Saturday, December 31, 2011

பேஸ்புக்கின் Chat messanger மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு...

சமூக தளங்களில் முதல் இடத்தில் இருப்பது பேஸ்புக் இணையதளம். உலகம் முழுவதும் 800 மில்லியன் வாசகர்களை கொண்ட மிகப்பெரிய சமூக இணையதளம்.
இந்த தளத்தில் பல்வேறு வசதிகள் உள்ளது. இப்பொழுது இந்த நிறுவனம் புதிய Chat messanger இலவச மென்பொருள் ஒன்றை வெளிட்டுள்ளது.

Chat messanger மென்பொருள் மூலம் பேஸ்புக் தளத்திற்கு செல்லாமலே கணணியில் இருந்தே வாசகர்களிடம் அரட்டை அடிக்கலாம், உங்கள் நண்பர்கள் புதிதாக பகிர்ந்த பதிவுகளை காணலாம் மற்றும் உடனுக்குடன் notifications காணலாம்.

இந்த மென்பொருளை விண்டோஸ் 7 கணணிகளில் மட்டுமே நிறுவ முடியும். இதற்க்கு முன்னர் மூன்றாம் தர மென்பொருளே chat செய்ய இருந்தது. இப்பொழுது பேஸ்புக் நிறுவனமே இந்த மென்பொருளை வெளியிட்டது.

இதற்கு முதலில் இந்த https://www.facebook.com/help/?faq=140228902751098#What-is-Messenger-for-Windows?- லிங்கில் கிளிக் செய்து பேஸ்புக் தளத்திற்கு சென்று அங்கு உள்ள one-time setup என்ற லிங்கை கிளிக் செய்து மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

மென்பொருள் தரவிறக்கம் ஆகி முடிந்ததும் உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள். நிறுவியவுடன் அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

அதில் Login என்ற பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்து பேஸ்புக் தளத்தில் நுழைந்து கொள்ளுங்கள். அடுத்து ஒரு விண்டோ வரும், அதில் Keep me Logged in என்ற பட்டனை அழுத்தவும்.

அவ்வளவு தான் உங்கள் நண்பர்களில் ஓன்லைனில் இருப்பவர்களை இந்த மென்பொருள் காட்டும். அதில் விருப்பமானவர்களுடன் அரட்டை அடித்து மகிழலாம் மற்றும் ஒரே விண்டோவில் பல பேருடன் அரட்டை அடிக்கும் வசதியும் இதில் உள்ளது.

Wednesday, December 28, 2011

விண்டோஸ் கணணிகளில் கடவுச்சொற்கள் கையாளப்படும் வழிமுறைகள்!!!

ஒவ்வொருவரும் தங்களது கணணி மற்றும் அதில் பதிந்துள்ள தகவல்களின் பாதுகாப்பிற்காக கடவுச்சொல்லை அமைத்திருப்பர்.
பெரும்பாலானவகள் இந்த கடவுச்சொல்லானது மிகவும் பாதுகாப்பானது, வலிமையனது எனவும் கணணிக்கு கடவுச்சொல்லை அமைத்துவிட்டால் யாராலும் அந்த கடவுச்சொல்லை மீறி கணணியை பயன்படுத்த இயலாது என எண்ணுகின்றனர்.

ஆனால் அது உண்மையில்லை. உங்கள் கணணியின் கடவுச்சொல்லை சில வழிகள் மூலமாக கைப்பற்ற இயலும்.

முதலில் கடவுச்சொற்கள் கணணியில் எவ்வாறு கையாளப்படுகின்றன என பார்க்கலாம். Security Accounts Manager(SAM) என்பது ஒரு Registry file ஆகும். இது கணணியில் "C:WINDOWSsystem32config" என்ற இடத்தில் சேமிக்கப்படும்.

இந்த File இல் தான் LM hash, NTLM hash போன்ற மறையாக்க முறைகளில் மாற்றம் செய்யப்பட்டு சேமிக்கப்படுகிறது.

இந்த SAM File இனை திறந்து படித்து விட்டால் கடவுச்சொல் தொடர்பான விடையங்களை அறிந்துவிடலாம். ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது SAM File இனை கொப்பி செய்யவோ திறக்கவோ விண்டோஸ் அனுமதிக்காது. இதை திறப்பதற்கு நாம் வேறு ஒரு இயங்குதளத்திலிருந்து கணணியை Boot செய்ய வேண்டும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் Live booting என்பது பயன்படுகிறது. Live booting என்றால் நாம் சில மென்பொருட்களை பென்ரைவ் இல் போர்டபிளாக பதிந்து பயன்படுத்துவது போல இயங்குதளத்தை பென்ரைவில் அல்லது சிடி இல் பதிந்து அதை கணணியில் பதியாமலே பயன்படுத்துவது ஆகும்.

இந்த வேலையை செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டது Ophcrack என்ற மென்பொருளாகும். இதை சிடியிலோ அல்லது பென்ரைவிலோ பதிந்து பயன்படுத்த முடியும். இந்த மென்பொருளை Ophcrack  இங்கு கிளிக் செய்து தரவிறக்கம் செய்யவும்.

1. இனி நீங்கள் தரவிறக்கம் செய்த ISO file இனை சிடி யில் பதியவும்.

2. கணணியை Restart செய்து விண்டோஸ் ஆரம்பிப்பதற்கு முன் F8 key இனை அழுத்தி Boot order இல் சிடியை தெரிவு செய்து என்டர் அழுத்தவும். (F8 அழுத்துவது சில கணணிகளுக்கு கீ மாறக்கூடும் கீ முடியாவிட்டால் BIOS மெனுவில் Boot order இல் 1st Boot Drove என்பதில் சிடி இனை தெரிவு செய்திடவும்.)

3. இனி மென்பொருள் இயங்க தொடங்கிவிடும், அடுத்து தோன்றுகிற செய்தியில் Ophcrack Graphic mode என்பதை தெரிவு செய்து என்டர் அழுத்தவும்.

4. சிறிது நேரத்தில்(2-3 நிமிடம்) உங்கள் கணணியின் கடவுச்சொல் காட்டப்படும்.

மென்பொருளின் Activation Keyகளை பெறுவதற்கு...

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும்பாலும் மென்பொருட்கள் பாவனை எங்கும் பரவி கிடக்கின்றது.
சட்டரீதியாக மென்பொருட்களை எவரும் பணம் கொடுத்து வாங்குவது கிடையாது, காரணம் இணையத்தில் பரவிகிடக்கின்ற திருட்டுகள்.

இலகுவாக எந்த மென்பொருளுக்கும் உரிய Activation Key இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்த செயற்பாடு சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளபடாதவை, இருந்தும் இதை தடுக்க எந்தவொரு வழியும் தற்சமயம் கிடையாது.

1. முதலாவதாக கூகுள் இணையதளத்திற்கு செல்லுங்கள் - Google.com

2. பின்னர் கூகுள் தேடலில் “94fbr” இடைவெளிவிட்டு மென்பொருள் பெயரை எழுதுங்கள். உதாரணமாக 94fbr MSoffice 2010.

3. அதன் பிறகு கூகுள் keygen’s உரிய பட்டியலை காட்டும்.

அதில் எது வேண்டுமோ தெரிவு செய்து உங்கள் மென்பொருளை ஆக்டிவ் பண்ணுவதற்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Sunday, October 16, 2011

கணவனுக்கு எழுத முடியாத கடிதம்...



இந்தக் கடிதத்தை நான் யாருக்காக எழுதுகிறேன். எனக்காகவா? இல்லை என் மனதில் உள்ளதை இந்தக் கடிதம் மூலம் உனக்கு தெரியப்படுத்தவா? இதனால் எனக்கு ஏதாவது தீர்வு கிடைக்கும் என்ற நப்பாசையா? இல்லை..எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை... என் மன உணர்வுகளை உன்னால் புரிந்து கொள்ள முடியாமல் போன மன அழுத்தத்திலிருந்து விடுபடவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

என் அம்மாவை கருவியாகக் கொண்டு இந்த உலகத்தில் எட்டிப் பார்த்த என்னை "அடடா! மூக்கும் முழியும் எப்படி இருக்கு பாரு? உன்னை எந்த மவராசன் வந்து கொத்திக்கொண்டு போகப்போறானோ?" என்று யாரோ சில பெண்கள் கேட்டு வைத்து எனக்கும், உனக்குமான (நிர்) பந்தத்தை அப்போதே ஏற்படுத்தி விட்டார்கள் என்று அம்மா சொன்னார். என்னைப் போல் நீ பிறந்த போதும், "நீ சிங்கக்குட்டிடா! எத்தனை பேரை ‘அடக்கி’, ‘ஆள’ப்பிறந்திருக்கிறாயோ?" என்று உனது ஆணாதிக்கத்தை எத்தனை பேர் தலை தூக்கி நிறுத்தி வைத்தார்களோ? தெரியவில்லை... ஆனால் நீ உன் கோபத்தை ‘அடக்கி’, ஒரு பெண்ணின் மனதை ‘ஆளப்’ பிறந்திருக்கிறாய் என்று யாராவது உனக்கு தெளிவாக சொல்லிக் கொடுத்திருக்கலாம்.

எத்தனையோ கனவுகளுடன் சுற்றித் திரிந்த என்னை, "அத்தனை கனவுகளையும் உன் கணவனின் காலடியில் போட்டுவிடு. அவன் தான் உன் கனவுகளுக்கு உரம் போடுபவன்" என்று என்னை உன் கையில் பிடித்துக் கொடுத்தார்களே... அவர்களுக்குத் தெரியுமா? நான் சுமக்கப்போவது உன் கனவுகளை மட்டும் தான் என்று.
பிறந்து வீட்டில் சொகுசாக வளர்ந்த என்னை, ‘நீதான் எனக்கு’ என்று முடிவான பிறகு அத்தனையும் கற்றுக்கொள்ள தயார்படுத்தினார்களே.. இல்லாவிட்டால் நான் நல்ல மருமகளாக இருக்க முடியாது என்று சொல்லி அனுப்பினார்களே... பிறந்த வீட்டுப்பிரிவையும், உன் அருகாமையில் கிடைக்கும் வெட்கத்தையும், புது வீட்டு சொந்தங்களை பற்றித் தெரியாத தயக்கத்தையும் சுமந்து கொண்டு வந்த எனக்கு, உன் வார்த்தை அன்பு, அம்பாக மாறி என் மனதை குத்திக்கிழிக்கப் போகிறது என்று அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

திருமணத்துக்கு முன்பு நீ பேசும்போதெல்லாம், "இந்த திருமணம் நின்று விட்டால் உன்னை எங்காவது கடத்திக்கொண்டு கூட போய்விடுவேன்.. நீ இல்லாத வாழ்க்கை எனக்கொரு வாழ்க்கையா?" என்று அன்பை பொழிந்தாயே... அப்போது என் முட்டாள் மனதுக்குத் தெரியவில்லை, திருமணமான ஒரே வாரத்தில் நீ உன் சுயரூபத்தை காட்டப்போகிறாய் என்று.

திருமணமானவுடன் மேலே படிக்கலாம் என்ற கனவுடன் இருந்த என்னை, "முதலில் புருஷனுக்கு தேவையானதை செய், அவனுக்கு எது பிடிக்கும், பிடிக்காது என்று தெரிந்து வைத்துக்கொள். அப்புறம் உன் சமத்து.. உன் அப்பாவை பணம் அனுப்ப சொல்லி மேலே படித்துக்கொள்" என்று மாமியாருக்கே உள்ள அக்கறையைக் காட்டிய போது அசந்துதான் போனேன். அதெப்படி இந்த எலும்பில்லாத நாக்குக்கு சக்கரையைத் தடவவும், விஷத்தைக் கக்கவும் முடிகிறது? ஆச்சரியம்தான்!

சமையல் வேலையை நான் தெரிந்து வைத்திருக்கிறேனா என்பதை, வந்த முதல் நாளே டெஸ்ட் செய்து பார்த்த போது பயந்து நடுங்கித்தான் போனேன், இன்னும் எதற்கெல்லாம் டெஸ்ட் வைப்பார்களோ என்று. ‘அப்பாடா! ஒரு வழியாக சமாளித்தோமே’ என்று நானாக ஆசுவாசப்படுத்திக் கொண்ட வேளையில், மாமியார் இன்னொரு மருமகளான உன் அண்ணியைப் பார்த்து, "நீ இப்படி சமைப்பாயா?" என்று கேட்டு வைத்து தொலைக்க, அவள் அதற்கு மேல் என்னுடன் ஒட்டாமல் என்னை விட்டு தள்ளியே இருந்துவிட்டாள். அதற்கும் மேல் அவளுக்கு என் மேல் என்ன வன்மமோ? புகுந்த வீட்டுக்குள் இப்படி ஒரு அரசியல் இருக்கும் என்பதை புதிதாக வந்த நான் எப்படி அறிவேன்?
இரண்டு மருமகள்கள் சேர்ந்தால் நம்மை ஆட்டிப்படைத்து விடுவார்கள் என்ற பயமோ என்னமோ, இருவரையும் ஆரம்பத்திலேயே பிரித்து வைக்கும் சூட்சுமம் உன் அம்மாவுக்குத் தெரிந்திருக்கிறது. உன் அண்ணியை என் கூடப்பிறந்த அக்காவைப் போல் நினைத்தேனே.. ஆனால் அவள், என் கணவனான உனக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் எனக்கும் கொடுக்க மறந்தாள்?
உறவுகளுக்குள்ளேயே கணவனையும், மனைவியையும் வேறு வேறு இடத்தில் வைக்க, புகுந்த வீட்டு உறவுகளால் மட்டும் தான் முடிகிறது. நானும் உனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை ஏன் உன் உறவினர்களுக்கு புரிய வைக்க நீ முயற்சிக்கவில்லை? அவர்கள் அடித்துக்கொண்டால் என்ன? நாம் தப்பித்தோமே என்ற எல்லா ஆண்களின் மனோபாவம் தான் உனக்கும். ‘ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்’ என்று சொல்வதைப் போல இரண்டு பெண்கள் அடித்துக் கொண்டால் ஆண்களுக்குத்தான் கொண்டாட்டம் என்பது ஏன் இந்தப் பெண்களுக்கு புரிவதில்லை? இப்படி புரியாமல் இருப்பதுதானே ஆண்களின் பலம்.
திருமணமான ஒரு வாரத்திலேயே சீர், செனத்திகளை வாங்குவதற்காக என் அப்பா, அம்மாவுடன் அடித்துக்கொட்டுகிற மழையில் ஒவ்வொரு கடையாக ஏறி, இறங்கினோமே.. அப்போது டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் எல்லாம் இந்த இந்த அளவுகளில் வேண்டும் என்று நீ என் காதில் கிசுகிசுத்துக்கொண்டு வந்த போதெல்லாம் அது விளையாட்டு என்றுதானே நினைத்தேன். சமையல் பாத்திரங்கள், டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், டிவிடி ப்ளேயர், கட்டில், பீரோ என்று அத்தனை பொருட்களும் அப்பா போட்டு வைத்திருந்த பட்ஜெட்டுக்குள் அடங்கிப்போனதில் உனக்கு என்ன வருத்தம் இருந்ததோ? அதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. கடைசியாக ஸ்பீக்க்கர் மட்டும் வாங்க முடியாமல் போனதால் உனக்கு என் வீட்டார் மேல் எந்தளவுக்கு கோபம் இருந்ததோ?

உன்னிடம் அன்பை மட்டுமே எதிர்பார்த்து வந்த எனக்கு, சீர் பொருட்களில் ஏதோ ஒன்று குறைந்ததை பெரிய கெளரவப் பிரச்சினையாக நீ ஆக்கிய போதும், அதையே திரும்ப திரும்ப சொல்லிக்காட்டிய போதும் அதிர்ச்சியில் உறைந்துதான் போனேன். கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. தொண்டையிலும் ஏதோ கசந்தது. முழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் என்னவோ? என் வாழ்க்கையை வியாபாரமாக்கிய அப்பா, அம்மாவின் மேல் கோபம் வந்தது.

அத்தனை கசப்புகளையும் மென்று முழுங்கிவிட்டு, வாழ்க்கை இப்படியும் இருக்கும் என்ற யதார்த்தை உணர்ந்து, ஆசையாக உன்னிடம் "என்னங்க..நான் ஒண்ணு கேட்கட்டுமா?" என்று ஆரம்பித்தால், "என்ன வேணும்னாலும் கேளு.. ஆனா நகை வேணும்னு மட்டும் கேட்டிராத.. அதுக்கெல்லாம் உங்க அப்பா இருக்காரு.. உங்க அப்பா அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாதும்மா" சட்டென்று முகத்திலடித்தாற்போல் பேசிய பேச்சுக்கள் ரொம்ப நேரம் காதை விட்டு நீங்க மறுத்தது. அப்போதும் அவன் அன்பாக இல்லாவிட்டால் என்ன? நான் அதைவிட அன்பை அள்ளித்தருவேன் என்று நானே எனக்கு செய்து கொண்ட சமாதானம் தான் இன்னும் என் வாழ்க்கையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறதோஸ
பாஷை தெரியாத ஊரில் புது மனைவியாக வந்த என்னை தனியாக வீட்டிலேயே விட்டுவிட்டு ஏற்கனவே நீ இருந்த உன் அண்ணன் வீடே கதி என்று போய்விட்டாய். நீ அங்குதான் இருக்கிறாய் என்பது கூட தெரியாமல் உனக்காக ஆசை ஆசையாக சமைப்பதும், உனக்காக நான் காத்துக்கொண்டே இருந்ததும், உனக்காகவே பூ வைத்து, பொட்டு வைத்து சே! வீட்டைச் சுற்றிப்பார்க்கும் போது வீடும் மட்டுமல்லஸஎன் மனதும் வெறுமையாக இருந்தது. எனக்குப் பிடிக்கவே பிடிக்காத தனிமை! உனக்கு அதுதான் சந்தோஷம் என்று தெரிந்திருந்தால் நானும் உன்னுடய சந்தோஷங்களில் ஒரு தோழியாக பங்கெடுத்திருப்பேன். ஆனால் அதற்கும் நீ இடம் கொடுக்காமல் போனது எப்படி? நாம் இருவர் மட்டுமே பேசிக்கொள்ளும் வார்த்தைகள் எல்லாம் உனக்கு அண்ணியாக வாய்த்தவளுக்கு எப்படி தெரிந்தது?
ஏன் இதையெல்லாம் போய் அடுத்தவரிடம் சொல்கிறீர்கள் என்று கேட்டால் "நீ இப்போது வந்தவள், அவர்கள் என் கூடவே இருப்பவர்கள்" என்று நீ சொன்னபோது, பழைய உறவுகளை மறக்காமல் இருக்கும் ஆணாக பெருமைப்படுவேனா இல்லை என் மனதைப் புரிந்துகொள்ளாத கணவன் என்று வருத்தப்படுவேனா... அண்ணியாக வாக்கப்பட்டவளோ, ஏதோ ஒரு நாள் என் முன்னால் அவளை மட்டம் தட்டிப் பேசிய மாமியாரை கேள்வி கேட்க தைரியமில்லாமல், என் மேல் கோபம்கொண்டு ஏன் தள்ளி வைத்தாள்? அதையும் நான் உனக்கு புரிய வைக்க முயற்சி செய்தால் அதைக் காதில் வாங்காத ஒரு அலட்சியம் எனக்கு கண்ணீராக முட்டிக்கொண்டு வந்ததை நீ அறிவாயா?
என்றோ வீசிய என் சிந்தனைகள், வார்த்தைகள் எல்லாம் இன்று இந்த தனிமையில் சுக்கு நூறாய் உடைந்து போனது யாருக்குத் தெரியப்போகிறது? தன் மனைவியின் கண்களில் காதலைத் தேடும் கணவன், அதே கண்களில் அவள் மனதையும் தேடாமல் இருப்பது எப்படி என்றுதான் எனக்கு இன்னும் விளங்கவில்லை.
திருமணமான பிறகும் குடியும், கும்மாளமுமாக பொழுதைக் கழிப்பதில் உனக்கு என்ன சந்தோஷமோ? உன்னை சுற்றியிருக்கும் சுவாரஸ்யங்களைத் தொலைத்து விட்டு எதில் தேடுகிறாய் உன் சந்தோஷத்தை? குடியும், புகையும் மட்டுமே வாழ்க்கையின் முதல் சந்தோஷம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் உன்னைப்பற்றி ஏன் உன் பெற்றோர்கள் முழுதாக அறியவில்லை? திருமணத்திற்குப் பிறகு மகன் செய்யும் சின்ன சின்னத் தவறுகளை பெற்றோர்கள் கண்டும், காணாமல் இருக்கிறார்களா அல்லது இருப்பது போல் நடிக்கிறார்களா? இன்னும் எனக்கு இந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லை.
உன் உடல்நிலையை மனதில் கொண்டு, உன் பெற்றோர் சொன்னாலாவது நீ திருந்தலாம் என்ற நம்பிக்கையில் அவர்களிடம் சொன்னால், அதற்கும் அவர்கள், "ஆண் பிள்ளை அப்படித்தான் இருப்பான். உனக்கு என் மகனை மயக்கத் தெரியவில்லை" என்று சம்மட்டியால் அடித்தது போல் சொன்னதில் நன்றாகவே அடையாளம் தெரிந்து கொண்டேன் சுயநலவாதிகளை.

சமயத்திற்கு தகுந்தாற்போல் பெண்களை சாடுவதில் இந்த சமூகத்திற்குத்தான் எத்தனை ஆசை! வேலைக்குப் போகும் பெண்ணா? "உனக்கு சம்பாதிக்கும் திமிர்" என்பதும், அதிகம் பேசினால் "வாயாடி", அமைதியாக இருந்தால் "ஊமைக்கொட்டான் மாதிரி இருந்துக்கிட்டு..." என்று பட்டம் கொடுப்பதும், கணவனை சொல்பேச்சுக் கேட்க வைத்தால், "மயக்கி விட்டாள்" என்று சொல்வதும், அதே கணவன் மனைவி சொல்வதை கேட்காமல் இருந்தால், "மயக்கத் தெரியவில்லை" என்பதும் அப்பப்பா! ஒரு பெண் படித்து பட்டம் பெறுகிறாளோ, இல்லையோ இந்த சமூகம் அவள் கேட்காமலேயே அத்தனை பட்டத்தையும் கொடுத்து விடுகிறது அதுவும் பெண்களாலேயே. வெளியுலகில் சாதிப்பதைத்தான் இத்தனை நாள் சாதனை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இல்லை.... குடும்ப உறவுகளுடன் போராடுவதும் பெண்களுக்கு மிகப்பெரிய சாதனைதான்.

திருமணத்திற்கு பிறகு வரும் ஒவ்வொரு பண்டிகையின்போதும் "உன் அப்பாவை ஒரு ஐயாயிரம் பணம் அனுப்பச்சொல்" என்று வாய் கூசாமல் உன் அம்மா கேட்டபோது, அவர்களுக்கு இல்லவே இல்லாத வெட்கத்தால் வெட்கித் தலைகுனிந்தேன். இதற்கு மேலும் நான் வாயைத் திறக்காமல் இருக்க வேண்டும் என்று எப்படி நீ எதிர்பார்த்தாய்? எந்த மருமகளும் இவர்களை எதிர்த்து பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டா வருகிறாள்? எவ்வளவு கொடுத்தாலும் தீரவே தீராத இந்த வரதட்சணை ஆசை எந்தப் பெண்ணுக்கும் அருவெறுப்பைத் தராதா?
எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மறுக்காத உன் கைகள் ஏன் என் பிறந்த வீட்டுக்கு செய்ய வேண்டுமென்றால் மட்டும் பின்வாங்குகிறது? உன் அப்பா, அம்மாவையும் மிஞ்சிய ஆண்பிள்ளையாக உன்னைப் பார்க்கும் போது எந்த பெண்தான் ஆவேசப்படாமல் இருப்பாள். இன்னும் எனக்குத் தேவையான விஷயங்களை என் அப்பாவிடம் உரிமையாக கேட்பதுபோல் உன்னிடம் கேட்க முடிவதில்லை. இந்த விரிசல் ஏன் என்பதை யோசிக்கக்கூட உனக்கு அவகாசம் இல்லை? நம்மைத் தொல்லைப்படுத்தாமல் இருக்கும்வரை நமக்கு லாபம் என்ற சுயநலமான மனம்.
குழந்தை பிறந்தால் பிரச்சினை தீர்ந்து விடும் என்ற நினைப்பில் உன் கருவை ஆசையாக நான் சுமந்தபோது எனக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சியான மாற்றத்தை உன்னால் மட்டும் ஏன் உணர முடியாமல் போனது? கருவை சுமந்த நேரத்தில் கூட ஆறுதலான ஒரு பேச்சோ, அரவணைப்போ இல்லாத ஜடமாய் எப்படி நீ மாறிப்போனாய்? குழந்தை பெற்றுத் திரும்பிய உடனேயே, என் அன்பை கொஞ்சம் கொஞ்சமாக உணர வைத்துக்கொண்டிருந்த தருணத்தில் உன் அஜாக்கிரதையால் வேலையை இழந்து வந்தாய். அப்போதும் உன் மேல் முன்னைவிட அன்பாகத்தானே இருந்தேன்...
பிள்ளை வந்த நேரம் அப்பன் வேலை போச்சு என்று உன் வீட்டார் என் மனதைக் காயப்படுத்திய போதும் உனக்கு ஆதரவாக இருந்த அந்த தருணத்தை உன்னால் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா? உன் கல் நெஞ்சைக் கரைக்கும் கருவியாகவே மாறிப்போன நம் குழந்தையுடன் வேலையில்லாத உன்னையும் சேர்த்து தேற்றினேனே..அதில் உனக்கு தெரியவில்லையா என்னுடைய எதிர்பார்ப்பில்லாத அன்பு.
பிரச்சினை கொடுத்த இந்த இடத்தில் நாம் இருக்க வேண்டாம் என்று வேலையுடன் வேறு இடத்தில் வந்தவுடனாவது நீ மாறிவிடுவாய் என்று நினைத்தேனேஸஎதிலும் ஆர்வம் இல்லாமல் இருக்கும் உனக்கு தண்ணியடிப்பதிலும், தம்மடிப்பதிலும் மட்டும் எப்படி ஒரு ஆர்வத்தைக் கொண்டுவர முடிந்தது? வாழ்க்கையே அதைச் சுற்றித்தான் இருக்கிறது என்று நீயாக எழுப்பியிருக்கும் கோட்டையை உடைக்க முடியாமல், அதிலேயே மாட்டிக்கொண்ட என் வாழ்க்கையைப் பற்றி யோசித்துப் பார்த்தாயா?
உன்னைத் திருத்த நான் எடுத்த முயற்சிகளை எல்லாம் தோற்கடிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அதிலிருந்து தப்பிக்கவும் நீயாகவே ஒரு வழியைத் தேடிக்கண்டுபிடித்தாயேஸ.கையில் கைக்குழந்தையுடன் பின்னிரவு வரை வீட்டில் தனியாக அழுது கொண்டிருந்ததை பொறுக்காத என் அப்பா, "உங்கள் மகனிடம் எடுத்து சொல்லுங்கள்" என்று வேதனையுடன் சொன்னதை நீயும், உன் பெற்றோர்களும் இவர்கள் யார் நம்மை கேள்வி கேட்க என்ற ஈகோவுடன் என்னை வார்த்தைகளால் குத்திக் கிழித்தபோது இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று தான் நினைத்தேன்.
உன் தவறுகளிலிருந்து நீ தப்பித்துக் கொள்வதற்காகவும், உன்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்ற ஆணாதிக்கத்தாலும், "உங்களைப் பற்றி தவறாக பேசுகிறாள். அதனால் தான் நான் இப்படி லேட்டாக வருகிறேன்" என்று உன் பெற்றோர்களிடம் என்னைப் பற்றி தவறாகக் கூறி என் தலையில் பெரிய குண்டைத் தூக்கிப் போட்டாயே.... இந்த சாதுர்யம் யாருக்கு வரும்? இதற்கு மேலும் உன்னைத் திருத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வருமா? தப்பித்துக்கொள்ள இப்படி ஒரு வழி இருக்கும் என்று ஏன் என் முட்டாள் மனதுக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும்போதும் தொல்லையாக நினைத்து பிறந்த வீட்டிலேயே விட்டுவிட்டு வருவதும், அதிலிருந்து மீண்டு நானாகவே வெளியில் வருவதும் யாருக்காக என்று பல நேரம் புரியாமல் குழம்பித் தவிக்கிறேன்.
என் வாழ்க்கை எதை நோக்கிப் பயணிக்கிறது என்று நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு பைத்தியக்கார ஆஸ்பத்திரியே நினைவுக்கு வருகிறது. அந்த நினைப்பில் குழந்தை முகம் தெரியும்போது நானாகவே விழித்துக் கொள்கிறேன். அவள் முகத்தில் இருக்கும் மழலைச் சிரிப்பை கவனிக்கும்போது வாழ்க்கையை கொஞ்சம் பிடித்துக்கொள்கிறேன்.
டி.வி.யில் வரும் பெண்கள், வீதியில் வரும் பெண்கள் அனைவரையும் பாகுபாடில்லாமல் அலட்சியப் பார்வை வீசும் உனக்கு என் வீட்டுப்பிரச்சினையை எள்ளி நகையாடவும், அந்தப் பிரச்சினையில் குளிர்காய்வதற்கும் சொல்லியா தர வேண்டும்? பெரியவர்களின் குழப்பங்களுக்கெல்லாம் பலிகடா ஆக்கப்படுவது வீட்டிற்கு வரும் மருமகள் தானா? இன்னும் எத்தனை வருடங்கள் இப்படியே ஓடும் என்று நினைக்கும் போது மன அழுத்தம் அதிகமாகிறது. இந்தப் பெண்களுக்குத்தான் இன்னும் எத்தனை எத்தனைப் பிரச்சினைகள்?

வீட்டிற்குள் என்னை மட்டம் தட்டிக் கொண்டே இருப்பதும், வெளியில் கொஞ்சம் பெருமையாக பேசுவதும் என்ற உன் இரண்டுபட்ட மனநிலை என்னைப் பல நேரம் ஆச்சரியப்பட வைக்கிறது. காலையில் இருந்து இரவு வரை எதற்காகவாவது கத்திக் கொண்டே இருப்பதும், இரவானால் இரண்டு அன்பான வார்த்தைகளை உதிப்பதும் ஏன் எனக்கு இத்தனை நாள் உறைக்கவில்லை? என் பிறந்த வீட்டுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் ஆறுதல் சொல்வது போல் அதை மேலும் கிளறி விடுவது என்ன ஒரு தந்திரம்? அதிலும் நிறைய குளிர்காய்ந்து விட்டு ஒன்றும் தெரியாத குழந்தை இமேஜை கொண்டு வந்துவிடுகிறாயே.. அந்த சைக்கோத்தனம் என்னைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்?

எனக்கு வரதட்சணையாகத் தந்த நகைகளை என் வீட்டு விசேஷங்களுக்கு கூட போடவிடாமல் வம்பிழுத்த போது, என் பெற்றோர்கள் உன் அப்பா, அம்மாவிடம் சண்டை போட்டு அத்தனையும் பிடுங்கிக்கொண்டு வந்தார்கள். இந்தப் பெரியவர்களின் பிரச்சினையில் நீ ஏன் என்னை மட்டும் இன்னும் காயப்படுத்திக் கொண்டேயிருக்கிறாய்? நான் உன்னிடம் எதிர்பார்த்தது அன்பை மட்டும் தான், ஆனால் அந்த அன்பையும் பெறுவதற்கு, அத்தனை இடிகளை வாங்கியும், இன்னும் உன்னிடமிருந்து முழுதாக கிடைக்காமல் தவிக்கிறேனே... அத்தனையும் பொறுத்துக் கொண்டாலும் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் கூட உன் அன்பைக் காட்டத் தெரியாமல் இருப்பது எனக்கு ஆத்திரத்தைக் கொடுக்கிறது. அந்தக் கோபத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் என் உடல் பலத்தையும் இழக்கிறேன்.

நீ உன் பிறந்த வீட்டுக்குப் போ என்று விளையாட்டாக சொன்னாலும் மனம் பதைபதைக்கிறது. பிரச்சினையால் என்னையே தாங்கிக் கொண்டே இருப்பதால் என் கூடப் பிறந்தவர்களுக்கும் பெற்றோர்கள் மீது கோபம். திருமணத்திற்கு முன்னால் பிறந்த வீடாவது இருந்தது. ஆனால் புகுந்த வீடு கைவிட்டால் பிறந்த வீடும் நிரந்தரமில்லை. இது பெண்களுக்கே விதிக்கப்பட்ட சாபக்கேடோ!

எனக்கு பொறாமை வரவேண்டும் என்பதற்காக நீ காட்டும் சீண்டல்களால் எனக்கு பயமில்லை. உன் மனதையும் அப்படி ஒருத்தி கரைத்து விட்டால் அதைவிட சந்தோஷம் எனக்கு வேறெதுவுமில்லை. அப்படியாவது ஒரு பெண்ணின் மனதை நீ அறிந்து வந்தால் சரிதான்!
உனக்குத் தெரியுமா? உன்னை என் கணவனாக பார்க்காமல் என்னைப்போல் நீயும் ஒரு உயிர் என்று நினைப்பதால்தான் இன்னும் உனக்கு சேவை செய்யமுடிகிறது. உன்னைப் பெற்றவர்களை மாமனார், மாமியார் என்று நினைக்காமல் வயதான அப்பா, அம்மா என்று நினைப்பதால் தான் உறவுகளைத் தாண்டிய மனிதாபிமானத்துடன் அவர்களை தாங்கிக்கொள்ள முடிகிறது. இதையெல்லாம் என்று நீ உணரப்போகிறாயோ?
உன் வாழ்க்கையில் பிடிப்பு வர ஒரு வேலையைத் தேடிக்கொள் என்று அனைவரும் சொல்லும்போது, "எதை வேண்டுமானாலும் செய்" என்று அப்போதைய நல்லபிள்ளையாக சொல்லிவிட்டு, அதற்கு மேல் எதையும் யோசிக்க விடாமல் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை விஷயங்களையும் விஷ ஊசி போல் ஏற்றிவிடுவது எனக்கு இப்போது புரியாமல் இல்லை. உன்னை விட்டு மொத்தமாக வெளியில் வந்தால் தான் எனக்கான பிடிப்பை நான் தேடிக்கொள்ள முடியும் என்பதை நான் எப்படி மற்றவர்களுக்கு சொல்வேன்? இன்னும் நான் வேலைக்குப் போனால் உன் ஈகோவால் இன்னும் என்னென்ன பிரச்சினைகளை எனக்குள் திணிப்பாய் என்று நினைக்கும்போது இந்த நிம்மதியே போதும் என்று என் மனம் ஆறுதல் அடைகிறது.

நான் இல்லாத வாழ்க்கையிலும் உன்னை சீண்ட யாருமிருக்க மாட்டார்கள் என்று நினைக்கும் போது திரும்பவும் உன்னையே நினைத்துக் கவலைப்படுகிறேன். "என்னையே எனக்குப் பிடிக்கவில்லை" என்று சிகரெட்டை ஊதித்தள்ளும் போது உன்னைப் பார்த்து பரிதாபப்படுகிறேன். ஆனால் அதை நான் எப்போது சொன்னேன் என்பது போல உன் ஈகோவால் என்னைத் தட்டிக்கழிக்கும்போது சே! என்ன மனிதன் இவன்? என்று எரிச்சலடைகிறேன்.

நான் உனக்கு அன்பான மனைவிதான்
உன் சுதந்திரத்தில் நான் தலையிடாமல் இருக்கும் வரை;
நான் உனக்கு அன்பான மனைவிதான்
உனக்கு மட்டுமே நான் வேலைக்காரியாக இருக்கும் வரை;
நான் உனக்கு அன்பான மனைவிதான்
உன் குடும்ப பிரச்சினைகளை தாங்கும் வரை
நான் உனக்கு அன்பான மனைவிதான்
நம் குழந்தையை நானே வளர்க்கும் வரை
நான் உனக்கு அன்பான மனைவிதான்
என் விருப்பங்களை உன் மேல் திணிக்காத வரை
நான் உனக்கு அன்பான மனைவிதான்
உனக்காகவே வாழும் வரை!
மேலே படிக்கப்போகிறேன்.. வாழ்க்கையை ரசித்து வாழப்போகிறேன்.. என்ற கனவுகளுடன் வந்த நான் எனக்கான வாழ்க்கையை சரி செய்துகொள்ளவே நேரத்தை வீணடித்திருக்கிறேன். அடுத்த குழந்தையும் சீக்கிரம் பெற்றுக்கொள்ளுங்கள் என்று யாராவது சொல்லும்போதெல்லாம் வெறும் குழந்தையை சுமக்கும் பொருளாக மட்டுமே நான் இருப்பது அருவெறுப்பைத் தருகிறது. இந்த நிலையில் இன்னும் எத்தனைப் பெண்கள் இருக்கிறார்களோ?
இந்த வாழ்க்கை எதற்கு உபயோகப்பட்டதோ இல்லையோ பலவித குணங்களுடன் உள்ள மனிதர்களைப் படிக்கவும், அதுவே என் எழுத்துக்களாக உருமாறவும் உதவியிருக்கிறது. ஓடும் வரை ஓடட்டும் இந்த வாழ்க்கை.. மனதில் உள்ள போராட்டத்தை குழந்தையின் எதிர்காலத்தில் என் அழுகையை அடக்கிக்கொள்கிறேன். அவளின் வளர்ச்சியில் என் சந்தோஷத்தை தேடிக்கொண்டே இருக்கிறேன்.
இப்படிக்கு
பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

Monday, August 1, 2011

வீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் அனுப்புவதற்கு...

வீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் சில நிமிடங்களில் எந்த மென்பொருள் உதவியும் இல்லாமல் இணைய உலாவி வழியாகவே இலவசமாக அனுப்பலாம்.
சில நேரங்களில் நாம் என்ன தான் மின்னஞ்சல் மூலம் ஒரு செய்தியை புரிய வைப்பதற்கும் ஒரே ஒரு முறை நேரில் சந்தித்து புரிய வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

அந்த வகையில் இன்று நாம் சொல்ல வேண்டிய செய்தியை வெப் கமெரா மூலம் பேசி வீடியோ மின்னஞ்சலாக உடனடியாக அனுப்பலாம்.

இத்தளத்திற்கு சென்று Record என்று இருக்கும் பச்சை கலர் பொத்தானை சொடுக்கி நம் வெப் கமெரா மூலம் சொல்ல வேண்டிய செய்திகளை கூறலாம். Record என்ற பொத்தானை சொடுக்கியவுடன் பேசி முடித்ததும் Stop என்ற பொத்தானை சொடுக்கி உரையை நிறைவு செய்யலாம்.

அடுத்து Play என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி நாம் என்ன பேசினோம் என்பதை பார்த்து எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் Send Video email என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் நம் மின்னஞ்சல் முகவரி, பெயர், வாழ்த்து செய்தி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் Additional text என்பதில் தட்டச்சு செய்து Send mail என்பதை சொடுக்கி அனுப்பலாம்.

அதில் Notify me when this message read என்ற செக்பொக்ஸ் தேர்வு செய்திருந்தால் அவர்கள் உங்கள் வாழ்த்துச்செய்தியை படித்ததும் உங்களுக்கு அதை தெரியப்படுத்துவதற்காக ஒரு மின்னஞ்சல் வரும்.

பெரிய அளவிலான கோப்புகளை இணையம் வழியாக அனுப்புவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் பெருமளவு மிச்சமாகும். வாழ்த்துச்செய்தியை கூட இனி வீடியோ மின்னஞ்சலாக அனுப்பலாம்.

இணையதள முகவரி.

Monday, July 25, 2011

வீடியோக்களை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் மாற்றுவதற்கு...

நம் வீடியோவை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் காட்ட ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது.
வீடியோ எடிட்டிங் செய்ய பல மென்பொருட்கள் வந்தாலும் சில மென்பொருட்கள் நம்மை அறியாமலே அந்த மென்பொருள் பக்கம் நம் கவனத்தை ஈர்த்து சென்று விடும். அந்த வகையில் இந்த வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருள் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல அள்ளி கொடுக்கும் சேவையிலும் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

இத்தளத்திற்கு சென்று Download now என்ற பொத்தானை சொடுக்கி இந்த வீடியோ எடிட்டிங் மென்பொருளை இலவசமாக தரவிறக்கலாம். இலவசமாக வீடியோ எடிட்டிங் சேவை கொடுக்கும் மென்பொருளைக் காட்டிலும் பத்துமடங்கு சேவையை நாம் இந்த மென்பொருள் மூலம் பெறமுடியும்.

இந்த மென்பொருள் ஓபன் சோர்ஸ் தான் தங்கள் தேவைக்கு தகுந்தபடியும் மாற்றியமைக்கலாம். ஹாலிவுட் தரத்திற்கு இணையான மென்பொருளை வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு நமக்கு தேவை இருக்காது என்றாலும் சில நேரங்களில் ஹாலிவுட் காட்சிகளில் வருவதுபோல் நம் வீடியோவை எடிட் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் தான்.

பலவிதமான நுணுக்கமான சேவைகள் பயன்படுத்துவதற்கு எளிமையாகவே இருக்கின்றது. ஒருமுறை நாம் பயன்படுத்திவிட்டால் அது கொடுக்கும் சேவையால் மேலும் நம்மை ஈர்க்கிறது.

வீடியோ எடிட்டிங் செய்ய தெரியாது என்று சொல்லும் நண்பர்களுக்குக் கூட எப்படி வீடியோ எடிட் செய்யலாம் என்று அழகாக சொல்லியும் கொடுக்கிறது.

Download Here

Sunday, July 17, 2011

Nithyananda - Ranjitha - Latest News


nithiyanandhadance1607-02 by tamil2011

Saturday, July 16, 2011

வீடியோக்களை MP3 மற்றும் MP4 போர்மட்டுகளில் பதிவிறக்கம் செய்வதற்கு...

வீடியோக்களை தரவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் நாம் அனைவரும் நாடிச்செல்வது யூடியூப் தளம் ஆகும்.
ஆனால் இந்த தளத்தில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய எதாவது ஒரு மூன்றாம் தர மென்பொருளையோ அல்லது நீட்சிகளின் உதவியை நாடிச்செல்ல வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் சாதாரணமாக ஓன்லைனில் இருந்து நேரடியாகவே வீடியோவினை பதிவிறக்கம் செய்ய முடியும்.

இதற்கு Clip.Dj என்னும் தளம் உதவி செய்கிறது. இந்த தளத்தில் எந்தவித மூன்றாம்தர மென்பொருளின் உதவியும் இல்லாமல் நேரடியாகவே வீடியோவினை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

பின் சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று குறிப்பிட்ட வீடியோவிற்கான குறிச்சொல்லை இட்டு தேடவும். பின் விருப்பமான வீடியோவை பதிவிறக்கம் செய்ய Download என்னும் பொத்தானை அழுத்தவும். இந்த வீடியோக்களை MP3 மற்றும் MP4 போர்மட்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

ஓன்லைனில் இருந்த படியே பாடலை MP3யாகவும், MP4கவும் கேட்க முடியும். மேலும் பதிவிறக்கிய வரிசைப்பட்டியலை நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்துக் கொள்ளவும் முடியும்.

இணையதள முகவரி

ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு...

எல்லாவற்றிற்கும் இணையதளங்கள் என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இணையம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ச்சி அடைவதால் தான் இணைய தளங்கள் அதிக அளவில் உருவாகின்றன.
இன்று சிறிய பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரும் பொதுவான பிரச்சினை கண்களின் பார்வை குறைபாடு. முக்கியமாக கணணி உபயோகிப்பவர்களுக்கு இந்த பிரச்சினை உள்ளது.

இதனால் நாம் மருத்துவரை அணுகி அதற்க்கான ஆலோசனைகளை கேட்டு அதன்படி கண்ணாடி அணிந்து கொள்கிறோம். நம்முடைய கண்களின் பார்வை திறன் எவ்வாறு உள்ளது என ஓன்லைனில் சுலபமாக மற்றும் இலவசமாகவும் பரிசோதிக்கலாம்.

இதற்கு கீழே உள்ள வழிமுறைகளை கடைபிடிக்கவும்.

1. உங்கள் கணணி திரையின் அளவு 15" 17" 19" இவற்றில் ஏதேனும் ஒரு அளவில் இருக்க வேண்டும்.

2. உங்கள் கணணியில் Flash Player நிறுவச் செய்திருக்க வேண்டும்.

3. அடுத்து இந்த தளத்திற்கு Online Eye test  செல்லுங்கள். அந்த தளத்தில் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

4. அந்த தளத்தின் கீழ பகுதிக்கு சென்றால் ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதன் மீது கிளிக் செய்யுங்கள்.

5. அடுத்து உங்கள் கணணி திரையின் அளவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

6. உங்கள் கணணி திரைக்கும் உங்கள் கண்களுக்கும் 3 அடி இடைவெளி விட்டு அமர்ந்து கொள்ளவும்.

7. அடுத்து உங்கள் சோதனை ரெடியாகும். உங்களுக்கு வரும் எழுத்துக்களை உங்களால் படிக்க முடிகிறதா என பார்த்து படிக்க முடிந்தால் Next கிளிக் செய்து அனைத்து நிலைகளையும் படித்து விடுங்கள்.

8. ஒருவேளை உங்களால் ஏதேனும் நிலையில் உள்ள எழுத்துக்களை படிக்க முடியவில்லை என்றால் Stop என்பதை அழுத்தி விடவும். நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த சோதனை 100% துல்லியமானது அல்ல. கண்களில் திறனில் ஏதேனும் பிரச்சினை இருப்பது போல உணர்ந்தால் உடனே நீங்கள் மருத்துவரை அணுகுவதே மிகச் சிறந்தது.

Monday, July 4, 2011

கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்...

கணிதம் என்றாலே வேப்பங்காயாக கசக்கிறதா, கவலை வேண்டாம் புதிய பரிமாணத்தில் கணிதத்தில் உங்களை திறமைசாலிகளாக மாற்ற வருகிறார்கள் இணைய கணணி ஆசிரியர்கள்.
சாதாரண பெருக்கல் கூட நமக்கு வராது என்று சொல்லும் நபர்கள் முதல் கணக்கு என்றாலே அலர்ஜி அதுவும் கூட்டல் என்றால் கூட நமக்கு கால்குலேட்டர் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

பள்ளியில் எனக்கு அறிவியல் நன்றாக வரும், ஆனால் கணக்கு மட்டும் சரியாக வராது என்று மாணவர் கூறினால் அறிவியல் சொல்லி கொடுக்கும் ஆசிரியர் திறமையை மட்டும் கொண்டு சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்காது.

சற்று வேடிக்கையாக கூறினால் எல்லா மாணவர்களும் எளிதில் புரிந்து கொள்வார்கள். இதைப்போல் தான் கணித்ததை வேடிக்கையாக மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கிறது இத்தளம்.

இங்கு சென்று சாதாரண பெருக்கல் கூட வித்தியாசமாக செய்ய சொல்லி கொடுக்கின்றனர். இயற்கணிதம்(Algebra), வடிவியல்(Geometry) வரை அத்தனையையும் வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் அனிமேசனுடனும் சொல்லிக் கொடுக்கின்றனர்.

கணிதம் என்றால் அலர்ஜி என்று சொல்லும் நபர்கள் கூட இத்தளத்திற்கு சென்றால் கணிதத்தில் வல்லவர்களாகலாம் என்பது தான் இவர்கள் கொடுக்கும் தகவல்.

இணையதள முகவரி

Friday, June 24, 2011

முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை !

உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 32 மொழிகள் உள்ளது. கூகுள் இணையமானது சில குறிப்பிட்ட உலக மொழிகளை மொழிபெயர்ப்புச் செய்யும் கருவியை உருவாக்கி இருந்தது. உதாரணமாக ஆங்கிலத்தில் நாம் எழுதுவதுவதை கூகுள் கருவி உடனடியாக பிரெஞ்சு, டச், ஸ்பானிய என்று சுமார் 58 உலக மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யவல்லது. அதேபோல பிறமொழிகளையும் ஆங்கிலத்திற்கு மாற்றவல்லது. ஆனால் தற்போது நீங்கள் தமிழ் யூனிக்கோட்டில் அடிக்கும் சொல்லை அது ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பது மட்டுமல்லாது, பந்தியாக இருக்கும் வசனங்களையும் அது மாற்றுகிறது.

அதாவது தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கோ இல்லை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கோ இனி நாம் சுலபமாக மொழிபெயர்க்கலாம். ஆங்கில இணையம் ஒன்றில் நீங்கள் ஒரு செய்தியை வாசிக்கிறீர்கள், விளங்கவில்லை என்றால் அச் செய்தியை அப்படியே காப்பி பண்ணி கூகுள் மொழிபெயர்ப்பில் இட்டால் உடனடியாக அது அதனை தமிழுக்கு மாற்றிக் காட்டுகிறது. இருப்பினும் தற்போது கூகுள் இதனை ஒரு பரீட்சாத்தமகவே விட்டுள்ளது. பல லட்சம் தமிழர்கள் இதனைப் பாவிக்க ஆரம்பிக்கும்போது, சில ஆங்கிலச் சொற்களுக்கும், சில தமிழ் சொற்களுக்கு சரியான அர்த்தங்களை அவர்கள் எழுதுவார்கள். அதை திருத்தும் வசதிகளும் இருக்கிறது. திருத்தப்படும் வசனங்களும் சொற்களும் நாளடைவில் பெருகி ஒரு நேர்த்தியை அல்லது முழுமையைப் பெறும்.

திருத்தும் வசனங்களும் சொற்களும் சேமிக்கப்படுவதால், இன்னும் சில காலத்தில் கூகுள் தமிழ் மொழிபெயர்ப்பு பூரணமன நிலைபெற்ற கருவியாக உருமாற உள்ளது. அதற்கு நீங்களும் உதவலாம். உதாரணமாக ஈழத் தமிழர்கள் பாவிக்கும் பல சொற்களுக்கு அங்கே அர்த்தம் கிடையாது. கூடுதலாக தமிழ் நாட்டில் இருப்பவர்கள் தாம் வழக்கமாகப் பாவிக்கும் சொற்களை இடுகைசெய்கின்றனர். எனவே பண்டைய தமிழ் மாறாது.. பிறமொழிக் கலப்புகள் இல்லாத ஈழத் தமிழர்கள் தமது சொற்களை இட்டு அதற்கான அர்த்தத்தை கூகுள் கருவியில் சேமிக்கவேண்டும் என மனிதன் இணையம் வேண்டி நிற்கிறது. உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் இருந்தாலும் கூகுளானது 63 மொழிகளையே பாவனையில் வைத்துள்ளது.

அதில் தமிழும் அடங்கும் என்பது பெருமைக்குரிய விடையமாகும். தமிழீழத்துக்காகப் போராடும் நாம்.. தமிழுக்காவும் போராடவேண்டும். எமது மொழிபோல உலகில் வேறு எந்த மொழியும் கிடையாது என்பதே உண்மையாகும் !

GO TO GOOGLE PAGE CLICK

கைமாற்றாக அவ்வளவு பெரிய தொகையா????



கலைஞர் "டிவி' இயக்குனர் சரத்குமார், பங்குதாரர் கனிமொழி ஆகியோரை, ஸ்பெக்ட்ரம் வழக்கில், சி.பி.ஐ., சேர்த்திருப்பது முற்றிலும் தவறு. "டிவி' நிறுவனம் கடன் வாங்கியது, வியாபாரம் சம்பந்தப்பட்டதே தவிர, அரசு ஒதுக்கீடு செய்த, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடையதல்ல என, கட்சியின் உயர்மட்ட செயற்குழு கூறியுள்ளது. தன் கட்சி அமைச்சரின், தொலை தொடர்புத் துறையிடம் உரிமம் வாங்க வந்தவரிடம், எதற்காக கடன் வாங்க வேண்டும்? அதுவும், ஈடு சொத்து ஏதும் இல்லாமல், கைமாற்றுக் கடனாக அவ்வளவு பெரிய தொகையை எதற்காக பெற வேண்டும்? உரிமம் வாங்க வந்தவரிடம், ஈடு சொத்து ஏதும் இல்லாமல் கடனாக வாங்கியதால் தானே, "அது கடன் இல்லை; லஞ்சம்' என சி.பி.ஐ., கூறுகிறது. "விஞ்ஞானப் பூர்வமா எதையும் செய்வீங்க'ன்னு, சர்க்காரியா கமிஷனே சொல்லியிருக்கிறதே. பின் எப்படி இப்படி மாட்டிக்கிட்டீங்க... "நேரம் சரியில்லை' எனச் சொல்வது இதுதானோ! இல்லையென்றால், "பெரிய கோவிலுக்குள் போனால், ஆட்சி பறிபோய் விடும் எனச் சொல்வதெல்லாம் மூட நம்பிக்கை' என்று சொல்லி, அங்கு போகாமல் இருந்த நீங்கள், பட்டு வேட்டி கட்டி, சைடு வழியிலே நுழைவீங்களா! நீங்க மூடநம்பிக்கைன்னு சொன்னாலும், அது என்னவோ பலிச்சிடுச்சே! சென்னைக்கு வரும்போது, தன்னை மரியாதை நிமித்தம் சந்திக்க வில்லை என்று, ராகுல் மேல உங்களுக்கு கோபம் இருந்தது போல, பெருவுடையாருக்கும் இருந்திருக்குமோ?


                              நன்றி - தினமலர்.

Wednesday, June 15, 2011

கணணியில் அனைத்து வகையான கோப்புகளையும் ஓபன் செய்வதற்கு...

நம்முடைய கணணியில் ஒரு சில கோப்புக்களை ஓபன் செய்ய முடியாது. ஒரு குறிப்பிட்ட கோப்புக்களை மட்டுமே ஓபன் செய்ய முடியும்.

சில போர்மட் கோப்புக்களை ஓபன் செய்ய வேண்டுமானால் அதற்கான மென்பொருள் கட்டாயம் நம் கணணியில் இருந்தால் மட்டுமே நாம் அதை திறக்க முடியும்.

இதற்காக நாம் ஒவ்வொரு கோப்புக்களை ஓபன் செய்வதற்கும் அந்தந்த மென்பொருள் இணைப்பது தேவையில்லாத வேலை. இதனை போக்கவே ஒரு ஒரு அருமையான இலவச மென்பொருள் உள்ளது.

மென்பொருளின் பயன்கள்:

1. இந்த மென்பொருள் மூலம் 70+ வகை கோப்புக்களை சுலபமாக ஓபன் செய்து கொள்ளலாம்.

2. .vcf , .srt, .sql போன்ற அறிய வகை கோப்புக்களையும் இதில் ஓபன் செய்து கொள்ளலாம். டோரென்ட் கோப்புக்களையும் இதன் மூலம் ஓபன் செய்ய முடியும்.

3. இதன் மூலம் பிடிஎப் கோப்புக்களை பிரிண்ட் எடுக்கவும் முடியும்.

4. .zip, .rar வகை பைல்களை Extract செய்யும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது.

5. மைக்ரோசாப்டின் வேர்ட் கோப்புக்களையும், பவர் பாய்ன்ட் கோப்புக்களையும் கூட இந்த மென்பொருள் மூல ஓபன் செய்து கொள்ளலாம்.

6. இந்த மென்பொருள் மூலம் இந்த வகை கோப்புக்களை ஓபன் செய்து பார்க்க மட்டும் தான் முடியும். இதில் எந்த மாற்றங்களும் செய்ய முடியாது.

தரவிறக்க சுட்டி

Microsoft Download Manager: மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள்...

இணையத்திலிருந்து கோப்புகளை, படங்களை என எல்லாவற்றையும் தரவிறக்க உலவியில் வழக்கமாக இருக்கும் வசதி மூலம் தரவிறக்குவோம். இல்லையெனில் தனியாக தரவிறக்க மென்பொருளின் மூலம் தரவிறக்கலாம்.

இணையத்தில் பல தரவிறக்க மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கின்றன. தற்போது மைக்ரோசாப்டும் இலவச தரவிறக்க மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது புதிய மென்பொருள் அல்ல. முன்னரே அறிமுகப்படுத்தி பிரபலமாகாத இந்த மென்பொருளை தூசு தட்டி எடுத்து சில வசதிகளைச் சேர்த்து வழங்கியுள்ளது.

Microsoft Download Manager என்ற இந்த மென்பொருள் இணையத்திலிருந்து கோப்புகளைத் தரவிறக்க உதவுகிறது. இதன் மூலம் எளிமையாகவும் விரைவாகவும் அதிக அமைப்புகளை மேற்கொள்ளாமலும் தரவிறக்கலாம்.

மேலும் தரவிறக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் முடியும்(Pause downloading) பிறகு தேவைப்படுகிற போது மறுதொடக்கம்(Resume) செய்கிற வசதியும் இருக்கிறது.

இதில் எளிமையாக தரவிறக்கத்தை மேற்கொள்ள New Download என்பதைக் கொடுத்து கோப்புகளின் இணைய முகவரியை கொப்பி செய்து இட்டால் போதுமானது. பல கோப்புகளை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்யும் Batch Downloading வசதியும் தரப்பட்டுள்ளது.

எங்கே சேமிக்கப்பட வேண்டும் என்பதை Settings இல் ஒரு தடவை அமைத்து விட்டால் போதுமானது. இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்குதள அனைத்து பதிப்புகளிலும் செயல்படும்.

தரவிறக்க சுட்டி

Tuesday, June 14, 2011

சனல் 4 வீடியோ: அதிர்ச்சிக் காணொளியின் ஒரு பகுதி !


http://youtu.be/FFL-0FaXQR8
பெரும் சிரமங்களுக்கு மத்தியில் உலகத் தமிழர் பேரவை(GTF) இந்தக் காணொளிகளை இலங்கைக்கு வெளியே கொண்டுவந்து அதனை சனல் 4 தொலைக்காட்சிக்கு கொடுத்துள்ளனர். அவர்களின் தன்னலமற்ற சேவையினை பாராட்டாமல் இருக்கமுடியாது !
ஒரு போரில் கைதாகும் போராளிகளையும் சரி, காயப்பட்ட எந்தவொரு இராணுவ வீரராக இருந்தாலும் சரி அவர்களை மரியாதையுடன் நடத்துவதோடு அவர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளையும் காலந்தாழ்த்தாது வழங்க வேண்டும் என்பதையே சர்வதேசச் சட்டமும் ஜெனீவா பிரகடனமும் வலியுறுத்துகிறது. ஆனால் இலங்கை இராணுவத்தினர் இவ்விதிகளை மீறியுள்ளதோடு, இறந்த மற்றும் காயப்பட்ட போராளிகளின் உடல்களை அவதூறு செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கைக்கு தக்க மேற்கோளாக இந்த வீடியோவும் அமைகிறது.
கற்பழிப்பும், பாலியல் வன்முறையும்
இறுதிக்கட்டப் போரின்போதும் அதற்குப் பின்னரும் தமிழ்ப் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கற்பழிப்பும் பாலியல் வன்முறையும் பெரியளவில் அறிக்கைகளில் உள்ளடக்கப்படவில்லை. இதுபோன்ற குற்றச் செயல்கள் தமக்கு நேர்ந்ததை தமது உறவினர்களுக்குக் கூடத் தெரிவிக்க முடியாதபடி மக்களின் கலாச்சாரம் மற்றும் தமது பெயருக்கு களங்கம் ஏற்படும் என்ற பய உணர்வு ஆகியவை பாதிக்கப்பட்டவரைத் தடுத்துவிட்டன. ஆனால் ஏராளமான தமிழ்ப் பெண்களின் கற்பு அரச படைகளாலும் அவர்களுடன் சார்ந்திருக்கும் தமிழ் ஒட்டுக்குழுக்களாலும் சூறையாடப்பட்டன என்பதற்கு மறைமுக ஆதாரங்கள் பல உள்ளன.
புகைப்படங்கள் மற்றும் வீடியோ கிளிப்புகள், குறிப்பாக சனல் 4 வெளியிட்டுள்ள வீடியோ ஆகியவை, இறந்த தமிழ்ப் போராளிகளின் உடல்கள் நிர்வாணமாக அல்லது மேலாடைகள் அகற்றப்பட்டு அவர்களின் அந்தரங்க உறுப்புகள் வெளிக்காட்டப்பட்டபடி இருப்பதைக் காட்டுவதோடு, அவ்வுடல்களைப் பார்த்து இராணுவத்தினர் பேசும் நக்கல் பேச்சுக்களில் இருந்து அவர்கள் அவ்வுடல்களைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியமையும் தெள்ளத் தெளிவாகிறது. ஒரு காட்சியில், நிர்வாணமான பெண்களில் உடல்கள் பலவற்றை இராணுவச் சிப்பாய்கள் ட்ரக் ஒன்றில் தூக்கி எறியும் காட்சியும், அதில் ஒரு பெண்ணின் காலின்மீது ஏறி மிதிப்பதையும், அப்பெண் அசைவதையும் கூடக் காணக்கூடியதாக உள்ளது.
தடுப்பு முகாம்களிலுள்ள போராளிகளைக் கற்பழித்ததற்கான சான்றுகளும், இடைத்தங்கல் முகாம்களிலுள்ள பெண்களைக் கற்பழித்ததற்கான சான்றுகளும் கூட சில சர்வதேச அமைப்புகளால் வெளிவிடப்பட்டுள்ளன. ஆனால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நேர்ந்த இக்கொடூரங்களை அவர்கள் போலீசிடமோ வேறு நிறுவனங்களிடமோ முறையிடக் கூடாது என்று இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்டும் உள்ளனர்.
7.27 நிமிடங்களுக்கு ஓடும் ஒரு முழு வீடியோ சர்வதேச ஊடகங்களுக்கு ஐ.நா நிபுணர் குழுவுக்கும் உலகத் தமிழர் பேரவையால் வெளியிடப்பட்டது. இவ்வீடியோ ஹெட்லைன்ஸ் நியூஸ் ரி.வி (இந்தியா ருடேயின் ஒரு பகுதி) இல் அண்மையில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது. இவ்வீடியோவே தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தனது பதவியேற்பின் முதலாவது உரையில், இலங்கை அதிபர் ராஜபக்�ஷவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தக் காரணமாக அமைந்தது.
இன்று வெளியாகும் வீடியோவில் இலங்கை இராணுவத்தினர் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் அடிக்கும் நக்கல் பேச்சுக்களும் கருத்துக்களும் வீடியோவில் காட்டப்படும் நேரத்துடன் சேர்த்துக் கீழே தரப்பட்டுள்ளன.
0:04 முதலாவது உடல் தலையில் பெரும் காயத்துடன் கிடக்கிறது.
0:15 � 0:25 இரண்டாவது உடல் ஆடை கழுத்தில் சுற்றியவாறு காணப்படுகிறது. கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டார்?
0:42 மூன்றாவது உடல் காட்டப்படுகிறது.
1:10 நாலாவது உடல் காட்டப்படுகிறது, ஒரு ட்ரக்ரர் அங்குள்ளது.
1:25 ட்ரக்ரரில் ஏற்றப்படுவதற்காக உடல் இழுத்துச் செல்லப்படுகிறது.
1:30 �உயர்த்து, உயர்த்து, போடு�.
1:48 ஐந்தாவது உடல் காட்டப்படுகிறது, அந்தரங்க உறுப்புகள் வெளிக்காட்டப்பட்டுள்ளது.
2:09 �கமெரா�, அவளின் சரக்கை வீடியோ எடுப்பதற்கு கமெரா சரியான சின்னதாக இருக்கிறது.�
2:19 �இதுதான் சரக்கு�; �ஒரு ஆணுக்கு சேவையாற்றுவதை விட்டுவிட்டு இப்படி தனது வாழ்க்கையை முடிக்கிறாளே.�; �அவள் ஒரு தலைவி.�
2:29 �அவள் கடுமையாகச் சுடப்பட்டிருக்கிறாள்.�
2:58 � 3:11 ஏராளமான சிப்பாய்கள் கிட்ட வருகிறார்கள், சில முகங்கள் பார்க்கக்கூடியதாக உள்ளன.
3:13 �குமார், வா, குமார் வா!�
3:25 ஒரு உடல் ஏற்கனவே ட்ரக்ரரில் பார்க்கக்கூடியதாக உள்ளது.
3:37 � 3:53 இன்னொரு நிர்வாண உடல் இழுத்து வரப்பட்டு, உயர்த்தப்பட்டு, பலத்த சத்தத்துடன் ட்ரக்ரரில் எறியப்படுகிறது.
3:57 �அவள் சயனைட் சாப்பிட்டு விட்டாள்.�
4:07 � 4:14 இன்னொரு உடல் எறியப்படுகிறது.
�அதைக் கொண்டு வா.�; �அவள் இப்போது வேதனையில் முனகுகிறாள்.�
4:20 இன்னொன்றை ஏற்றத் தொடங்குகிறார்கள்.
4:22 �அதைக் காலில் பிடித்து இழு.�
4:30 நிர்வாண உடல் பற்றிக் கருத்துக் கூறுகிறார்கள்: �அதைக் கொண்டுவா. இது ஒரு நல்ல உடல்.�
4:55 இன்னொரு உடல் இழுத்து வரப்படுகிறது.
5:27 � 5:55 �தலையில் சுடு�; �நல்லதொரு வேலை செய்ய வந்திருந்தாள்.� ; �அவளின் தலை விழத்தக்கமாதிரி சுட்டு நொருக்கினேன்�; �செத்திட்டாள்�;
�அவள் முனகுகிறாள்.�; �உடம்பு சூடாக இருக்கிறது.�; �உடம்பு இப்போதும் அசைகிறது.�
[சுடப்பட்டவர் இறந்துவிட்டாரா இல்லையா என்பது குறித்து அவர்கள் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பதை இது காட்டுகிறது].
5:40 � 5:50 பின்னணியில் ஏராளமான சூட்டுச் சத்தங்கள் கேட்கின்றன.
6:02 �போய், ரோட்டில் இருப்பவையை ஏற்றுவோம்.�
�நாலும் பெண்கள்.�
6:20 �இந்த உடலின் விரல்களைக் காணவில்லை.�
6:36 � 6:45 இன்னொரு உடல் இழுத்து வரப்படுகிறது.
6:45 � 7:00 உடல் ஏற்றப்படுகிறது.
�ஜீன்ஸைக் கழற்றிவிட்டு அதை இந்தப் பக்கமாகத் திருப்பு�
�அவர்கள் கட்டித்தழுவ விடு�
�அப்படி இருக்குமாறு வை.�
7:07 � 7:15 உடலைக் கீழே போடுகின்றபோது, கை அசைவது தெரிகிறது. அப்பெண்ணின் தொடையில் ஒரு சிப்பாய் கடுமையாக ஏறி மிதிக்கிறார்.
7:20 �குமார், போய் அதை இழு.�; �அங்கே இன்னும் ஒன்று இருக்கிறது�; �மாமரத்துக்குக் கீழே நான்கு உள்ளது.�
�சாலையோரத்தில் ஒரு குவியல் இருக்கிறது.� [ஒரு நபர் �சேர்� என அழைக்கப்படுகிறார், எனவே இராணுவ அதிகாரி ஒருவரும் அங்கிருந்தார் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது].
7:27 முடிவு

Sunday, June 5, 2011

MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு...

பெரும்பாலும் ஓடியோ கோப்புக்கள் MP3 வடிவிலேயே தற்போது அனைவராலும் உபயோகப்படுத்தப்படுகிறது.

நம்மிடம் சில MP3 ஓடியோ கோப்புக்கள் தரம் குறைந்து இருக்கும். அந்த வகை கோப்பை இயக்கும் போது சத்தம் குறைவாக கேட்பதுடன் கேட்பதற்கு ஸ்டீரியோ வசதி இன்றி(சற்று தொங்கலாக இருக்கும். பழைய சினிமா பாடல்களை கூட ஸ்டீரியோ இசையுடன் மாற்றி கேட்டு மகிழலாம் மற்றும் நமக்கு தேவையான மாற்றம் செய்து கொள்ளலாம்.

1. முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

2. தற்பொழுது உங்களுக்கு வரும் Zip கோப்பை Extract செய்து கொள்ளுங்கள்.

3. இப்பொழுது வரும் MP3 Quality Modifier என்ற கோப்பை ஓபன் செய்து கொள்ளவும்.

4. இந்த மென்பொருளை நாம் கணணியில் நிறுவச் செய்ய வேண்டியதில்லை. நேரடியாக இயக்கலாம்.

5. பின் தோன்றும் விண்டோவில் உங்கள் விருப்பம் போல மாற்றம் செய்ய வேண்டிய கோப்பை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

6. தேர்வு செய்த கொண்டவுடன் கீழே உள்ள வசதிகளை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து கொள்ளுங்கள்.

7. உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து கொண்டு மேலே உள்ள Process என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களுடைய MP3 கோப்புக்கள் புதிய தரத்துடன் உருவாகும்.

8. பின் தோன்றும் விண்டோவில் உங்களின் பழைய கோப்பின் அளவும் மாற்றம் செய்த கோப்பின் அளவும் மற்றும் எதனை சதவீதம் மாற்றம் செய்துள்ளது என்ற தகவல்களும் வரும்.

தரவிறக்க சுட்டி

Thursday, June 2, 2011

அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் இணையம் !!!

ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது எளிதான காரியம் இல்லை என்றாலும் கூகுள் போன்ற தளங்கள் பதில் அளித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

ஆனால் ஒரு தளம் கேள்விகளுக்கு பதிலை நேரடியாக தன்னுடைய தளத்திலே அளிக்கிறது. கணக்கு அளவீடு முதல் உள்ளூர் தகவல் வரை கணணி மூலம் செயற்கைகோள் வரை அனைத்து கேள்விகளுக்கும் ஒரே இடத்தில் இருந்து பதில் அளிக்கிறது.

கணக்கு செய்ய வேண்டும் என்றால் ஒரு தளம், மேப் பார்ப்பதற்கு மற்றொரு தளம், அறிவியல் தகவல் அறிந்து கொள்ள மற்றும் ஒரு தளம், மருத்துவ தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் மற்றும் ஒரு தளம்.

இப்படி ஒவ்வொரு தளமாக சென்று தான் இதுவரை நாம் தகவல்களை அறிந்து கொண்டிருந்தோம். இனி ஒரே தளத்தில் இருந்து அத்தனைக்கும் பதில் கொடுப்பதற்காக ஒரு தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தளத்திற்கு சென்று கட்டத்திற்குள் ஒரு கணக்கு கொடுத்தால் உடனடியாக அதற்கான விடையும், ஒரு நாட்டைப்பற்றி கேட்டால் அந்த நாட்டின் மக்கள் தொகை என்ன எந்த மொழி பேசுபவர்கள் அதிகமாக வசிக்கின்றனர் என்பதையும், செயற்கைகோள் பற்றி கேட்டால் அதற்கான புள்ளி விபரங்களுடனும் தகவல்களை கொடுக்கின்றது.

ஒரு மருந்தைப் பற்றி கேட்டால் அதற்கான முழுவிபரமும், குறிப்பிட்டை ஊரைப்பற்றி கேட்டால் அந்த ஊரின் செயற்கைகோள் படமும், பிரபலமானவர்களைப்பற்றி கேட்டால் அவர்கள் படம், பிறந்த இடம் மற்றும் பல தகவல்கள் இப்படி பல சேவைகளை சத்தமே இல்லாமல் செய்கிறது இத்தளம்.

இணையதள முகவரி...

Wednesday, April 27, 2011

Tamil political comedy (kalaignar)

Thursday, April 7, 2011

நீங்கள் விமானத்தில் பறக்கும் போது தரையில் நடக்கும் சுவாரஸ்யங்கள் -2

ஒவ்வொரு விமானத்திற்கும் தனக்கென பிரத்யேகமாக அழைப்புக் குறியீடு (Call Sign - உ.தா. BAW10H) இருக்கும். இந்த அழைப்புக் குறியீடு, தான் தரையிறங்க வேண்டிய இடம், அவசர கால குறியீட்டு எண்கள் போன்றவற்றை வானலைகள் மூலம் ஒலிபரப்பி விமான நிலையத்தின் ரேடாருக்கு அனுப்பும் வேலையைச் செய்வது ACARS Aeronautic Communications and Reporting System. இதன் மூலம் தான் ஒரே விமானத்தை ஒவ்வொரு சுற்றிலும் மீண்டும் மீண்டும் பார்க்கும் போது ரேடார் அடையாளம் கண்டுகொள்கிறது.

நீங்கள் விமானத்தில் பறக்கும் போது தரையில் நடக்கும் சுவாரஸ்யங்கள் - 1


நீங்கள் ஓவ்வொரு முறை விமானத்தில் பயணிக்கும் போதும், உங்கள் பயணத்தின் பாதுகாப்புக்காக தரையில் பல நூறு பேர் அதீத கவனத்துடன் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் அன்றாட பணியில் ஒவ்வொரு நிமிடமும் கவனம் தப்பினால் மரணம் தான், இங்கு மரணம் என்பது பிரயாணிகளுக்கு. ஒவ்வொரு விமானத்தின் பாதுகாப்பான மேலெழும்புதலுக்கும், தரையிறங்குதலுக்கும் பின்னணியில் இவர்களின் உழைப்பிருக்கிறது. யார் அவர்கள், எப்படி இயங்குகிறார்கள், என்னென்ன கருவிகளை உபயோகிக்கிறார்கள், அவற்றின் தொழில்நுட்பம் முதலியவை குறித்து ஒரு பார்வை தான் இப்பதிவு.

Monday, April 4, 2011

உலக கோப்பை கிரிக்கெட் உச்சகட்ட உற்சாகம்...

Thursday, March 31, 2011

வினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம்...

உங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை
வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்துமே பளிச் பளிச் என்றுதான் இருக்கும்.

பித்தளைச் சாமான்கள் பளிச்சிட

Wednesday, March 16, 2011

உலக அணுவாயுதக் கையிருப்பை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்த ஜப்பான் பூமியதிர்ச்சி


ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியானது உலக நாடுகள் அனைத்தினதும் அணு ஆயுதங்களை விட 1000 மடங்கு சக்தியினை வெளியிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.


மேலும் அவ்வதிர்ச்சியானது 6.7 டிரில்லியன் தொன்கள் டி.என்.டி வெடிபொருட்களின் சக்திக்கு சமனானதெனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

டி.என்.டி எனப்படுவது Trinitrotoluene என்பதன் சுருக்கமாகும். இது ஒருவகை வெடிக்கக்கூடிய இரசாயன பொருளாகும்.

பொதுவாக கடல் அடியில் ஏற்படும் புவி அதிர்வானது சாதாரண நில அதிர்வினை விட பல மடங்கு சக்தி வாய்ந்ததாகும்.

உலகில் ஏற்படும் நில நடுக்கங்களில் 20 வீதமானவை ஜப்பானிலேயே இடம்பெறுகின்றன.

இவற்றில் அதிகமானவை 6 ரிச்டர்களுக்கும் அதிகமாகும்.

புவியியலாளர்களின் கருத்தின்படி பூமியின் பல கண்டங்களினதும் மற்றும் சமுத்திரங்களினதும் தட்டுக்கள் உதாரணமாக பசுபிக் தட்டு, பிலிப்பைன் தட்டு, யூரோ ஏசிய தட்டு, வட அமெரிக்க தட்டு ஆகியன ஜப்பானிய பகுதியிலேயே சந்திக்கின்றன.

இதன் காரணமாகவே அங்கு பல எரிமலைகள் மற்றும் வெந்நீர் ஊற்றுக்கள் எனபன அமைந்துள்ளன.

மேலும் ஜப்பான் பசிபிக் எரிமலை வலையம் எனப்படும் உலகின் அதிகமான நிலநடுக்கங்கள் எரிமலை கொந்தளிப்புக்கள் இடம்பெறும் பகுதியிலேயே அமையப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதொரு காரணியாகும்.

Sunday, March 6, 2011

உண்மையான மகிழ்ச்சி...

* உங்கள் தவறுகளைப் பெரும்பேறாக


நினையுங்கள். அவை நம்மை அறியாமலே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகையில்லை.

* அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அறிகுறி. தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை. போராட்டம் இல்லாத வாழ்க்கை சுவையாக இருக்காது.

* தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத் தவிர யாராலும் உன்னை

மகிழ்விக்க முடியாது.

* கோபப்படும் மனிதனால் அதிக அளவோ அல்லது

செய்யும் பணியைச் சிறப்பாகவோ செய்ய முடியாமல் போய் விடும். ஆனால், அமைதியானவனோ சிறப்பாகப் பணியாற்றுவான்.

* மன்னிக்கக் கூடியதும், சமநோக்குடையதும், நிலை

தடுமாறாததுமான மனதை எவன் பெற்றிருக்கிறானோ அவனே ஆழ்ந்த அமைதியில் திளைத்திருப்பான்.

* கருணை என்பது சொர்க்கத்தைப் போன்றது. நாம்

அனைவரும் கருணையுள்ளவர்களாக மாறி

சொர்க்கத்தில் மகிழ்ந்திருப்போம்.

                                                                             -விவேகானந்தர்.

Saturday, March 5, 2011

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும் வெந்தயம்!!!

உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
1. இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து 200 மி.லி அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.

வாரம் ஒருமுறை இது போன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் வராது.

2. இது தவிர உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு வாணலியில் போட்டு வறுத்து ஆற வைத்த பின் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.

வெந்தயத்துடன் சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.

மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர் அல்லது மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.

3. வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடி செய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

4. மூட்டு வலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால் வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.

5. எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும் வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க சுவை கூடுவதுடன் உடல் உபாதைகளையும் போக்கும்.

6. மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால் நீரிழிவு, வயிற்றுப்புண் மற்றும் வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

7. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது.

Wednesday, March 2, 2011

பெரிய பைலைப் பிரித்துப் பின் இணைக்க...

பைல் ஒன்றை, இன்னொரு இடத்திற்கு அல்லது வேறு ஒரு கம்ப்யூட்டருக்குக் கொண்டு செல்ல திட்டமிடுகிறீர்கள். ஆனால் அது அளவில் மிகவும் பெரியதாக இருப்பதால், பிளாஷ் ட்ரைவ் அல்லது வேறு மெமரி சாதனங்களில் பதிய இயலவில்லை. அந்த வேளையில், பைலைப் பிரித்துப் பின் அவற்றை இன்னொரு கம்ப்யூட்டருக்கு ஒவ்வொன்றாகக் கொண்டு சென்று பதியலாம். அனைத்து பிரிவுகளும் பதியப்பட்ட பின்,மீண்டும் அதனை ஒரு பைலாக இணைக்கலாம். இதற்கு உதவிடும் புரோகிராமின் பெயர் HJSplit. இந்த புரோகிராம் இணையத்தில் இலவசமாக டவுண்லோட் செய்திடக் கிடைக்கிறது.


                                                                 
இந்த புரோகிராம் பைலின் அளவு 100 ஜிபி க்கும் மேலாக இருந்தால் கூட அதனைப் பிரித்துப் பின் இணைக்கிறது. இதனை நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவை இல்லை. இணையத்தில் கிடைக்கும் இதன் ஸிப் பைலை டவுண்லோட் செய்து, HJSplit.exe என்ற இந்த பைலை, கம்ப்யூட்டரில் உள்ள ட்ரைவில் பதிந்திடவும்.

இந்த எக்ஸிகியூடிவ் பைலின் மீது டபுள் கிளிக் செய்து இயக்குங்கள். இப்போது கிடைக்கும் Split பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்து கிடைக்கும் Input File என்ற பட்டனில் கிளிக் செய்திட வும். பின்னர், நாம் பிரிக்க விரும்பும் பைலைத் தேர்ந்தெடுக்க வசதி கிடைக்கும். பைலைத் தேர்ந்தெடுத்த பின்னர், Output என்ற பட்டனில் அழுத்தவும்.

அதன் பின்னர், எந்த ட்ரைவ் அல்லது போல்டரில், பிரிக்கப்படும் பைல்கள் சென்றடைய வேண்டும் என்பதைக் குறிப்பிடவும். பின்னர், இவை எந்த அளவில் பிரிக்கப்பட வேண்டும் அல்லது எத்தனை பைல்களாகப் பிரிக்கப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். அடுத்து Start பட்டனை அழுத்தவும்.

உடன் பைல் பிரிக்கும் வேலை மேற்கொள்ளப் படும். பைல் பிரிக்கப் படுவதனை, ஒரு பார் சட்டம் கீழாகக் காட்டும். நீங்கள் பிரிக்கும் பைலின் அளவைப் பொறுத்து இந்த பணி மேற்கொள்ளப்படும் காலம் அமையும். முடிவில், ஒரு சிறிய அறிவிப்பு தரப்படும். இதனை அடுத்து, நீங்கள் குறிப்பிட்ட ட்ரைவ் அல்லது போல்டரில், பிரிக்கப் பட்ட பைல் துண்டுகள் இருப்பதனைக் காணலாம். இந்த பைல்களுக்கான பெயரில் 001, 002 என இவை துணைப் பெயர்களைக் கொண்டிருப்பதனைக் காணலாம்.

பிரித்த பைல்களை இணைத்தல்: பிரித்த பைல்களை இணைப்பதுவும் எளிது. அவற்றை நீங்கள் கொண்டு செல்ல விரும்பும் கம்ப்யூட்டருக்குக் கொண்டு செல்லவும். மீண்டும் இதே HJSplit.exe பைலை இயக்கவும். File Join டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இப்போது Input File என்ற பட்டனில் அழுத்தவும். டயலாக் பாக்ஸில் 001 என்ற துணைப் பெயர் கொண்ட பைல் மட்டுமே காட்டப்படும். அந்த பைலைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ச்சியான மற்ற பைல்கள் தானாகத் தேர்ந்தெடுக்கப்படும். எனவே பிரிக்கப்பட்ட பைல்கள் அனைத்தும் ஒரே போல்டரில் இருக்கு மாறு வைத்திடவும். அடுத்து Output பட்டனை அழுத்தி இணைக்கப்படும் பெரிய பைல் எங்கு பதியப்பட வேண்டும் என்பதனைக் குறிப்பிடவும். இவற்றை எல்லாம் முடித்த பின்னர், Start பட்டனை அழுத்தவும். இப்போது இணைக்கும் வேலை தொடங்கும். மீண்டும் ஒரு ஸ்டேட்டஸ் பார் ஒன்று கீழாகக் காட்டப்பட்டு எந்த அளவில் பிரிக்கப்பட்ட பைல்கள் இணைக்கப்பட்டுள்ளன என்று காட்டப்படும். பைல் துண்டுகள் இணைக்கப்பட்டவுடன், வேலை முடிந்துவிட்டதற்கான அறிவிப்பு செய்தி காட்டப்படும்.

இதற்கான HJSplit என்ற அப்ளிகேஷன் பைலைப் பெற இங்கே கிளிக் செய்யவும் http://hjsplit.org/windows/ 

Monday, February 28, 2011

நமக்குத் தேவையான மூன்று...

*உன் உடலில் ஏற்பட்டுள்ள கறையைப் பற்றிக் கவலைப்படாதே. இறைவன் என்னும் கருணைக்கடலில் மூழ்கி எழுந்தால், அது இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.


*உங்களிடம் அன்பு இருந்தால் ஆகாத செயல் என்று எதுவுமில்லை. நீங்கள் தன்னலத்தை துறந்து விட்டால் உங்களை எதிர்க்கும் சக்தி ஏதுமில்லை.

*நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். அதனால், புனிதமும் பூரணத்துவமும் உங்களிடம் நிறைந்திருக்கிறது.

* அன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.

* ஒட்டகம் முள் செடியைச் சாப்பிடும் போது வாயிலிருந்து ரத்தம் சொட்டும், இருந்தாலும் தின்பதை

நிறுத்துவதில்லை. அதுபோல உலகத்தார் எத்தனையோ துன்பங்களுக்கு ஆளானாலும் உலகப்பற்றை அவர்கள் விடுவதில்லை.

* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.

                                                    -விவேகானந்தர்

Tuesday, January 18, 2011

மனம் தெளிந்த நீராகட்டும்...

* யாரிடமும் கோபம் கொண்டு, சண்டை போடாதீர்கள். சண்டையிட்டுக் கொண்டிருப்பதால் மனதில் நிம்மதி கெடுவதை தவிர, பயன் ஏதும் ஏற்படுவதில்லை. பண்பட்ட மனம் உடையவர்கள் யாரிடமும் சண்டையிடுவதில்லை. அவர்கள் கோபப்படும் விதமாக ஏதேனும் நிகழ்ந்தாலும்கூட அமைதியாக இருந்து விடுவர்.

* ஒருவர் உயர்கல்வி கற்றாலோ, சமூகத்தில் உயரிய பொறுப்பில் இருந்தாலோ அவரிடம் கோபப்படும் குணம் இருக்குமானால் அவர் கற்ற கல்வியும், சமூக நற்பெயரும் அந்த நொடியிலேயே அழிந்து விடும். சிறுவிஷயங்களுக்காக சண்டையிடுவது மரியாதையைக் குறைக்கிறது. இதனால் உறவு, அன்பு, பாசம் ஆகியவை அழிந்து, அனாதையாக நிற்கும் உணர்வு ஏற்படுகிறது.

* கோபம், மனதில் பல தீய எண்ணங்கள் தோன்றுவதற்கு காரணமாக இருக்கிறது. பொறாமை, வஞ்சகம், ஒழுக்கமின்மை போன்ற பல தீய குணங்களையும் உண்டாக்கி விடுகிறது. வீண் விபரீதங்களையும், பொருள் இழப்பையும் ஏற்படுத்துகிறது. எனவே, கோபத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.

* மனிதர்களின் மனம் தண்ணீர் போன்றது. கோபம், ஆற்றாமை போன்ற தீய குணங்கள் கழிவு போன்றவை. தண்ணீர் நல்ல நிலையில் இருக்கும்போது அதனை நம் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்தலாம். அதே நீரில், கழிவு சேர்ந்துவிட்டால் அதன் தன்மையே மாறிவிடுகிறது. எதற்கும் பயன்படுத்தவும் முடியாது. உங்கள் மனம் தெளிந்த நீரைப் போல இருப்பதற்கு முதலில் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

                                                            - அவ்வையார்

Monday, January 17, 2011

கவியரசு வைரமுத்துவின் 1000ம் பாடல் வெளீயீட்டு விழா.Part-2

கவியரசு வைரமுத்துவின் 1000ம் பாடல் வெளீயீட்டு விழா.