நாம் தேடுகின்ற இன்பத்தை ஒருக்காலும் வெளியில் பெற முடியாது. புத்தர் முதல் ரமணமகரிஷி வரை எத்தனையோ மகான்கள் நமக்குப் பலவிதங்களில் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் எல்லாம் உண்மையான இன்பத்தின் உச்சத்தை அனுபவித்தவர்கள். தாங்கள் பெற்ற அனுபவங்களையே, அறிவுரைகளாக நமக்கு வழங்கியுள்ளனர்.
தியானம், ஞானம் போன்ற விஷயங்கள் எல்லாம் ஞானமார்க்கத்தினர் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டும் என்று தவறாக நினைக்கிறோம். வாழ்க்கையை அனுபவிக்காமல் நழுவ விட்ட வயோதிகனை விட அணு, அணுவாக அனுபவிக்கத் துடிக்கும் வாலிபனுக்கே தியானம் அவசியம்.


No comments:
Post a Comment