நித்யானந்தன் போன்ற போலிகளின் குரல்களை எதிரொலித்துத் தமிழ் மணம் தன் மணத்தை இழக்க வேண்டா. பெண்ணின் விருப்பத்துடன்தான் உறவு கொண்டதாகக் கூறிச் சட்டச் சிக்கல் இல்லை என்னும் இவன் ஆசிரமத்திற்கு வரும் அப்பாவிப் பெண்களை ஏமாற்றித் தான் கண்ணனின் மறுபிறவி எனக் கூறி அவர்களைக் கோபியர்களாகக் கூறிக் கற்பபழித்தமையை மற்றொரு உண்மைச் சாமியார் விளக்கி இந்தப் போலியின் 2 1/2 மணி நேரப்படக்காட்சியையும் காவல்துறையிடம் வழங்கியுள்ளார். உடன் உள்ள நடிகையிடம் - அமைதி தேடி வந்தவரிடம் தான் கண்ணனின் மறுபிறப்பு என்று சொல்லி ஏமாற்றி மயக்கி விருப்பத்துடன் அவர் சேரும் வகையில் சூழலை உருவாக்கியுள்ளான். இவனைப் போன்ற ஆட்கள் களையெடுக்கப்பட்டால்தான் இந்து சமயம் பொலிவுறும். எனவே, விளக்கம் கேட்டெல்லாம் மயங்காமல் ஓட ஓட விரட்டி யடித்துச் சட்டத்தின் முன் நிறுத்திக் கம்பி எண்ண வைப்பதே நம்மவரின் கடமையாக இருக்க வேண்டும். போலிச் சாமியான் நித்யானநதன் பரத்தமைக்கு- விபச்சாரத் தொழிலுக்கு - உதவி புரிந்தவர்கள் மட்டுமே அவன்பக்கம் இருப்பர். அத்தகையோரை அவர்களது குடும்பத்தினர் கவனித்துக் கொள்ளட்டும்.உலகமகளிர் நாளை முன்னிட்டு நடிகையை மன்னிப்போம். நித்யானந்தனைத் தூக்கிலிடுவோம்.
கீதாசாரம்...
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய் ?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு ?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
" இதுவே உலக நியதியும், எனது படைப்பின் சாராம்சமாகும் ".
1 comment:
நித்யானந்தன் போன்ற போலிகளின் குரல்களை எதிரொலித்துத் தமிழ் மணம் தன் மணத்தை இழக்க வேண்டா. பெண்ணின் விருப்பத்துடன்தான் உறவு கொண்டதாகக் கூறிச் சட்டச் சிக்கல் இல்லை என்னும் இவன் ஆசிரமத்திற்கு வரும் அப்பாவிப் பெண்களை ஏமாற்றித் தான் கண்ணனின் மறுபிறவி எனக் கூறி அவர்களைக் கோபியர்களாகக் கூறிக் கற்பபழித்தமையை மற்றொரு உண்மைச் சாமியார் விளக்கி இந்தப் போலியின் 2 1/2 மணி நேரப்படக்காட்சியையும் காவல்துறையிடம் வழங்கியுள்ளார். உடன் உள்ள நடிகையிடம் - அமைதி தேடி வந்தவரிடம் தான் கண்ணனின் மறுபிறப்பு என்று சொல்லி ஏமாற்றி மயக்கி விருப்பத்துடன் அவர் சேரும் வகையில் சூழலை உருவாக்கியுள்ளான். இவனைப் போன்ற ஆட்கள் களையெடுக்கப்பட்டால்தான் இந்து சமயம் பொலிவுறும். எனவே, விளக்கம் கேட்டெல்லாம் மயங்காமல் ஓட ஓட விரட்டி யடித்துச் சட்டத்தின் முன் நிறுத்திக் கம்பி எண்ண வைப்பதே நம்மவரின் கடமையாக இருக்க வேண்டும். போலிச் சாமியான் நித்யானநதன் பரத்தமைக்கு- விபச்சாரத் தொழிலுக்கு - உதவி புரிந்தவர்கள் மட்டுமே அவன்பக்கம் இருப்பர். அத்தகையோரை அவர்களது குடும்பத்தினர் கவனித்துக் கொள்ளட்டும்.உலகமகளிர் நாளை முன்னிட்டு நடிகையை மன்னிப்போம். நித்யானந்தனைத் தூக்கிலிடுவோம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Post a Comment