும் சுமப்போம்...

* சிங்கங்களே! எழுந்து வாருங்கள். வீணான மயக்கங்களை உதறித்தள் ளுங்கள். நீங்கள் சுதந்திரமானவர்கள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர் கள்.

* பலவீனத்திற்கான பரிகாரம், அந்த பல வீனத்திற்கான காரணத்தை சிந்திப்ப தல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்.

* உலகம் வேண்டுவது ஒழுக்கமே. கொழுந்து விட்டெரியும் அன்பும், தன்னலமில்லாத பண்பும் யாரிடம் இருக்கிறதோ அவரை இம்மண்ணுலகமே வேண்டி நிற்கிறது.

* எழுந்து நில்லுங்கள். தைரியமாயிருங்கள். பலமுடைய வராகுங்கள். உங்கள் மீதே முழுப் பொறுப்புகளையும் சுமந்து கொண்டு வாழப் பழகுங்கள்.

* சிரத்தை தான் நமக்குத் தேவை. மனிதனுக்கு மனிதன் வேறுபடுவதற்குக் காரணமே இந்த சிரத்தை தான். சிரத்தை உடையவன் வெற்றி பெறுகிறான். சிரத்தை இல்லாதவன் தாழ்ந்தவனாகிறான்.

* ஒரு குறிக்கோளை எடுத்துக் கொள்ளுங்கள். அதையே கனவு காணுங்கள். அதன் நோக்கியே வாழ்க்கை நடத்துங்கள். அந்த கருத்தை உயிர்மூச்சாகக் கொண்டு செயல்படுங்கள். வெற்றி பெறுவீர்கள்.

எதையும் நாம் சாதிக்கலாம்...

* நம்முள் நன்மை, தீமை என்று இரு விதமான எண்ணங் களும் இருக் கின்றன. நல்ல விஷயங்களில் மட்டும் கருத்தைச் செலுத்தினால் மட்டுமே நாம் நல்லவர்களாக முடியும்.

* நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். எதிர்காலத்தில் நாம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை நம்முடைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும்.

* மகத்தான செயல்களைச் செய்வதற்காக ஆண்டவன் நம்மைப் படைத்திருக்கிறான். அவற்றை செய்வதற்கு விடா முயற்சியோடு உங்கள் கடமைகளைச் செய் யுங்கள்.

* சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் நம்மைக் காக்கும். நம்மை விடுதலை பெறச் செய்யும். மனதை ஒருமுகப்படுத்தும் போது நம் மனோசக்தி வளரும். அதனால், நாம் அதிக அளவில் அறிவைப் பெறமுடியும்.

* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை. அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.

* நாம் எதையும் சாதிக்கவல்லவர்கள். உறுதியான மன நிலையில் விஷத்தைக் கூட பொருட்படுத்தாமல் இருந்தால், அந்த விஷம் கூட சக்தி அற்றதாகி விடும்.

கடமையில் கண் வையுங்கள்...

* உலகம் மிகப்பெரிய உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமை யுடையவர்களாக ஆக்கிக் கொள்வதற் காக வந்திருக்கிறோம்.

* மரணம் வருவது இவ்வளவு உறுதியாக இருக்கும்போது, நல்ல ஒரு செயலுக் காக உயிரை விடுவது மேலாகும்.

* கோழைகளாக இருப்பதில் பயன் எதுவுமில்லை. இங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்யாதீர்கள். முழுமையாக கடமையாற்றுவதில் கண் வையுங்கள்.

* மிருகஇயல்பு, மனித இயல்பு, தெய்வீக இயல்பு என்று மூன்று விதமான குணங்களால் மனிதன் உருவாக்கப்பட்டிருக்கிறான்.

* தெய்வீகஇயல்பை வளர்ப்பது நல்லொழுக்கம். மிருகஇயல்பை வளர்ப்பது தீயொழுக்கமாகும்.

* ஆன்மிக உணர்வில்லாமல் பெறுகின்ற மிதமிஞ்சிய அறிவும் ஆற்றலும் மனிதர்களைக் கீழ்நிலைக்கு தள்ளி விடுகின்றன.

* நன்மை செய்து கொண்டிருப்பது தான் வாழ்க்கை. மற்றவர்களுக்கு நன்மை செய்யாமல் இருந்தால் வாழ்க்கை பயனற்றதாகிவிடும்.

* வாழ்க்கை என்னும் கத்தி யாருக்கும் பயனில்லாமல் துருப்பிடித்து அழிந்து போவதைவிட, பிறருக்கு உதவி செய்வதால் தேய்ந்து அழிவதே மேலானது.

உன் வாழ்க்கை உன் கையில்...

* உங்கள் உடலையும், உள்ளத்தையும், அறிவையும், ஞானத்தையும் பலவீனப் படுத்துகின்ற எந்த விஷயத்தையும் நஞ் சென ஒதுக்குங்கள்.

* நீங்கள் போதுமான அளவுக்கு நெடுங் காலமாக அழுது விட்டீர்கள். இனியும் அழத்தேவையில்லை. எழுந்து நின்று உங்கள் சுயகால்களில் நின்று போராடத் தயாராகுங்கள்.

* பலமற்ற மூளையால் ஒன்றும் செய்ய முடியாது. பலமற்ற நிலையை மாற்றி மூளையைப் பலப்படுத்த வேண்டியது உங்கள் முதல் கடமை. பலம் வந்தால் வெற்றி தொடர்ந்து பின்னால் வரும்.

* தைரியமாயிருங்கள். எல்லாவற்றிற்கும் மேலானது துணிவு. இவ்வுலகில் வாழ்வு எத்தனை நாள்? நெஞ்சில் துணிவிருந்தால் மட்டுமே அரிய பெரிய செயல்களை எல்லாம் நிறைவேற்ற முடியும்.

* நாம் எப்படி எல்லாம் இருக்க விரும்புகிறோமோ அப்படி யெல்லாம் நம் வாழ்வை அமைத்துக் கொள்ளும் ஆற்றல் நம்மிடையே இருக்கிறது. உன் வாழ்க்கை உன் கையில் என்பது இதைத்தான்.

* இந்த உலகம் மிகப்பெரிய உடற்பயிற்சிக்கூடம். இங்கு நம்மை வலிமையுடையவர்களாக ஆக்கிக் கொள்வதற் காக நாம் வந்திருக்கிறோம்.

நம்நாட்டின் மதிப்புக்கு காரணம்...

* தைரியமாயிருங்கள். எல்லாவற் றிற்கும் மேலாக என் பிள் ளைக ளாகிய நீங்கள் துணிவா யிருத்தல் வேண்டும். எதற் காகவும் எள் ளளவும் விட்டுக் கொடுத்தல் கூடாது.

* உங்களுக்குள் இருக்கும் தெய் வத் தன்மையை வெளியே புலப்படுத் துங்கள். தெய்வீகத் தன்மையைச் சுற்றி, ஒவ்வொரு செயலும் இசைவாக ஒழுங்குபடத் தொடங்கும்.

* எல்லா <உயிர்களும் கோயில்கள் என்பது உண்மை தான். ஆனால், மனிதர்களே அனைத்திலும் உயர்ந்த கோயில். அதை வழிபட இயலாதவன் என்றால், வேறு கோயில் எதுவும் எப்போதும் பலன் தராது.

* மலைபோல உயர்ந்த தடைகளையும் தாண்டிச் செல் லும் மனவுறுதியோடு போராடுங்கள். நம்பிக்கையும், நேர்மையும், பக்தியும் உங்களிடம் இருக்கும் வரை வெற்றி உங்களைத் தேடிவரும்.

* இன்று நமது நாட்டின் மக்கள் மதிக்கப்படுவது நம் முடைய ஆன்மிக சிந்தனை, எண்ணங்கள் ஆகியவற்றுக்காகத்தான். ஆனால், அவற்றின் பெரு மையை நாம் உணரவில்லை. வெளிநாட்டு மக்கள் நமது ஆன்மிக வளத்திற்காகவே நம்மை நாடு கிறார்கள்.

பயம் எதற்கும் பயன்படாது...

* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய மூன்றும் தான் நமது இன்றைய தேவை.

* வெற்றி தோல்வியைப் பற்றி சிறிதும் சிந்திக்காதீர்கள். தியாக உணர்வோடு முழுமையாக கடமையைச் செய்யுங்கள்.

* நம் வாழ்க்கை ஒரு நாள் முடியப் போவது உறுதி. அதற்குள் ஒரு நல்ல செயலைச் செய்துவிட வேண்டும் என்று உறுதி கொள்ளுங்கள்.

* கோழை தான் தப்பி ஓடமுயற்சி செய்வான். நிலைமையைச் சீர்படுத்தி அமைக்க கோழைத்தனம் பயன்படாது. எடுத்த செயல் முடியும் வரை சலியாது உழைத்து முன்னேறுங்கள்.

* தன்னை அடக்கி ஆளப் பழகிக் கொண்டவன் வெளியில் உள்ள எதற்கும் வசப்பட மாட்டான். அவனுக்கு அதன் பின் அடிமைத்தனம் என்பதே இல்லை.

* நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற வீணான மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அமரத்துவம் பெற்றவர்கள் .அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். இறையருள் உங்களுக்குப் பரிபூரணமாக இருக்கிறது.

* எல்லாவிதமாக அறிவும் ஆற்றலும் மனிதனுக்குள்ளே இருக்கிறது. இந்த அறிவை விழித்து எழும்படிச் செய்வது மட்டும் தான் ஒருவனுடைய வேலையாகும்.
- விவேகானந்தர் .

தீமையில்லாத செயல் இல்லை...

* அனைவரும் அரும்பாடுபடும் நேரம் இது. எதிர்காலம் நம் முயற்சியைப் பொறுத்தே உள்ளது. எனவே, ஓயாது உழையுங்கள்.

* முயற்சியோடு ஒரு செயலில் ஈடுபடும்போது, ஏராளமான சக்தி நம் மிடத்தில் வெளிப்படுவதைக் காண லாம். பிறருக்காகச் செய்யும் சிறுநன்மைக்கான முயற்சியில் கூட சிங்கம் போன்ற பலனை நாம் பெறமுடியும்.

*எந்தச் செயலையும் நன்மை, தீமை என்று இரண்டின் கலப்பில்லாமல் செய்ய முடியாது. தீயைச் சூழ்ந்துநிற்கும் புகையைப் போல, சற்றேனும் தீமையின் நிழல் எச் செயலோடும் ஒட்டிக் கொண்டு தான் இருக்கும். மிகக் குறைவான தீமையும், மிகுந்த நன்மையும் இருக்கும் செயல்களைச் செய்ய முற்படுங்கள்.

*ஒருவரிடத்தும் பொறாமை கொள்ளாதீர்கள். கடவுளை எல்லாவுயிர்களுக்கும் தந்தையானவர் என்று ஒப்புக்கொண்டுவிட்டு, ஒவ்வொரு மனிதனையும் சகோதரனாக நினைக்கவில்லை என்றால் நம் வழிபாடு பொருளற்றதாகிவிடும்.

* பொறாமையும், சோம்பேறித்தனமும் அடிமையின் இயல்புகள். அவற்றை உதறித் தள்ளிவிட்டு சுதந்திரமுடைய மனிதர்களாக சுறுசுறுப்போடு உங்கள் கடமைகளைச் செய்யத் தொடங்குங்கள். வெற்றி பெறுவீர்கள்.

- விவேகானந்தர்

வெற்றிநோக்குடன் வாழுங்கள்...

* மனிதனுக்குள் இருக்கும் தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி துன்பப்படுவோருக்கு உதவுவது ஒன்று தான்.


* மனதை ஒருமுகப்படுத்துவது தான் கல்வியின் அடிப்படை லட்சியமாகும்.

* வெற்றி பெறுவதற்கு விடா முயற்சியும், தளராத மனவுறுதியும் தேவை. நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள்.

* நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை கொண்டு வெற்றி நோக்குடை யவர்களாக வாழுங்கள். வெற்றிக்கான ரகசியம் இது தான்.

* தான் என்னும் ஆணவத்தையும், பேராசையையும் அடக்கும் போது பெரும் வெற்றிகளைப் பெறமுடியும். அரும்பெரும் செயல்களைத் தியாகத்தால் மட்டுமே சாதிக்க முடியும்.

* சுயநலம் ஒழுக்கக்கேட்டினை விளைவிக்கும். சுயநலமின்மையோ நல்லொழுக்கத்தைத் தரும்.

* பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே ஆன்மிகம் ஆகும். ஆன்மிக ஈடுபாட்டினால் மட்டுமே மனிதனுக்குள் புதைந்திருக்கும் பரிபூரணத்தன்மை வெளிப்படும்.
- விவேகானந்தர்

முதலில் உங்களை நம்புங்கள்!!!

* நம்மைப் பற்றிச் சிந்திக்காமல், மற்றவர்களுடைய நன்மையைக் குறித்துச் சிறிதளவு நினைத்தால் கூடப் போதுமானது. இந்தச் சிந்தனை சிங்கத்திற்குச் சமமான ஆற்றலை நமது இதயத்திற்குப் படிப்படியாகத் தரும்.

* அறிவு, உள்ளம் ஆகிய இரண்டில் எதைப் பின்பற்றுவது என்ற போராட்டம் எழும் போது உள்ளம் சொல்வதையே நீங்கள் பின்பற்றுங்கள். அறிவால் அடையமுடியாத உயர்ந்த இடத்திற்கு நல்லமனநிலை ஒருவனை அழைத்துச் செல்லும்.

* உங்களிடமே நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். ஒருகாலத்தில் நீங்கள் வேதகாலத்தைச் சேர்ந்த ரிஷிகளாக இருந்தீர்கள். இப்போது நீங்கள் வேறுவித வடிவம் தாங்கி வந்திருக்கிறீர்கள்.

* மற்றவர்களுக்காக நீங்கள் மேற்கொள்ளும் மிகக் குறைந்த அளவு உழைப்பும் நமக்குள்ளே இருக்கும் சக்தியைத் தட்டி எழுப்புகிறது.

* ஒரு எஜமானைப் போல உங்கள் செயல்களைச் செய்யுங்கள். அடிமையைப் போல உங்கள் செயல்பாடுகள் அமையக்கூடாது. முழுமையான சுதந்திர உணர்வும், அன்பும் கொண்டு உங்கள் கடமைகளில் பணியாற்றுங்கள்.

* கர்மயோகம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒருவருக்கு அவர் யார், எப்படிப்பட்டவர் என்ற சிந்தனையோ கேள்வியோ இல்லாமல் கூட அவருக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது தான்.

-விவேகானந்தர்

தவறுக்காகவும் மகிழலாம்...

* எல்லாவற்றிலும் கடவுளைக் காண்பது தான் நமது லட்சியம். எல்லாவற்றிலும் பார்க்க முடியாவிட்டால் நாம் மிகவும் நேசிக்கும் ஒன்றிலாவது பார்க்க வேண்டும். பிறகு மற்றொன்றில் கடவுளைப் பார்க்க வேண்டும். இப்படி ஒவ்வொன்றையும் தெய்வாம்சமாக பார்க்கத் தொடங்கினால் நம் ஆன்மிகக் கருத்தை விரிவுபடுத்திக் கொள்ள முடியும்.


* ஒன்றேயான இறைவன் நம் மனத்தை விட அதிவேகமாக இயங்கக் கூடியவர். அதிவிரைவாகச் செயல்படக்கூடியவர். தேவாதிதேவர்களுக்கும் எட்டமுடியாத அரிதானவர். சிந்தனைக்கும் சொல்லுக்கும் அப்பாற்பட்டு நிற்பவர். அப்படிப்பட்ட இறைவன் இயங்கினால் அன்றி உலகம் இயங்கமுடியாது.

* என்னைப் பொறுத்த வரையில் செய்த நல்ல செயல்களுக்காக மகிழ்கிறேன். செய்த தீய செயல்களுக்காகவும் மகிழ்கிறேன். செயல்களைச் சரியாக செய்தததற்காகவும் மகிழ்கிறேன். அதேவேளையில் செய்த தவறான செயல்களுக்காகவும் மகிழ்கிறேன்.

* மகிழ்ச்சி கொள்வது ஏனென்றால், என் தவறுகள் ஒவ்வொன்றும் ஓர் உயர்ந்த பாடத்தை கற்பித்திருக்கிறது. இதற்கு முன் எண்ணிய எண்ணங்களின் மொத்தவடிவமாகத் தான் இன்று நானிருக்கிறேன். எண்ணிய ஒவ்வொரு எண்ணமும் அதற்கான பலன்களை என்னிடத்தில் உண்டுபண்ணியிருக்கின்றன.

-விவேகானந்தர்

Tuesday, October 13, 2009

ஆழ்மனதின் அற்புத சக்த்கள்-1

ஆரக்கிள் என்ற குறி சொல்லும் தேவ தேவதைகள் பண்டைய கிரேக்கர் காலத்தில் மிகவும் பிரபலம்.


கி.மு. ஆறாம் நூற்றாண்டில் க்ரோசியஸ் என்ற மன்னன் அரசியலில் ஒரு முக்கியமான முடிவு எடுக்க ஆரக்கிள்களிடம் குறி கேட்க எண்ணினான். அதற்கு முன் அந்த ஆரக்கிள்கள்களுக்கு உண்மையில் அந்த அற்புத சக்திகள் உள்ளனவா என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முடிவு செய்தான். உடனே அவன் ஏழு திசைகளில் ஏழு ஆரக்கிள்களிடம் தன் சேவகர்களை அனுப்பி "இன்றிலிருந்து சரியாக நூறு நாட்கள் கழித்து அவர்களிடம் கேளுங்கள் "இந்த நேரத்தில் எங்கள் அரசர் க்ரோசியஸ் என்ன செய்து கொண்டிருக்கிறார்?" என்று. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை என்னிடம் உடனடியாக வந்து சொல்லுங்கள்" என்று கட்டளையிட்டான்.

அந்த நூறாவது நாள் வந்ததும் க்ரோசியஸ் எந்த யூகத்திலும் அந்த ஆரக்கிள்கள் தன் செயலைச் சொல்லி விடக்கூடாது என்று எண்ணி வழக்கமாகச் செய்யும் எல்லாக் காரியங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு வினோதமான ஒரு காரியம் செய்தான். ஒரு ஆமையையும் ஒரு ஆட்டையும் கொன்று இரண்டையும் ஒரு பெரிய வெண்கலப் பாத்திரத்தில் போட்டு வெண்கலத் தட்டால் மூடி வேக வைத்துக் கொண்டிருந்தானாம். டெல்·பை என்ற ஆரக்கிள் "எனக்கு ஆமை வாசனை தெரிகிறது....நெருப்பில் ஒரு ஆட்டுக்குட்டியின் சதையும் பொசுங்குகிறது தெரிகிறது. அது வெண்கலப்பாத்திரத்தில் போடப்பட்டிருக்கிறது. அதன் மூடியும் வெண்கலம்" என்று கூறினாராம்.

அரசர் அந்தப்புரத்தில் இருக்கிறார், மந்திரிகளுடன் ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறார் என்று யூகத்தில் சொல்வது சுலபம். அது பல நேரங்களில் பலிக்கவும் கூடும். ஆனால் க்ரோசியஸ் மன்னன் செய்து கொண்டு இருந்ததைச் சொல்ல வேண்டுமானால் உண்மையாகவே அந்த ஆரக்கிளிடம் அந்த சக்தி இருந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

அந்த நாள் முதல் இந்த நாள் வரை இது போன்ற கதைகள் ஏராளம். ஒரு உண்மை சம்பவம் இருந்தால் ஆயிரம் கற்பனைச் சம்பவங்கள் புனைக்கப்படுகின்றன. கேட்பவைகளில் இருந்தும் படிப்பவைகளில் இருந்தும் உண்மையான சம்பவத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமே. எதை யார் கூறுகிறார்கள், கூறுபவர்களின் நம்பகத்தன்மை எத்தகையது, எந்த ஆதாரத்தில் சொல்கிறார்கள் என்றெல்லாம் ஆராய்ந்து உண்மை என்று நம்பக்கூடியதை மட்டுமே நான் இந்த உளவியல் தொடரில் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் நடந்ததாக வரலாற்றில் சொல்லப்பட்ட அந்த சம்பவத்தைப் பார்த்தோம். 1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் ·ப்ளோரிடாவில் உள்ள ஒரு சிறு நகரத்தில் நடந்த இன்னொரு சம்பவத்தைப் பார்ப்போம். அந்த நகரில் ஒரு மத்திய வயது நபர் ஒரு நாள் வீட்டை விட்டு தன்னுடைய டிரக்கில் கிளம்பிப் போனவர் பின் திரும்பி வரவேயில்லை. உடனடியாகப் போலீசில் தெரிவிக்கப்பட்டது. யாரும் கொன்றிருக்கவோ கடத்தியிருக்கவோ வாய்ப்பில்லை என்பதை போலீசார் ஆரம்பத்திலேயே முடிவுக்கு வந்தனர். ஆனால் பிறகு அவரைக் கண்டு பிடிக்க முயன்ற போலீஸாரின் முயற்சி வெற்றி பெறவில்லை. தீயணைப்புப் படையினர் உதவியும் பெற்று பல இடங்களில் சுமார் 16 மாதங்கள் முயன்று தோற்ற போலீசாருக்கு ஒரு அபூர்வ சக்தி படைத்த பெண்மணியின் உதவியைப் பெற ஆலோசனை வழங்கப்பட்டது. காணாமல் போன மனிதர்கள், பொருட்கள் பற்றி அந்தப் பெண்மணி துப்பு தருவதில் வல்லவர் என்று சொல்லப்பட்டது.

நம்பிக்கை சுத்தமாக இல்லாவிட்டாலும் முயற்சி செய்வதில் நஷ்டமில்லை என்று அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி அந்தப் பெண்மணியை அணுகினார். அந்தப் பெண்மணி தன்னிடம் ஒரு மாதத்திற்கு அப்பாயின்மென்ட் இல்லையெனவும் ஒரு மாதம் கழித்து காணாமல் போன நபரின் ஏதாவது சில உடைமைகளை எடுத்துக் கொண்டு வருமாறும் அதிகாரியிடம் சொன்னார். அந்த அதிகாரியும் அந்த நபரின் ஷ¥, க்ரெடிட் கார்டு போன்றவற்றை எடுத்துக் கொண்டு அந்தப் பெண்மணியிடம் சென்றார்.

அந்த நபரின் பொருட்களைக் கையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிய அந்தப் பெண்மணி சில நிமிடங்களில் சில துப்புகள் தந்தார். அந்த நபரின் உடல் இன்னும் அந்த டிரக்கின் உள்ளே தான் இருக்கிறது. எங்கிருந்தோ கீழே விழுவது போன்ற உணர்வு ஏற்படுவதால் அந்த மனிதர் அந்த டிரக்கோடு கீழே ஏதாவது பள்ளத்தில் விழுந்திருக்கலாம் என்று தெரிவித்தார். அந்த இடத்தின் அருகே சிவப்பு செங்கல்கள், பழைய ரெயில்வே டிராக் தென்படுகின்றன என்றும் சொன்னார். அந்த மாகாண வரைபடத்தில் ஒரு சதுரத்தை வரைந்து அந்த இடத்தில் தேடச் சொன்ன அந்தப் பெண்மணி 1,2,4,5 எண்களுக்கு சம்பந்தமுள்ள இடங்களில் பார்க்கச் சொன்னார்.

அந்த அதிகாரி சில நாட்கள் அந்தப் பெண்மணி வரைபடத்தில் வரைந்த சதுரத்திற்குள் இருக்கும் இடங்களில் எல்லாம் தேடி சலித்துப் போனார். அந்த நபரின் உடல் கிடைப்பதாகத் தெரியவில்லை. அந்தப் பெண்மணியை நம்பி வந்த தன் முட்டாள்தனத்தை நொந்து கொண்ட அந்த அதிகாரி திரும்பத் தயாரான போது ஓரிடத்தில் சிவப்பு செங்கல்கள் கொண்ட நிலப்பரப்பு தொலைவில் தெரிந்தது. அவருக்குள் ஒரு நம்பிக்கைக் கீற்று தோன்றியது. அந்த இடத்தை நோக்கி விரைந்தார். அது ஒரு கைவிடப்பட்ட குவாரி. அங்கே சென்று ஆராய்ந்த போது ஒரு பழைய ரெயில்வே டிராக்கைக் காண முடிந்தது. அந்த டிராக்கும் புல்களால் மூடப்பட்டிருந்தது. அந்த குவாரியின் உச்சியில் சென்று பார்த்த போது சுமார் எழுபதடிக்குக் கீழே ஒரு பெரிய நீர்நிலை இருந்ததைப் பார்க்க முடிந்தது. அந்த நீர் நிலை முழுவதும் சகதியும், புற்களும் மண்டியிருந்தன.

அந்தப் பகுதி ஹைவே 45க்கு அருகே இருந்தது. அங்கிருந்து 2.1 மைல் தூரத்தில் அந்த உச்சி இருந்ததைக் கணக்கிட்ட அந்த அதிகாரிக்கு எல்லாம் அந்தப் பெண்மணி சொல்வதற்கு ஒத்து வருவது போலத் தோன்றியது. உடனே கடற்படையினரின் உதவியை நாடி அவர் அந்த நீர்நிலையில் ஏதாவது டிரக் விழுந்திருக்கிறதா என்று பார்க்கச் சொல்ல கடற்படையினர் வந்து தேட டிரக்குடன் அந்தக் காணாமல் போன நபரின் உடலை 25 அடி ஆழத்திலிருந்து மீட்க முடிந்தது.

உள்ளூர் மக்களும், போலீஸ் அதிகாரிகளும் ஆச்சரியப்பட்டனர். ஆனால் பின்பு இந்நிகழ்ச்சியை ஆராய வந்த ஒரு பல்கலைக் கழகப் பேராசிரியர் இது ஒன்றும் பிரமாதமான விஷயம் அல்ல என்றார். அந்தப் பகுதியே பல குவாரிகள் நிறைந்தது என்பதால் அந்த நபர் அதில் ஏதாவது ஒன்றில் இருந்து கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று யூகிப்பது சிரமமல்ல என்றும் சிவப்பு செங்கல்கள், பழைய ரயில்வே டிராக் போன்றவை குருட்டாம் போக்கில் சொல்லப்பட்டு உண்மையாகிப் போன ஹேஷ்யங்கள் என்றும் கருத்து தெரிவித்தார்.

ஆனாலும் இது போன்ற சிரமமில்லாத யூகங்களை வைத்து போலீசாரால் 16 மாதங்கள் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதும் அந்தப் பெண்மணியின் துப்புகள் இல்லை என்றால் அந்த நீர் நிலையை எப்போதாவது தூர் வாரும் வரை அந்த நபரின் உடல் கிடைத்திருக்காது என்பதும் உண்மையல்லவா என்று கேட்டதற்கு இந்தக் கேஸில் அது உண்மை என்று முன்பு தேடிய உயர் போலீஸ் அதிகாரிகளும், தீயணைப்புப் படை அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர்.

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-2

"அறிவியலில் எல்லா வினாக்களுக்கும் விடையில்லை" என்றார் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். முன்பு குறிப்பிட்ட டெல்·பை ஆரக்கிள், ·ப்ளோரிடாவின் குறி சொல்லும் பெண்மணி ஆகியோர் எப்படி தாங்கள் நேரில் கண்டிராத அந்த நிகழ்ச்சிகளை சொன்னார்கள் என்பதை நம்மால் அறிவியல் ரீதியாகப் புரிந்து கொள்ளுதல் சாத்தியமில்லை.


ஆனால் எல்லா நாட்டுப் புராணங்களிலும், மதநூல்களிலும் இது போன்ற அற்புதச் செயல்கள் ஏராளம் உள்ளன. இதற்கும் ஒருபடி மேலாக எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அசரீரியோ, தேவதூதர்களோ சொல்லும் நிகழ்வுகள் எல்லா மதநூல்களிலும் உள்ளன. "தேவகியின் எட்டாவது மகனாக கிருஷ்ணன் ஜனிப்பான். அவன் உன்னைக் கொல்வான்" என்று கம்சனுக்கு அசரீரி சொன்ன கதையை நாம் அறிவோம். கம்சன் அதைத் தடுக்க எல்லா வழிகளைப் பிரயோகித்தும் நடப்பதை மாற்ற முடியவில்லை. இயேசு கிறிஸ்துவும், முகமது நபியும் பிறப்பதும் முன்பே அறிவிக்கப்பட்டு விட்டதாக அந்த மதநூல்கள் சொல்கின்றன.

இதெல்லாம் நிஜம் தான் என்று நம்ப முடியாத பகுத்தறிவு வாதிகள், இது மதவாதிகளின் கட்டுக் கதை என்று சொல்லலாம். மற்றவர்கள் இதெல்லாம் தெய்வ சக்தி அல்லது தெய்வாம்சம் பொருந்தியவர்களுக்கு மட்டுமே இருக்கக்கூடிய சிறப்பு சக்தி என்று நினைக்கலாம். ஆனால் பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் சாதாரண மனிதர்கள் சிலருக்கும் அப்படிப்பட்ட அற்புத சக்திகள் கிடைத்த போது, அது பகுத்தறிவுக்கோ, மற்ற அறிவுக்கோ எட்டாத விஷயமாக அனைவரையும் குழப்பியது.

1967 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி சிகாகோ ரேடியோவில் ஒரு பேட்டியில் ஜோசப் டிலூயிஸ் என்ற 'கிரிஸ்டல் பந்து ஞானி' அந்த வருட இறுதிக்குள் ஒரு பெரிய பாலம் இடிந்து விழும் என்றார். மூன்று வாரம் கழித்து 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓஹையோ நதியின் குறுக்கே இருந்த "வெள்ளிப்பாலம்" இடிந்து விழுந்து பலர் இறந்தனர்.

1968, ஜனவரி எட்டாம் தேதி நாட்டில் பெரிய கலவரம் வரும் என்றார். 1968, ஏப்ரல் ஏழாம் தேதி சிகாகோவில் பெரிய கலவரம் வந்து ஐயாயிரம் மத்திய அரசுப்படையினர் வந்து அடக்க வேண்டியதாயிற்று.

1969, ஜனவரி 16 ஆம் தேதி சிகாகோ நகரின் ஓட்டலின் ஒரு பாரில் நுழைந்து அங்குள்ள சர்வரிடம் சிகாகோவின் தெற்குப்பகுதியில் இரு ரயில்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட விபத்தைப் பற்றி அன்றைய தினப் பத்திரிக்கையில் என்ன போட்டிருக்கிறார்கள் என்று கேட்க அங்குள்ளவர்கள் திகைத்துப் போனார்கள். முன்பே அவர் இது போன்ற விஷயங்களில் பிரபலமானபடியால் அன்றைய பத்திரிக்கைகளில் ஒன்றும் வராவிட்டாலும் ரேடியோவிலாவது ஏதாவது செய்தி வருகிறதா என்று ரேடியோவைப் போட்டார்கள். அப்போது இரவு மணி 11. ஆனால் ரேடியோவில் விபத்தைப் பற்றி எந்த செய்தியும் இல்லை. அது வரை நடக்கவில்லை என்பதை அறிந்த டிலூயிஸ் உறுதியாகச் சொன்னார். "இந்தப் பகுதியில் கடந்த 25 வருடங்களில் இது போன்ற பெரிய விபத்து நடந்திருக்காது. அப்படிப்பட்ட விபத்து நடக்கும்."

இரண்டு மணி நேரம் கழித்து சிகாகோவிற்குத் தெற்கே இல்லினாய்ஸ், சென்ட்ரல் ரயில்கள் பனிமூட்டத்தின் காரணமாக மோதிக் கொண்டன. 47 பேருக்குப் பலத்த காயம். மூன்று பேர் இறந்தனர். அவர் கூறியது போல அதுவே அந்தக் காலக்கட்டத்தில் அந்தப் பகுதியில் மிகப்பெரிய விபத்து.

1969, மே 21ல் டிலூயிஸ் "இண்டியானாபோலிஸ் அருகே ஒரு விமானம் விபத்துக்குள்ளாகும். அதில் 79 பேர் மரணமடைவார்கள். ஏதாவது ஒரு வகையில் 330 என்ற எண் அதில் சம்பந்தப்படும்" என்றார். 1969, செப்டம்பர் 9 ஆம் தேதி அலிகனி ஏர்லைன்ஸ் விமானம் ஒரு தனியார் விமானத்துடன் மோதி 79 பயணிகள் இறந்தனர். விபத்து நேர்ந்த நேரம் மதியம் 3.30.

1968 டிசம்பர் 15 ஆம் தேதி டிலூயிஸ் "கென்னடி குடும்பத்திற்கு தண்ணீர் மூலம் ஒரு கண்டம் இருக்கிறது. ஒரு பெண் நீரில் மூழ்கியதைப் பார்த்தேன்" என்றார். 1969, ஜூலை 18 ஆம் தேதி மேரிஜோ என்னும் பெண் எட்வர்டு கென்னடியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய சம்பவம் எட்வர்டு கென்னடியின் அரசியல் வாழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.

பொதுவாகவோ, எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக் கொள்ளும்படியாகவோ சிலர் எதை எதையோ சொல்வதுண்டு. அப்படிச் சொல்வதில் ஏதாவது ஒன்று பலித்து விட்டால் அதை விளம்பரப்படுத்தி நல்வாக்கு சித்தர் என்றோ முக்காலமும் உணர்ந்த மகான் என்றோ பெயர் வைத்துக் கொள்வதுண்டு. உதாரணத்திற்கு "அடுத்த ஆண்டு ஒரு பெரும் ரயில் விபத்து நடக்கும். நாட்டில் எங்காவது குண்டு வெடிக்கும். புதியதாக ஒரு நோய் வந்து மனிதர்களைத் தாக்கும்" என்று நான் சொன்னால் மூன்றில் இரண்டு கண்டிப்பாகப் பலிக்க சாத்தியமுண்டு. உடனே நான் விகடனில் அன்றே இந்த தேதியில் இப்படிச் சொன்னேன் என்று சொல்லிக் கொள்ளலாம். இப்படி இப்போதெல்லாம் நிறைய நடக்கிறது. ஆனால் டிலூயிஸ் அப்படி பொத்தாம் பொதுவாக எதையும் சொல்லவில்லை. அவர் சொன்னது எல்லாமே அப்படி சொல்ல முடிந்த விஷயங்கள் அல்ல.

இப்படி நடப்பதை முன் கூட்டியே சொல்லி திகைப்பில் ஆழ்த்திய டிலூயிஸ் ஒரு சாதாரண முடிதிருத்தக் கலைஞர். பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டவர். பின்னர் கடற்படையில் சேர்ந்தார். பணியிலிருந்து விலகுவதற்கு முன்பு ஒரு முறை தான் வேலைக்கு செல்லும் கிடங்கில் ஏதோ ஒரு பெரிய விபத்து ஏற்படுவதாக அவர் உள்ளுணர்வு சொல்ல அவர் அன்று வேலைக்குப் போகாமல் இருந்து விட, உண்மையாகவே அங்கு ஒரு பெரும் விபத்து அன்று நிகழ்ந்தது. அன்று வேலைக்குப் போகாததால் அவர் உயிர் தப்பித்தார். பிறகு இவர் கிரிஸ்டல் பந்தைப் பார்த்து எதிர்காலக் கணிப்புகளைச் சொல்ல ஆரம்பித்தார். அந்த ஆரம்ப உள்ளுணர்வின் பின் இவருடைய எல்லா முன்கூட்டிய கணிப்புகளைக் கவனித்தீர்களானால் ஒரு உண்மை புரியும். எல்லாமே விபத்துக்கள் பற்றியதாகத் தான் இருந்தன.

ஜோசப் டிலூயிஸிற்கு இப்படி விபத்துகளை அறியும் சக்தி கிடைத்ததென்றால் சில மனிதர்களுக்கு திடீரென்று வேறு மாதிரியான அபூர்வ சக்திகள் கிடைத்த நிகழ்ச்சிகளும் ஆதாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

Sunday, October 4, 2009

ஆன்மீக சிந்தனைகள்...

* வாழ்க்கையின் சிரமம் மிகுந்த நேரங்களையும், நோய்களையும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். கோடை வெம்மையின் கடுமை வந்தால் பின்னாலேயே மழையின் குளுமையும் வரக் காத்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

* வாழ்க்கையில் வேதனைகளை தாங்கிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உள்ளத்தில் வேதனைகளை சுமந்து கொண்டு திரிவது மிகவும் சிரமமானது. நம்முடைய உடல் உள்ளப்படைப்புக்கள் ஆண்டவனால் நிறைய தாங்கும் தி பெற்றவை என்பதை நாம் சிறிதும் உணர மறுக்கிறோம்.

* வாழ்க்கையை ரொம்பத் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் மனிதர்களை விட்டு விலகி நில்லுங்கள். உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் நெருக்குவதாக நினைக்காதீர்கள். எல்லாவற்றையும் எளிமையுடன் லேசாக ஏற்கத் தயாராகுங்கள்.

* சோதனைகளை எல்லாம் ஆண்டவன் நம்முடன் விளையாடும் விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். வாடி வதங்கிய முகத்துடன் இருக்காதீர்கள். சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். வெற்றி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி மலர்வதற்கு இதுதான் வழி.

* சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உள்ளத்தில் இருக்கும் வேதனையையும், வீணான பயத்தையும் தூக்கி எறியுங்கள். வெற்றியும், மகிழ்ச்சியும், மனப்பக்குவமும் கிடைக்க இதுவே சிறந்த வழி.

-ஸ்ரீஅன்னை